Tuesday, July 21, 2015

மீண்டும் மதுவிலக்கு...!

தமிழகத்தில் மீண்டும் மதுவிலக்கு...!


திமுக அறிவிப்பு...!!


மதுவின் தீமையால் தமிழகம் தள்ளாடி வரும் நிலையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் கலைஞர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில் உறுதி அளித்துள்ளார்.

இந்த தகவலை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அப்பாடா மதுவின் தீமையை உணர்ந்து மக்களின் நலனில் அக்கறை கொண்டு தமிழகத்தில் மதுவை அறிமுகப்படுத்திய திமுகவே மீண்டும் மதுவிலக்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து இருப்பது ஆறுதல் அளிக்கிறது.

மகிழ்ச்சி அளிக்கிறது.

திமுகவின் இந்த நல்ல மாற்றம் உண்மையில் ஆனந்தம் அளிக்கிறது.

எனவே அந்த அறிவிப்பை நாம் வரவேற்கிறோம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: