Sunday, May 31, 2015

பள்ளிகள் திறப்பு....!

பள்ளிகள் திறப்பு....!

மாணவ செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்....!!

கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் இன்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன.

மகிழ்ச்சியுடன் மாணவ செல்வங்கள் மீண்டும் தங்களது பள்ளிகளுக்கு செல்ல இருக்கின்றனர்.

இந்த நல்ல தருணத்தில் இந்தியாவின் எதிர்காலமான மாணவ செல்வங்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

நல்ல கல்வி, நல்ல ஒழுக்கம், நல்ல அறிவு, நல்ல பண்பு, நல்ல சிந்தனை, நல்ல சகோதரத்துவ எண்ணம் ஆகிய அனைத்தும் இந்த கல்வி ஆண்டில் மாணவ செல்வங்களுக்கு கிடைக்க வேண்டும்.

அதன்மூலம் நாட்டில் அமைதி தழைக்க வேண்டும்.


வளர்ச்சியை நோக்கி நாடு முன்னேற வேண்டும்.

இதுவே எமது பிரார்த்தனைகள்.

வாழ்க மாணவ செல்வங்கள்.

அவர்களது பள்ளி பருவம் மகிழச்சியுடன் நடை போட மீண்டும் வாழ்த்துக்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: