Tuesday, July 21, 2015

நீதி கேட்டு போராடுவது யார்...?

நீதி கேட்டு போராடுவது யார்...?


துருப்பிடித்த தமிழகம்.

நீதி கேட்டு பேரணி.

இப்படி முழக்கத்துடன் கடலூரில் பேரணி ஒன்றை நடத்தி முடித்துள்ளது திமுக.

இந்த பேரணியில் மூன்று லட்சம் பேர் கலந்து கொண்டதாக திமுக தரப்பில் கூறப்படுகிறது.

சரி.

நீதி கேட்டு போராடுவது யார்...?

தமிழகம் துருப்பிடிக்க யார் காரணம்...?

தமிழகத்தில் முதல் முதலில் மதுவை அறிமுகம் செய்தது யார்..?

ஊழல் என்ற பெயரை அறிமுகப்படுத்தி அதை மக்களிடையே பரப்பியது யார்...?

அப்பாவி மக்களின் நிலங்களை சொத்துக்களை மிரட்டி அபகரித்து கொள்ளை அடித்தது யார்...?

இப்படி பட்டியலைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்தப் பட்டியலின் நீளம் அதிகம்.

தமிழகம் துருப்பிடிக்க காரணமே திமுக ஆட்சிதானே.

இந்த லட்சணத்தில் நீதி கேட்டு திமுக போராட்டம் நடத்துவது சரியா ?

நியாயமா ?

இப்படி படிக்காத சாதாரண மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
பேசிக் கொள்கிறார்கள்.

என்ன பதில் சொல்வது மக்களே.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: