Saturday, July 25, 2015

தூக்குத் தண்டனை....! இரட்டை நிலை....!!

தூக்குத் தண்டனை....! 

தமிழக தலைவர்களின் இரட்டை நிலை....!!

தூக்குத் தண்டனை அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

உலகில் உள்ள பல நாடுகளில் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது.

இந்தியாவில் இன்னும் அது தொடர்கிறது.

மனித நேயத்திற்கு எதிரான இந்த பழக்கத்தை, வழக்கத்தை உடனே நிறுத்த வேண்டும்.

இப்படி தூக்குத் தண்டனைக்கு எதிராக தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள்.

ஆனால், மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள யாகூப் மேமனுக்கு வரும் 30ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்ற நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், அதற்கு எதிராக தமிழக தலைவர்கள் யாராது குரல் எழுப்புகிறார்களா என கேள்வி எழுப்பினால், பதில்,  இதுவரை இல்லை என்றே வருகிறது.

சமூக அமைப்பைச் சேர்ந்த ஒருசிலர் மட்டுமே, எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

மும்பை தொடர்  குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமன் குற்றவாளியா இல்லையா என்பது கேள்வி அல்ல.

தூக்குத் தண்டனையை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள், அனைவரையும் சமமாக அல்லவா பார்க்க வேண்டும்.

தூக்குத் தண்டனைக்கு எதிராக குரல் எழுப்பும் தமிழக தலைவர்கள்,முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக  யாகூப் மேமனுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை சிறிதும் கண்டுக் கொள்ளவில்லை.  அல்லது பொருட்படுத்தவில்லை.

இது என்ன நியாயம்.

இதன்மூலம் தூக்குத் தண்டனை விவகாரத்தில் தமிழக தலைவர்கள் இரட்டை நிலையை கடைப்பிடிப்பது உறுதியாக தெரிகிறது அல்லவா.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்

No comments: