Wednesday, May 27, 2015

வை ராஜா வை....!

வை ராஜா வை....!

ஐஸ்வர்யா ஆர். தனுஷ் இயக்கத்தில் வந்திருக்கும் இந்த திரைப்படத்தில் நாட்டில் சூதாட்டம் எப்படி விறுவிறுப்பாக நடத்தப்படுகிறது என்பது அழகாக சொல்லப்பட்டுள்ளது.

கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடங்கி சர்வதேச அளவில் நடைபெறும் சூதாட்டம் வரை படத்தில் விறுவிறுப்பான காட்சிகளை வைத்துள்ளார் இயக்குநர்.

அதேநேரத்தில் படத்தின் நாயகன் கெளதம் கார்த்திக்கிற்கு எந்த ஒரு சம்பவம் குறித்தும் முன்பே அறிந்து கொள்ளும் அசாதாரண சக்தி இருப்பதாகவும் அதை பயன்படுத்தி சூதாட்டத்தில் அவர் எப்படி கோடிகளை சம்பாதிக்கிறார் பின்னர் எத்தகைய பிரச்சினைகளை சந்திக்கிறார் என்பதுதான் படத்தில் சொல்லப்பட்டு இருக்கும் மற்றொரு கருத்து.

ஒரு திரைப்படத்தை எப்படி எடுத்தால் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதை இயக்குநர் நன்கு அறிந்து காட்சிகளை நகர்த்துவதால் படத்தில் சலிப்பு ஏற்படுவதில்லை.

நடிகர் விவேக்கின் காமடி படத்திற்கு பலம் சேர்க்கிறது.

யுவன்சங்கர் ராஜாவின் இசை சுமார் ரகம்.

வை ராஜா வை ஒரு ஜாலியான பொழுதுபோக்கு திரைப்படம். அவ்வளவுதான்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: