Tuesday, July 7, 2015

என்னால்தான் மெட்ரோ ரயில்...!

என்னால்தான் மெட்ரோ ரயில்...!

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் தங்களால்தான் வந்தது என ஆளுக்கு ஆள் தற்போது உரிமை கொண்டாட தொடங்கி விட்டனர்.

உண்மையை சொல்ல வேண்டுமானால் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் வருவதற்கு நான்தான் முதல் காரணம்.

டெல்லியில் வாழ்ந்தபோது டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தில் மயங்கி நம்ம சென்னையிலும் இதுபோன்ற ஒரு நல்ல திட்டம் வந்தால் நன்றாக இருக்குமே என தினமும் நான் கனவு கண்டேன்.

ஆசைப்பட்டேன்.

அந்த கனவுதான் இன்று நனவாகியுள்ளது.

சென்னை மக்களின் போக்குவரத்து தேவைக்காக நான் கண்ட கனவு ஆர்வம் ஆகியவற்றால்தான் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் சாத்தியமானது எனலாம்.

எனவே சென்னையில் மெட்ரோ ரயில் ஓடுவதற்கு நான் முதல் காரணம்.

இதில் மற்றவர்கள் யாரும் முதல் உரிமையை கொண்டாட முடியாது.

(பின் குறிப்பு. சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கொஞ்சம் அதிகம்).

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: