Friday, May 8, 2015

நிலைக்குலைய வைத்த தொடர் மரணங்கள்...!

நிலைக்குலைய வைத்த தொடர் மரணங்கள்...!


வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரும் மரணத்தை சுவைக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி.

எனவே நாம் அனைவரும் மரணத்தை சந்திக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

ஆனால் என்னுடைய குடும்பத்தில் கடந்த 16 மாதங்களில் 5 பேர் இந்த உலகத்தை விட்டு பிரிந்தது என்னை மிகவும் நிலைக்குலைய வைத்து விட்டது.

மூத்த சகோதரி ஒருவர் மூத்த சகோதரர்கள் இரண்டு பேர் மூத்த சகோதரியின் கணவர் இளைய சகோதரியின் கணவர் என மொத்தம் ஐந்து பேர் கடந்த 16 மாதங்களில் அடுத்தடுத்து மரணத்தை சுவைத்து இந்த உலகத்தை விட்டு பிரிந்தது எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த துயரங்களில் இருந்து மீள நாங்கள் முயற்சி செய்தாலும் குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களின் இழப்பு அடிக்கடி கண் முன் வந்து சென்று எங்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது.

மன மற்றும் பொருள் ரீதியாக காலஞ்சென்ற என்னுடைய சொந்தங்கள் எனக்கு செய்த தியாகங்கள் மதிப்பிட முடியாதவை.

எனவே இவர்களின் மரணம் என்னை மனதளவில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது எனலாம்.

எனினும் இந்த துயரமான நேரங்களில் என் நண்பர்கள் ஊடக சொந்தங்கள் உறவினர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆறுதல் கூறி எனக்கு துணையாக நின்றது என்னால் மறக்க முடியாது.

இதன்மூலம் என்னுடைய சோகங்கள் மெல்ல மெல்ல கரைந்து வருகின்றன.

துயரமான நேரங்களில் எனக்கு ஆறுதல் கூறி துணை நின்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரத்தில் இறைவனிடம் ஓர் பிரார்த்தனை.

எங்கள் குடும்பத்தில் இனி சில ஆண்டுகளுக்கு மரணங்களை தள்ளி போட வேண்டும் என்பதுதான் அது.

என்னுடைய துஆவில் (பிரார்த்தனையில்) நீங்கள் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: