Wednesday, July 15, 2015

அற்புத செயல்....!

இறைவன் முன் அரசனும் ஆண்டியும் சமம்....!

இதுதான் இஸ்லாத்தின் கொள்கை. போதனை.

நாடாளும் அரசன் பள்ளிவாசலுக்கு கால தாமதாக சென்றால், கூட்டுத் தொழுகையின்போது பின் வரிசையில்தான் நிற்க வேண்டும்.

ஆண்டி குறித்த நேரத்தில் சென்றுவிட்டால் முன் வரிசையில் இடம் பிடித்து விடலாம்.

இந்த அற்புத போதனையை உலகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

சரி.

சவுதி அரேபியாவில் உள்ள கபா புனித பள்ளிவாசலின் தலைமை இமாமாக இருக்கும் அப்துர் ரஹ்மான் சுதைஸியின் அற்புத செயலை இங்கு பார்ப்போம்.

ரமலான் புனித நோன்பு வைக்கும் அனைத்து தரப்பு மக்களிடமும் அன்புடன் பழகிய அவர், அதை தமது செயலிலும் செய்துக் காண்பித்து நிருபித்துள்ளார்.

மனித நேய பண்புகளை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆம்.


கபா பள்ளிவாசலில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற இமாம் அப்துர் ரஹ்மான் சுதைஸி, துப்புரவுப் பணியாளர்களுடன் இணைந்து அவர்களுடன் அமர்ந்து, நோன்பை துறந்தார்.

எப்படிப்பட்ட ஒரு அற்புதமான செயல்.

நம் நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் முதல், பண முதலாளிகள் வரை இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் எப்படி நடந்துக் கொள்கிறார்கள்.

சாதாரண மனிதர்களை கொஞ்சமாவது இவர்கள் மதிக்கிறார்களா.

நாம் யோசிக்க வேண்டும்.

இறைவன் முன்பு அனைவரும் சமம் எனும்போது, நமக்குள் எதற்கு பிரிவினை, பேதம்.

கபா பள்ளிவாசலின் தலைமை இமாம் அப்துர் ரஹ்மான் சுதைஸியின் செயலை கண்டு நம் சிந்தனைகளில், எண்ணங்களில் நல்ல மாற்றங்கள் வர வேண்டும்.

அதன்மூலம் நாமும் மனித புனிதர்களாக மாற முயல வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: