Saturday, April 25, 2015

சிதைக்கப்படும் உறவுகள் - 3

யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள்....!


(சிதைக்கப்படும் உறவுகள் - 3)

மொல்லமாரி கேப்மாரி நாதாரி பேமானி இப்படி எந்த வார்த்தைகளிலும் அந்த கேடு கெட்ட மனிதனை அழைக்கலாம்.

ஏன் உலகத்தில் புழக்கத்தில் இருக்கும் அத்தனை மொழிகளிலும் உள்ள பயன்படுத்தக் கூடாத கெட்ட வார்த்தைகளில் அந்த துரோகியை அழைப்பதில் தவறு இல்லை.

சிரிக்க சிரிக்க பேசி பலரின் மூளையை சலவை செய்து அவர்களின் முன்னேற்றத்தை தடுத்து இருக்கிறான் இந்த பாவி.

இந்த மதி கெட்ட மனிதனின் வலையில் வீழ்ந்து வீழ்ச்சியை சந்தித்தவர்களில் நானும் ஒருவன்.

தினமும் காலை நேரத்தில் செல்பேசியில் தொடர்பு கொண்டு ஒரு மணி நேரம் வரை எனக்கு நன்மை செய்வது போன்ற பாணியில் பேசுவான்.
அவனது அந்த பேச்சு என் மீது அந்த பொறம்போக்கிற்கு மிகப் பெரிய அக்கறை இருப்பதாக காட்டியது

அதனால்தான் அவனை முழுமையாக நம்பி விட்டேன்.

பின்னர்தான் எனக்கு அவனுடைய உண்மையான முகம் தெரிய வந்தது.

அதற்குள் என்னுடைய முன்னேற்றத்திற்கு வேட்டு வைக்கப்பட்டு விட்டது.

எல்லாம் அந்த துரோகியை உண்மையாக நம்பியதுதான் காரணம்.
எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இவன் சிரிக்க சிரிக்க பேசி அவர்களின் மூளையை சலவை செய்து அதன்மூலம் அவர்களது வளர்ச்சியை தடுத்து இருக்கிறான்.

இந்த தகவல் நண்பர் ஒருவர் மூலம் பின்னர்தான் எனக்கு தெரிய வந்தது.

எனவே நண்பர்களே உங்களிடம் சிரிக்க சிரிக்க பேசி உங்கள் மீது உண்மையாகவே அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்ளும் நபர்களிடம் கொஞ்சம் உஷாராக இருங்கள்.

குறிப்பாக ஊடகத்துறையில் இருக்கும் நண்பர்கள் அதே துறையில் உள்ள இதுபோன்ற நபர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

இல்லாவிட்டால் உங்களது வளர்ச்சி முன்னேற்றம் தடுக்கப்படும்.

ஏன் நல்ல வாய்ப்புகள் பின்னர் கிடைக்காமலேயே போய்விடும்.

அந்த பொறுக்கியை உண்மையாக நம்பியதால் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அனுபவம் இது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: