Thursday, July 9, 2015

சபாஷ் நிதிஷ்குமார்.

பீகாரில் பூரண மதுவிலக்கு....!


முதலமைச்சர் நிதிஷ்குமார் உறுதி....!!

பீகாரில் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்வின் ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இதேபோன்று, பிஜேபியும் வலுவாகக் கூட்டணியை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்நிலையில் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், வரும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என உறுதியாக தெரிவித்தார்.

கடந்த இரண்டு முறை நடத்த தேர்தலில்களில் தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறிய அவர், அதேபோன்று, மது விலக்கு தொடர்பான இந்த வாக்குறுதியும் கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் மாநிலத்தை மது இல்லாத மாநிலமாக அறிவிப்பேன் என்றும் நிதிஷ்குமார் திட்டவட்டமாக கூறினார்.


சபாஷ் நிதிஷ்குமார்.

மதுவின் கொடுமையை, தீமையை அறிந்துக் கொண்டு பீகாரில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தப் போவதாக அறிவித்த உங்களுக்குதான் எங்கள் வாக்கு.

ஆனால், நாங்கள் பீகாரில் இல்லை.

எனினும் எங்களது ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு.

பீகாரை போன்று தமிழகத்திலும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தப் போகும் கட்சிகளுக்குதான் எங்கள் வாக்கு என மக்கள் அறிவிக்க வேண்டும்.

அப்போதுதான், தமிழகத்தில் மதுவை ஒழிக்க முடியும்.

இல்லையென்றால், தீமையின் கொடுமையை யாராலும் தடுத்த நிறுத்த முடியாது.

பெண்களின் துயரங்களை தீர்க்க முதலமைச்சர் ஜெயலலிதா உடனே, மதுவிலக்கை அமல்படுத்தும் அறிவிப்பை அறிவிக்க வேண்டும்.

அதன்மூலம், வரும் தேர்தலில் பெண்களின் மற்றும் அனைத்து தரப்பு மக்களின் வாக்குகளை அள்ளி வெற்றி பெற வேண்டும்.

இதுதான் மக்களின் எதிர்பார்ப்பு.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: