Thursday, April 16, 2015

ஓர் அழகிய பிரார்த்தனை....!

ஓர் அழகிய பிரார்த்தனை....!

ஜூம்மாவிற்காக சென்னை தி.நகர் அஞ்சுமன் பள்ளிவாசலுக்கு சென்றிருந்தேன்.

அண்ணா அறிவாலயம் எதிரே இருக்கும் விஜயராகவ ராவ் சாலையில் புகழ் பெற்ற இந்த பள்ளிவாசல் உள்ளது.

எளிய உர்துவில் குறிப்பிட்ட ஒரு தலைப்பை மட்டும் எடுத்துக் கொண்டு மவுலவி ஆற்றிய ஜூம்மா பேருரையை இன்னும் மனது அசை போட்டுக் கொண்டே இருக்கிறது.

தமது உரையின் இறுதியில் மவுலவி ஓர் அழகிய பிரார்த்தனை செய்தார்.
உலக அமைதிக்காக இந்தியாவின் வளர்ச்சிக்காக ஏக இறைவனிடம் துவா செய்தார்.

இறைவா இந்திய மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையுடனும் வாழ வழியை ஏற்படுத்தி தா.

நாம் அனைவரும் இந்த நாட்டின் மக்கள். எனவே நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமைகளை பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்ற எங்களுக்கு சக்தியை தா.

முஸ்லிம் மக்கள் அனைவரும் நம்முடைய பிற சமுதாய மக்களை உண்மையாக நேசித்து அவர்களுடன் பாசத்துடன் நேசத்துடன் பழகி வாழ வழியை ஏற்படுத்தி தா.

நாட்டில் வாழும் அனைத்து தரப்பு மக்களுக்கும் முன்னேற்றத்தை தா.

மக்களிடையே பிளவை ஏற்படுத்தி அரசியல் லாபம் அடைய முயலும் சக்திகளிடமிருந்து எங்களைக் காப்பாற்று.

உலக அளவில் இந்தியாவின் புகழ் பரவ வழியை ஏற்படுத்தி தா.

இப்படி ஓர் அழகிய பிரார்த்தனையை மவுலவி செய்த போது ஜூம்மா தொழுகைக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆமீன் என்று முழக்கம் எழுப்பினர்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: