Thursday, April 16, 2015

காலத்தை வென்றவன்....!

காலத்தை வென்றவன்....!



இளைஞர் கதீர் சரவணனை நான் மக்கள் தொலைக்காட்சியில் பணி புரிந்த போது முதல் முறையாக சந்தித்தேன்.

FTP பிரிவில் மிகவும் துடிப்புடன் அவர் பணி ஆற்றியது என்னை வெகுவாக ஈர்த்தது.

அத்துடன் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் துடிப்பு சரவணனிடம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது.

ஓய்வு நேரத்தில் படத்தொகுப்பு கலையை அவர் கற்றுக் கொண்டார்.

மக்கள் தொலைக்காட்சியிலேயே தமக்கு படத்தொகுப்பு செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என சரவணன் எதிர்பார்த்தார்.

ஆனால் பல காரணங்களால் அது நிறைவேறவில்லை.

பொறுமை காத்தார் சரவணன். பலன் இல்லை.

பிறகு அவர் சிறிதும் கூட தயங்கவில்லை.

தனது பதவியை துறந்து கிராமத்திற்கு செல்வதாக அவர் அலுவலகத்தில் சொன்னபோது அனைவரும் சிரித்து விட்டோம்.

பின்னர் தனது கடுமையான முயற்சியால் சில தொலைக்காட்சிகளில் பணியாற்றிய சரவணன் இன்று உலகப் புகழ் பெற்ற சன் தொலைக்காட்சியில் சிறப்பாக பணியாற்றி சாதனை புரிந்து வருகிறார்.

தமிழக கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்த ஓர் இளைஞன் தனது கடும் முயற்சியால் இன்று வெற்றி கனியை பறித்துள்ளார்.

அதுவும் போட்டி பொறாமை அரசியல் செய்து மற்றவர்களை வீழ்த்தி மகிழ்ச்சி அடைதல் என அனைத்து கெட்ட குணங்களும் நிறைந்த மனிதர்கள் அதிகம் கொண்ட ஊடகத்துறையில் சரவணன் சாதித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
காலத்தை வென்ற கதீர் சரவணனுக்கு வாழ்த்துக்கள்.

சரவணன் இன்னும் சாதிக்க வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: