Wednesday, July 22, 2015

பாலிமர் டி.வி கேள்வி ?

ஊடக ஜனநாயகத்திற்கு ஆபத்தா...!

சன் டி.வி.யின் புலம்பலுக்கு பாலிமர் டி.வி. எழுப்பும் கேள்வி ?


முறைகேடாக தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்திய வழக்கு.

ஏர்செல் நிறுவன வழக்கு.

என இரண்டு வழக்குகளில் சன் டி.விக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது மத்திய அரசு.

பாதுகாப்பு அம்சங்களை காரணம் காட்டி சன் நெட்வொர்க்கை முடக்க நினைக்கிறது மத்திய அரசு.
உடனே ஊடக ஜனநாயகத்திற்கு ஆபத்து.

ஊடக சுதந்திரத்தை நசுக்கி வருகிறது மோடி அரசு என சன் டி.விக்கு ஆதரவாக சில அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் சன் டி.விக்கு ஆதரவாக அறிக்கை விட்ட தலைவர்களிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது பாலிமர் டி.வி.

சன் நெட்வொர்க் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோருக்கு எதிரான வழக்குகளை அவர்கள் சட்ட ரீதியாக சந்தித்து குற்றமற்றவர்கள் என நிருபிக்க வேண்டியதுதானே என கேட்கிறது பாலிமர் டி.வி.


ஊடக சுதந்திரம் குறித்து இன்று புலம்பும் சன் டி.வி. நிறுவனம் எத்தனை தொலைக்காட்சி நிறுவனங்களின் குரல்வளையை நசுக்கியது என்று கேட்கும் பாலிமர் டி.வி. அப்போது இந்த தலைவர்கள் என்ன செய்துக் கொண்டு இருந்தார்கள் என்றும் வினா எழுப்பியுள்ளது.

குறிப்பாக

புதிய தலைமுறை
பாலிமர்
நிலா
ஜி தமிழ்

போன்ற பல ஊடகங்களின் வளர்ச்சியை சன் டி.வி. நிறுவனம் எப்படி தடுத்தது என்று சில விளக்கங்களை கூறியுள்ள பாலிமர் டி.வி. சன் டி.வி. நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் இந்நிறுவனங்களில் பணிபுரிந்த பலர் பாதிப்பு அடைந்தனர் என்றும் இப்போது சன் டி.வி. நிறுவன ஊழியர்களின் நலனில் அக்கறை செலுத்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் சன் டி.வி. நிறுவன செயலால் பல ஊடக நிறுவன ஊழியர்கள் பாதிக்கப்பட்டபோது மவுனம் கடைப்பிடித்து ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

எனக்கு என்னவோ பாலிமர் டி.வி. எழுப்பும் பல கேள்விகளில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: