Tuesday, April 28, 2015

ஒரு கல..கல..பேய்.

காஞ்சனா 2....!


பேய்...பிசாசுக்கு மக்கள் மத்தியில் ஒருவித பயம் இருந்தாலும் அதை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஆர்வம் இருக்கவே செய்கிறது.

அதனால்தான் என்னவோ பேய் தொடர்பான திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

எனவேதான் அது எப்படி இது எப்படி என கேள்விகள் எதுவும் கேட்காமல் பேய் படங்களை பார்க்க செல்கின்றனர்.

இதை நன்கு அறிந்து கொண்டு தொடர்ந்து பேய் படங்களை இயக்கி வருகிறார் ராகவா லாரன்ஸ்.

காஞ்சனா 2 திரைப்படமும் விறுவிறுப்பான காட்சிகளுடன் நகர்வதால் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படுவதில்லை.

ரசிகர்களை சிறிது நேரம் கூட யோசிக்க வைக்காமல் படம் நகர்வதால் காஞ்சனா 2 பேய் படமும் வெற்றி அடைந்துள்ளது என கூறலாம்.

காஞ்சனா 2..!

ஒரு கல..கல..பேய்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: