Thursday, April 30, 2015

அப்துல் பாசித்...!

அப்துல் பாசித்...!




நான் எழுதிய மற்றொரு நூல்.

வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினராக கடந்த 2006-2011 வரை இருந்து அப்துல் பாசித் சிறப்பாக பணியாற்றினார்.

ஆம்பூரை தலைமையகமாக கொண்டு தனித் தாலுகா கொண்டு வந்தது.

பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு இருந்த தடைகளை நீக்க சட்டப்பேரவையில் குரல் கொடுத்து அரசாணை கொண்டு வர முயற்சி செய்து வெற்றி பெற்றது.

ஆம்பூரில் 11கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தக மையத்தை கொண்டு வர முயற்சி செய்து வெற்றி பெற்றது.

சித்தா ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவர்கள் எந்த தடையும் இல்லாமல் ஆங்கில மருத்துவ சிகிச்சையை நோயாளிகளுக்கு அளிக்க அரசாணை பெற்று தந்தது.

என இப்படி 5 ஆண்டுகளில் ஏராளமான பணிகளை அப்துல் பாசித் செய்துள்ளார்.

பாசித் செய்த பணிகள் தொகுதிக்கு ஆற்றிய சேவைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

நூலுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் கே.எம்.காதர் மொகிதீன் வாழ்த்துரை வழங்கிய போது பாசித்தை இந்திய குலிஸ்தானின் இன்பப் பூ என்றும் முஸ்லிம் சமுதாயத்திற்கு கிடைத்த ஒளிமுத்து என்றும் பாராட்டி இருந்தார்.

இந்த நூல் 2011ஆம் ஜனவரி மாதம் வெளியானது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: