Saturday, February 1, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (57)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!" 

 நாள் - 57

தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகம்........!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேதனை.......!!

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் பாமக சார்பில் மகளிர் மாநாடு நடந்தது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, புள்ளி விவரங்களின்படி இந்தியாவில், தமிழகத்தில்தான் 30 வயதுக்கும் குறைவான இளம் விதவைகள் அதிகம் உள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார்.

தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கியமாக மதுவே காரணம் என்றார் அவர்.

பாமக ஆட்சிக்கு வந்தால் சாராயம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் ராமதாஸ் உறுதி அளித்தார்.


இளைஞர்கள் மத்தியில் குடிக்க கூடாது என்ற உணர்வு மனதில் உதிக்க வேண்டும் என்றும், அவர்களிடம் மாற்றம் வந்தால்தான் நாட்டில் நன்மை பிறக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


தமிழகத்தில் உள்ள வாக்காளர்களில் 51 சதவிகிதம் பெண் வாக்காளர்கள் என்று குறிப்பிட்ட ராமதாஸ், பெண்கள் நினைத்தால் எதையும் செய்யலாம் என்றும், மதுவிற்கு எதிராக அவர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்களது வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
=====================

No comments: