Friday, May 22, 2015

வாழ்த்துக்கள்....!

அம்மாவுக்கு வாழ்த்துக்கள்....!

தமிழகத்தின் முதலமைச்சராக மீண்டும் இன்று பொறுப்பு ஏற்க இருக்கும் உங்களுக்கு எங்களது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.

பல்வேறு சோதனைகள்....

கடும் இன்னல்கள்....

எப்படியும் உங்களை வீழ்த்த வேண்டும் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சிகள்...

இதையெல்லாம் தாண்டி, பெரும் போராட்டத்திற்கு பிறகு, அரசியல் விரோதிகளை வீழ்த்தி 5வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக இன்று நீங்கள் பதவி ஏற்க இருப்பது உண்மையில் மிகப் பெரிய சாதனைதான்.

இந்த நல்ல நேரத்தில் ஒரே ஒரு வேண்டுகோள்.

தமிழத்தில் எப்படி லாட்டரி சீட்டு கலாச்சாரத்தை ஒழித்தீர்களோ, அதேபோன்று, மது என்ற அரக்கணை நீங்கள் வீழ்த்த வேண்டும்.

அதன்மூலம், தமிழக பெண்களின் கண்ணீரை துடைக்க வேண்டும்.

தமிழக இளைஞர்களின் வாழ்வை காப்பாற்ற வேண்டும்.

அதற்காக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் அறிவிப்பை இன்று நீங்கள் அறிவிக்க வேண்டும்.

இந்த துணிச்சலான முடிவை அறிவிக்கும் துணிவு உங்களிடம் மட்டுமே உண்டு.

எனவே, அம்மா அவர்களே, தமிழக மக்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கும் ஒரு நல்ல அறிவிப்பை இன்று நீங்கள் வெளியிடுங்கள்.

அதன்மூலம் வரலாற்றில் இடம் பெறுங்கள்.

முதலமைச்சராக பதவி ஏற்கும் உங்களுக்கு மீண்டும் எங்களது வாழ்த்துக்கள்.
உங்கள் பணி மேலும் சிறக்க வேண்டும்.

அதன்மூலம் தமிழகம் எல்லா துறைகளிலும் முன்னேற வேண்டும்.
வாழ்த்துக்கள்..!

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

No comments: