Tuesday, April 28, 2015

அரை லூஸ்...!

அரை லூஸ்...!


ஜெயா தொலைக்காட்சி நிருபரா ஓடி போயிடு. இல்லாவிட்டால் மைக்கால் அடிப்பேன்.

தினமலர் நிருபரா கேள்வி கேட்காதே.

இப்படி டெல்லியில் நமது ஊடக சகோதரர்களை எச்சரித்து மிரட்டியுள்ளார் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்.

இப்படிப்பட்டவரை அரை லூஸ் என அழைக்காமல் பின்னர் எப்படி அழைப்பது.

இந்த அரை லூஸ் பின்னாடி திமுக காங்கிரஸ் பிஜேபி விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் டெல்லிக்கு சென்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து இருக்கிறார்கள்.

காரியம் நடக்குமா.

நல்லவேளை முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் யாரும் செல்லவில்லை.

தங்களை விஜயகாந்த் சந்திக்க வரவில்லை என்ற வருத்தம் முஸ்லிம் அமைப்பு தலைவர்களிடம் இருந்தது.

டெல்லியில் விஜயகாந்த்தின் நடவடிக்கைகளை கண்டு முஸ்லிம் தலைவர்கள் இப்போது நிம்மதி அடைந்து இருப்பார்கள்.

இந்த அரை லூஸை நம்பி வரும் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க திமுக ஆர்வமாக இருப்பது வியப்பு அளிக்கிறது.

எல்லாம் பதவி சுகம்தான் காரணம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: