Tuesday, July 7, 2015

ஓர் நல்ல அழகான செயல் விஜய்...!

ஓர் நல்ல அழகான செயல் விஜய்...!


ஐயம் வைடிங்...!

இது துப்பாக்கி திரைப்படத்தில் நீங்கள் பேசிய பாப்புலர் வசனம்.

ஆனால் தமிழகத்தில் மத நல்லிணக்கம் தவழ நீங்கள் காத்திருந்து இந்த புனித ரமலானில் இறைவனின் அருளைப் பெறும் நோக்கில் நல்ல ஓர் அழகிய செயலை செய்துள்ளீர்கள்.

புனித நோன்பு வைக்கும் நூறு இஸ்லாமியர்களை அழைத்து உங்கள் சொந்த செலவில் இஃப்தார் என்னும் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை நடத்தி மகிழ்ச்சி அடைந்துள்ளீர்கள்.

நோன்பு திறப்பு நிகழ்ச்சியை ஒரு சடங்காக நடத்தாமல் உங்கள் அழைப்பை ஏற்று வந்த உங்கள் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு நீங்களே உணவுகளை பரிமாற்றி உண்மையான அன்பை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

அத்துடன் நீங்களும் இஸ்லாமியர்களுடன் அமர்ந்து நோன்பு கஞ்சியை சாப்பிட்டு மகிழுந்துள்ளீர்கள்.

இதை பார்க்கும் போது உண்மையிலேயே மனம் மகிழ்ச்சி அடைகிறது.

நாட்டில் ஒரு கூட்டம் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து மத துவேஷத்தை பரப்ப முயற்சி செய்து வரும் நிலையில் அட முட்டாள் மர மண்டைகளே நாம் அனைவரும் ஒரே குலம் ஒரே இனம் ஒரே இறைவனின் மக்கள் நமக்குள் எதுக்குடா சண்டை சச்சரவு என நீங்கள் மறைமுகமாக கூறி இந்த நிகழ்ச்சியை நடத்தி இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.


நம்மிடம் பிரிவுகள் இருக்கலாம் ஆனால் நாம் அனைவரும் ஒரே தாய் தந்தையின் பிள்ளைகள் என்பதை உங்களின் எளிமையான அற்புதமான இந்த செயலின் மூலம் மக்களை பிளவுப்படுத்த நினைக்கும் கூட்டத்திற்கு நீங்கள் பாடம் போதித்துள்ளீர்கள்.

உங்களின் இந்த பணிக்காக என்னுடைய பாராட்டுகள். வாழ்த்துக்கள்.

இதுபோன்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சிகளை தொடர்ந்து நீங்கள் நடத்த வேண்டும்.

அதற்காக இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் வளத்தையும் நீண்ட ஆயுளையும் அளிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: