Wednesday, July 24, 2024

Thursday, July 18, 2024

காங்கிரஸ் கேள்வி...!

 கேள்வியோ....கேள்வி....!

காங்கிரஸ் அதிரடி கேள்வி....!!



Monday, July 15, 2024

கேள்வி....!

பல கோடி ரூபாய் மதிப்புள்ள 228 கிலோ தங்க நகைகள் கேதார்நாத் சிவன் கோவிலில் இருந்து திருடு போயுள்ளன.

உத்தரகாண்ட் பாஜக ஆளும் மாநிலம். அப்படியெனில் கேதார்நாத் கோயிலின் நகைகள் எங்கே? - ஜோதிர்மட சங்கராச்சாரியார் கேள்வி.

இந்த சமய அறநிலையத்துறை ஏன் கோயிலை விட்டு வெளியேற வேண்டும் என பாஜக குரல் கொடுப்பதன் ரகசியம் தெரிகிறதா?



Thursday, July 11, 2024

அழகிய சிந்தனைகள்...!

சிந்தனைகள்.....அழகிய சிந்தனைகள்....!

Beautiful things happen when you distance yourself from negativity.

====================

Life is a journey filled with new possibilities every day.

=====================

வாழ்க்கை குத்துச்சண்டை போன்றது. விழுந்து போது தோல்வி அறிவிக்கப்படுவதில்லை. எழாத போதுதான் அறிவிக்கப்படுகிறது.

========================

உங்களை யாரும் ஏற்றி விடுவார்கள் என எண்ணாதீர்கள். நீங்களே எழக் கற்றுக் கொள்ளுங்கள். அது தான் உங்கள் வாழ்க்கை வெற்றியின் முதற்படி.

=====================

Don't be a parrot in life, be an eagle. A parrot talks way too much but can't fly high, but an eagle is silent and has the power to touch the sky.

===================

Honest relations are just like water, no color, no shape, no place, no taste but still very important for life.

====================

Worry less, smile more. Don't regret, just learn and grow.

======================

பேசுவதற்கு நீங்கள் எவ்வாறு கற்றுக் கொள்கிறீர்களோ, அதேபோல், மவுனத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். பேச்சு உங்களுக்கு வழி காட்டலாம். ஆனால் மவுனம் நிறைய சந்தர்ப்பங்களில் உங்களை பாதுகாக்கும்.

=======================

A few bad chapters does not mean that your story is over.

======================

Punctuality is not about being on time. It's basically about respecting your own commitment.

===================

A good life need some bad days.

====================

The life that you are living now, is also a dream of millions. So always be satisfied with your life. Be happy in every moment of life.

=======================

Honest relations are just like water, no color, no shape, no place, no taste but still very important for life.

======================

உங்களை யாரும் ஏற்றி விடுவார்கள் என எண்ணாதீர்கள். நீங்களே எழக் கற்றுக் கொள்ளுங்கள். அது தான் உங்கள் வாழ்க்கை வெற்றியின் முதற்படி

==================

Worry less, smile more. Don't regret, just learn and grow.

======================

இருண்ட வட்டங்கள்.....!

கண்களுக்குக் கீழ் இருண்ட வட்டங்கள் -   என்ன சொல்கிறது மருத்துவ உலகம்?

நம்மில் பலருக்கு கண்களுக்குக் கீழ் இருண்ட வட்டங்கள் ஏற்படுவது இப்போது சஜகமான ஒன்றாக மாறிவிட்டது. இது முகத்தின் அழகை மட்டுமல்லாமல், கண்களின் அழகையும் பெரிதும் பாதிக்கிறது.  ஒவ்வாமை எதிர்வினைகள் ஹிஸ்டமைனின் வெளியீட்டைத் தூண்டுகின்றன. இது இரத்த நாளங்கள் விரிவடைந்து, கண்களைச் சுற்றியுள்ள மெல்லிய தோலின் கீழ் அதிகமாகத் தெரியும். இந்த விரிவடைதல், வீக்கம் மற்றும் கண்களைத் தேய்த்தல் ஆகியவற்றுடன் சேர்ந்து, இருண்ட வட்டங்கள் ஏற்படலாம். கண்களுக்குக் கீழ் இருண்ட வட்டங்கள் இருப்பது, மிகவும் தீவிரமான உடல்நலப் பிரச்சனையைக் குறிக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். 

“பெரியோர்பிட்டல் ஹைப்பர் பிக்மென்டேஷன் என்பது கண்களைச் சுற்றி மெலனின் உற்பத்தியை அதிகரிப்பதை உள்ளடக்கிய ஒரு நிலை. பெரும்பாலும் மரபணு காரணிகள் அல்லது சூரிய ஒளியின் காரணமாக. உடல்நலப் பிரச்சினைகளுடன் நேரடியாக தொடர்பில்லாவிட்டாலும், பிற பங்களிப்பு காரணிகளால் இது அதிகரிக்கலாம்.

கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் பெரும்பாலும் சோர்வு அல்லது முதுமையின் அறிகுறிகளாக கருதப்படுகின்றன. ஆனால், அவை அடிப்படை உடல்நலப் பிரச்சினைகள் அல்லது கவனம் செலுத்த வேண்டிய வாழ்க்கை முறை தேர்வுகளின் குறிகாட்டிகளாக இருக்கலாம். தூக்கமின்மை என்பது தற்போது உலகின் பெரும்பாலான மக்களிடையே இருக்கும் ஒரு பொதுவான பிரச்சினையாகும். கண்களுக்கு கீழே கருவளையங்கள் ஏற்பட இது முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது. மேலும், கண்களுக்குக் கீழே இருக்கும் அந்த தொடர்ச்சியான நிழல்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பற்றி மிகவும் சிக்கலான உடல் பிரச்சினைகள் குறித்து எச்சரிக்கை செய்யும் ஒரு எச்சரிக்கை மணி என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். 

எனவே தான், "கண்களுக்குக் கீழே கருவளையங்கள் ஏற்படுவது ஒரு பொதுவான கவலையாகும். இது பல்வேறு உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை காரணிகளால் ஏற்படலாம். இதன் மூல காரணங்களைப் புரிந்துகொள்வது அவற்றின் தோற்றத்தைக் குறைக்க பயனுள்ள உத்திகளை உருவாக்குவதற்கு முக்கியமானது" என்று அழகியல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் குணசேகர் வுப்பலாபதி தெரிவித்துள்ளார். 

முக்கிய காரணங்கள்:

கண்களுக்குக் கீழே இருண்ட வட்டங்கள் உருவாக பல்வேறு முக்கிய காரணங்கள் உள்ளன அழகியல் மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒவ்வாமை காரணமாக இது உருவாகலாம் என கூறும் அவர்கள், அரிக்கும் தோலழற்சி கூட முக்கிய காரணம் என்றும் தெரிவிக்கிறார்கள். இந்த அழற்சி தோல் நிலைகள் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். இது கண்களைத் தேய்த்தல் மற்றும் அரிப்புக்கு வழிவகுக்கும். இது ஏற்கனவே இருக்கும் கருவளையங்களை மோசமாக்கும் அல்லது புதியவற்றை உருவாக்கும். மேலும், இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. இது வெளிர் சருமத்திற்கு வழிவகுக்கிறது. அத்துடன், கண்களுக்குக் கீழே உள்ள இரத்த நாளங்களை பாதித்து, அதன்மூலம், இருண்ட வட்டங்களாக வெளிப்படுத்துகிறது. 

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தேர்வுகளின் தாக்கம் கூட இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஒருவரின் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் இருண்ட வட்டங்களின் தோற்றத்தை கணிசமாக பாதிக்கும் என்றும், எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மனிதர்கள் தங்களை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். 

மோசமான உணவு: 

வைட்டமின்கள் கே மற்றும் பி 12 போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் குறைபாடுகள் இரத்த நாளங்களை பலவீனப்படுத்தலாம். மேலும் இரத்த ஓட்டத்தை சீர்குலைத்து, கண்களுக்குக் கீழே நிறமாற்றம் மற்றும் கருமைக்கு வழிவகுக்க முக்கிய பங்களிக்கின்றன. போதிய நீர் உட்கொள்ளல் மந்தமான, குழிவான சருமத்திற்கு வழிவகுத்து, கருவளையங்கள் அதிகமாக வெளிப்படும். நன்கு நீரேற்றப்பட்ட தோல் குண்டாகவும், குறைவான வெளிப்படையானதாகவும் தோன்றுகிறது. இது இரத்த நாளங்களின் தோற்றத்தைக் குறைக்கும்.

புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்றப் பழக்கங்களால், உடலில் நீர்ச்சத்து குறைவதோடு, இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, அவை தோலின் கீழ் அதிகமாகத் தெரியும். நாள்பட்ட பயன்பாடு கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகியவற்றை சேதப்படுத்தும். இது மெல்லிய தோல் மற்றும் மிகவும் குறிப்பிடத்தக்க இருண்ட வட்டங்களுக்கு வழிவகுக்கும்.

எலக்ட்ரானிக் திரைகளில் நீண்ட நேரம் செலவிடுவது கண்களை கஷ்டப்படுத்தி சோர்வை ஏற்படுத்தும். இரத்த நாளங்கள் விரிவடைவதால் தற்காலிக கருவளையங்களுக்கு வாய்ப்பு உருவாகும். பங்களிக்கும். அத்துடன், அப்பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்றவை கண்களுக்குக் கீழே கருவளையங்கள் ஏற்பட முக்கிய காரணங்களாகும். மன அழுத்தம் கார்டிசோல் என்ற ஹார்மோனின் வெளியீட்டைத் தூண்டுகிறது. இது கண்களைச் சுற்றி திரவத்தைத் தக்கவைத்து வீக்கத்திற்கு வழிவகுக்கும். போதுமான தூக்கமின்மை இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது.  அத்துடன், இரத்த ஆக்ஸிஜன் அளவைக் குறைக்கிறது. இதனால் தோல் வெளிர் நிறமாக தோன்றும். இது அடிப்படை இரத்த நாளங்களை மேலும் காணக்கூடியதாக மாற்றும், இருண்ட வட்டங்கள் உருவாக முக்கிய பங்களிக்கிறது. வைட்டமின்கள் கே, பி12 மற்றும் இ-இல் உள்ள குறைபாடுகள் இரத்த உறைதல், இரத்த சிவப்பணு உற்பத்தி மற்றும் ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்பு ஆகியவற்றை பாதிக்கலாம். இவை அனைத்தும் கருவளையங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன.

இயற்கை முறையில் மருத்துவம்:

தூக்கமின்மை, மனச்சோர்வு, மன அழுத்தம், முதுமை, வறண்ட சருமம் அல்லது பரம்பரைப் பிரச்சனைகள் போன்ற காரணங்களால் உருவாகும் கருவளையம் பிரச்சினைக்கு, இயற்கை முறையில் நல்ல தீர்வு காணலாம் என இயற்கை மருத்துவர்கள் ஆலோசனைகளை தருகிறார்கள்.  அதன்படி, பாதாம் எண்ணெய் கண்களைச் சுற்றியுள்ள மென்மையான தோலுக்கு மிகவும் நன்மை பயக்கும். பாதாம் எண்ணெயை தவறாமல் பயன்படுத்துவது கண்களுக்குக் கீழே உள்ள வட்டங்களை மறையச் செய்யும். படுக்கைக்குச் செல்வதற்கு முன், சிறிது பாதாம் எண்ணெயை கருமையான வட்டங்களில் தடவி, தோலில் மெதுவாக மசாஜ் செய்து இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.  

இதேபோன்று உருளைக்கிழங்கில் இயற்கையான ப்ளீச்சிங் அம்சங்கள் உள்ளன. அவை கருவளையங்களை குறைக்கவும், கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தைப் போக்கவும் உதவும். ஒன்று அல்லது இரண்டு மூல உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து ஒரு பருத்தி உருண்டையை சாற்றில் நனைத்து மூடிய கண்களின் மேல் வைத்து,  10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் கண் இமைகளை குளிர்ந்த நீரில் நன்கு துவைக்க வேண்டும். ஒரு சில வாரங்களுக்கு தினமும் ஒருமுறை அல்லது இரண்டு முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என இயற்கை மருத்துவர்கள் ஆலோசனை தருகிறார்கள்.

தேங்காய் எண்ணெய் ஈரப்பதமூட்டும் தரம் காரணமாக, தேங்காய் எண்ணெய் மென்மையான சருமத்தை மேம்படுத்துகிறது. கண்களுக்குக் கீழே சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளைத் தடுக்கிறது. தேங்காய் எண்ணெயுடன் மசாஜ் செய்வது கருவளையங்களை ஒளிரச் செய்ய ஒரு சிறந்த இயற்கை தீர்வாகும். இதேபோன்று, தேநீரில் உள்ள காஃபின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கருவளையங்கள் மற்றும் கண்களுக்குக் கீழே உள்ள வீக்கத்தைப் போக்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். டானின்கள், குறிப்பாக, வீக்கம் மற்றும் நிறமாற்றம் குறைக்க உதவுகிறது.

வேண்டாம் மன அழுத்தம்:

கண்களுக்குக் கீழ் இருண்ட வட்டங்கள் அல்லது கருவளையங்கள் ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது மன அழுத்தம் என பெரும்பாலான மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் கூட இந்த பிரச்சினையில் இருந்து விடுபட தீர்வாக அமையும். செல்பேசி, கணினி ஆகியவற்றை நீண்ட நேரம் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இது கண்களின் பாதுகாப்பிற்கு மட்டுமல்லாமல், கண்களின் கீழ் கருவளையங்கள் ஏற்படாமல் இருக்க உதவும். இயற்கையான வாழ்க்கை நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ்ந்த நம் முன்னோர்கள், எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல், அழகான முகம், அழகான கண், அழகான உடல் ஆகியவற்றை பெற்று மன நிறைவுடன் இருந்தார்கள். அதுபோன்ற ஒரு வாழ்க்கையை நாமும் வாழ நம்மை பழக்கப்படுத்திக் கொண்டால், எந்தவித பிரச்சினைகளும் உடலுக்கும், மனதிற்கும் ஏற்படாது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Wednesday, July 10, 2024

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குழு ஆறுதல்....!

அலிகரில் சமூக விரோத கும்பலால் படுகொலை செய்யப்பட்ட முகமது ஃபரீத் குடும்பத்தினருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குழு நேரில் ஆறுதல்....!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பிரச்சினை எழுப்படும் என  மாநிலங்களவை உறுப்பினர் வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான் உறுதி...!!

அலிகர், ஜுலை.11-உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகரில் கடந்த ஜுன் மாதம் 18ஆம் தேதி முகமது ஃபரீத் என்ற இஸ்லாமிய இளைஞர், சமூக விரோத கும்பலால், அடித்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களில் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபிறகும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள், தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்கனவே குற்றம்சாட்டி வருகிறது. இதுதொடர்பாக மாநிலங்களவையில் பேசிய இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர் வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை இரும்பு கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார். 

எனினும், முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையின மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில், உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகரில் கடந்த ஜுன் மாதம் 18ஆம் தேதி முகமது ஃபரீத் என்ற இஸ்லாமிய இளைஞர், சமூக விரோத கும்பலால், அடித்து படுகொலை செய்யப்பட்டார்.  இந்த சம்பவத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. 

குடும்பத்தினருக்கு ஆறுதல்:

இந்நிலையில், இ.யூ.முஸ்லிம் லீகின் சார்பு அணியான லாயர் போரத்தின் தேசிய அமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான் தலைமையில், இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் குர்ரம் அனீஸ் உமர், உத்தரப் பிரதேச மாநில தலைவர் டாக்டர் மதீன் கான், முஸ்லிம் யூத் லீக் தேசிய தலைவர் அஸிப் அன்சாரி, பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஃபைசல் பானு மற்றும் முஸ்லிம் மாணவர் அமைப்பைச் சேர்ந்த (எம்.எஸ்.எஃப்.) அலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர், படுகொலை செய்யப்பட்ட முகமது ஃபரீதின் இல்லத்திற்கு 10.07.24 அன்று நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். 

மிகவும் துயரமான, நெருக்கடியான நிலையில் இருக்கும் முகமது ஃபரீதின் குடும்பத்திற்கு இ.யூ.முஸ்லிம் லீக் துணையாக இருக்கும் என்றும், அனைத்து வகைகளிலும் தேவையான உதவிகளை மற்றும் நீதியை பெற்றுத் தர நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் இந்த குழு உறுதி அளித்தது. 

ஹாரிஸ் பீரான் பேட்டி:

இந்த சந்திப்புக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான் எம்.பி., படுகொலை செய்யப்பட்ட முகமது ஃபரீத் குடும்பத்தினரையும், அதிகாரிகளையும் சந்தித்து பேச இ.யூ.முஸ்லிம் லீக் குழு அலிகர் வந்தது. அலிகர் மாவட்ட ஆட்சியரிடம் நாங்கள் சம்பவம் தொடர்பாக பேசினோம். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கடந்த 2ஆம் தேதி மாநிலங்களவையில் நான் பேசும்போது, சுட்டிக் காட்டி பேசி கண்டனம் தெரிவித்தேன். தற்போது முழு விவரங்களை திரட்ட நாங்கள் வந்து இருக்கிறோம்.

எந்தவித காரணமும் இல்லாமல் ஒரு கும்பல் தாக்கி முகமது ஃபரீதை படுகொலை செய்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நாகரீகமற்ற சமுகத்தில் மட்டும் தான் நடைபெறும். இதுபோன்ற படுகொலை சம்பவங்களை தடுத்து நிறுத்த புதிய சட்டம் கொண்டு வர வேண்டும். படுகொலை செய்யப்ப்டட முகமது ஃபரீத் குடும்பத்தினருக்கு கிடைக்க வேண்டிய நிவாரண உதவிகள் குறித்து நாங்கள் பேசினோம். மாவட்ட ஆட்சியரிடமும் அதுகுறித்து கேட்டறிந்தோம். இந்த சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்து இருப்பதாக மாவட்ட ஆட்சியர் எங்களிடம் கூறினார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

ஏற்கனவே,  முகமது ஃபரீத் குடும்பத்திற்கு அரசின் சார்பில் நிவாரண நிதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேவையான கூடுதல் உதவிகள் பெற்று தருவது தொடர்பாக லக்னோவிற்கு கடிதம் எழுதிய இருப்பதாகவும் அரசு உத்தரவு வந்ததும் அந்த நிதியும் வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறினார். 

பட்ஜெட் கூட்டத் தொடரில் குரல்:

நான் ஏற்கனவே, மாநிலங்களவையில் பேசியபோது, முஸ்லிம்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி செய்யும் விமர்சனங்கள், தெரிவிக்கும் கருத்துகள் மூலம், சமூக விரோத கும்பலுக்கு தைரியம் வந்துவிடுகிறது. அதன் காரணமாக அவர்கள் இதுபோன்ற படுகொலை சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து ஜுன் 4ஆம் தேதி முடிவுகள் வந்தபிறகு, இதுபோன்ற வன்முறை தாக்குதல்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. 

வரும் 22ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த சம்பவம் குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாங்கள் குரல் எழுப்புவோம். சமூக விரோத கும்பல், சமூக அமைப்பை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்வதற்கு எதிராக நாங்கள் குரல் எழுப்பி, பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என ஆட்சியாளர்களை வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

நீதி கிடைக்க வழக்கு:

தொடர்ந்து பேசிய இ.யூ.முஸ்லிம் லீக்  உத்தரப் பிரதேச மாநில தலைவர் டாக்டர் மதீன் கான், படுகொலை செய்யப்பட்ட முகமது ஃபரீத் குடும்பத்தினருக்கு, நீதி கிடைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணை நிற்கும். இதுதொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் நடத்தி, நியாயம் கிடைக்க முயற்சி செய்வோம். முஸ்லிம்களுக்கு எதிராக இதுபோன்ற வன்முறைகள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க தேவையான ஆக்கப்பூர்வமான பணிகளை இ.யூ.முஸ்லிம் லீக் செய்யும் என உறுதிப்பட கூறினார்.

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Tuesday, July 9, 2024

பொடுகுத் தொல்லை....!

பொடுகுத் தொல்லையைத் தடுக்க தீர்வு என்ன?

பொடுகு, அல்லது செபொர்ஹெக் டெர்மடிடிஸ் என்பது, மலாசீசியா என்ற ஈஸ்ட் அதிகப்படியான வளர்ச்சியால் ஏற்படும் ஒரு பொதுவான உச்சந்தலை நிலையாகும். மேலும், பொடுகு என்பது வியர்வை, இரசாயன அடிப்படையிலான ஷாம்புகளைப் பயன்படுத்துதல் மற்றும் அழுக்கு மற்றும் தூசியின் வெளிப்பாடு போன்ற பல காரணிகளால் ஏற்படும் பொதுவான பிரச்சனையாகும். இதை புறக்கணித்தால், அது ஒரு நாள்பட்ட பிரச்சினையாக மாறும். மேலும் இது உதிர்தல் மற்றும் அரிப்புக்கு வழிவகுக்கிறது

தற்போது, சிறுவர்கள், பெரியவர்கள் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைத்து வயதினரையும் பொடுகு பிரச்சினை பாதித்து வருகிறது.  இதைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்துவிட்டால், முடி உதிர்வு ஏற்பட்டு, தலை வழுக்கையாகவும் வாய்ப்பு உண்டு. அதோடு சில தோல் வியாதிகள் உருவாக பொடுகு வழிவகுக்கும். 

வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவை பொடுகுப் பிரச்னை உருவாக முக்கியக் காரணங்களாகும். 

தீர்வு என்ன?

“பொடுகு ஒரு பூஞ்சை. இங்கு நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நீங்கள் தலைமுடியை கழுவாத நாட்களில் அது வளரும்.  எனவே, முடி நாள்பட்டதாக மாறாமல் பார்த்துக் கொள்ள ஒருவர், 21 நாட்களுக்கு தொடர்ந்து தினமும் தலையை கழுவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை பொடுகு எதிர்ப்பு ஷாம்பூவைப் பயன்படுத்தினால் மட்டும் இந்தப் பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்க முடியாது”  என்று தோல் மருத்துவ நிபுணர் டாக்டர் ரஷ்மி ஷெட்டி தெரிவித்துள்ளார். 

“வழக்கமான முடியைக் கழுவுவது, பொடுகுத் தொல்லையை நீக்கி, எண்ணெய் தேங்குவதைக் குறைப்பதன் மூலம், 21 நாட்களுக்கு தினமும் ஷாம்பு போடுவது என்பது பலனளிக்காது. ஒவ்வொருவரின் சருமமும் வித்தியாசமானது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். மேலும் ஒருவருக்கு வேலை செய்வது மற்றொருவருக்கு வேலை செய்யாது”என்று தோல் மருத்துவ ஆலோசகர் டாக்டர் சச்சின் குப்தா கூறியுள்ளார். 

பொடுகுத் தொல்லையை நீக்க 21 நாட்களுக்குத் தொடர்ந்து உங்கள் தலைமுடியைக் கழுவுவது அல்லது ஷாம்பு போடுவது தற்காலிகத் தீர்வாகும். உங்கள் பொடுகு காலப்போக்கில் மோசமடையக்கூடும். உங்கள் தலைமுடியை அதிகமாகக் கழுவுவது உங்கள் உச்சந்தலையில் இருந்து அத்தியாவசிய எண்ணெய்களை அகற்றிவிடும். இதன் விளைவாக வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படும். 21 நாட்களுக்கு ரசாயன அடிப்படையிலான பொடுகு எதிர்ப்பு ஷாம்பூவைக் கொண்டு முடியை அதிகமாகக் கழுவுவது, உங்கள் தலைமுடியை சேதப்படுத்தும், பின்னர் உடையக்கூடியதாகவும், உறுத்தலாகவும் இருக்கும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

பொடுகுப் பிரச்சினை தனிநபரின் தேவைகள் மற்றும் நிலையின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப மாறுபடுகிறது. லேசான நிகழ்வுகளுக்கு, கெட்டோகனசோல், செலினியம் சல்பைட் அல்லது ஜிங்க் பைரிதியோன் போன்ற செயலில் உள்ள பொருட்கள் கொண்ட பொடுகு எதிர்ப்பு ஷாம்புகளை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும். அதேநேரத்தில் அதிக நிலையான அல்லது கடுமையான பொடுகுப் பிரச்சினைக்கு, தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். ஒவ்வொருவரின் உச்சந்தலை மற்றும் தோலின் தனிப்பட்ட குணாதிசயங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, தனிப்பயனாக்கப்பட்ட கவனிப்பு மூலம் பொடுகுப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை தருகிறார்கள். 

இயற்கை முறையில் நல்ல தீர்வு:

பொடுகுப் பிரச்னைக்கு இயற்கை முறையில் நல்ல தீர்வு இருக்கிறது.  இயற்கை மருத்துவர்கள் தரும் ஆலோசனைகளைப் பெற்று அதன்மூலம் பொடுகுப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இயற்கையாக மரம், செடி, கொடிகளிலிருந்து கிடைக்கக் கூடிய பொருட்கள், நம் வீட்டுச் சமையல் அறையில் இருக்கும் பொருள்களும்கூட பொடுகுப் பிரச்னைக்கு நல்ல தீர்வு தரக்கூடியவை என்று சித்தா, யுயானி, ஆயுர்வேத மருத்துவர்கள் சொல்கிறார்கள். 

அதன்படி, எலுமிச்சைச் சாறு, தேங்காய் எண்ணெய் இரண்டிலும் தலா இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்து நன்றாகக் கலந்து, இந்தக் கலவையை தலைமுடியில் மசாஜ் செய்வதுபோலத் தேய்த்து, 20 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும். பிறகு ஷாம்பூ தேய்த்து, தலையை அலச வேண்டும். தேங்காய் எண்ணெய், முடிக்கு ஊட்டமளிக்கும். எலுமிச்சைச் சாறு பொடுகுத் தொல்லையை நீக்கி, முடி வளர்ச்சிக்கு உதவும் என்றும், தயிரைத் தலையில் நன்றாகத் தேய்த்துக்கொண்டு, சுமார் ஒரு மணி நேரம் கழித்து குளிக்கலாம். தயிர், உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் என்றும், தேயிலை மரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுவது, தேயிலை மர எண்ணெய். இது பொடுகை உருவாக்கக்கூடிய கிருமிகளை எதிர்த்து போராடக்கூடியது. கூந்தலுக்கு ஊட்டச்சத்தை அளித்து, முடி உதிர்வையும் தவிர்க்க உதவும். இந்த எண்ணெயைச் சில துளிகள் எடுத்து, தலை முழுக்கத் தடவி, ஐந்து நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் குளிப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்றும் இயற்கை மருத்துவர்கள் ஆலோசனைகளை தருகிறார்கள். 

மேலும், இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்து, மறுநாள் அதை அரைத்து பின்னர் இதை தலையில் தேய்த்து, அரை மணி நேரம் ஊறவைத்து தலைக்குக் குளிப்பதன் மூலம் உடல் உஷ்ணம் குறைந்து முடி வளர்ச்சிக்கு உதவி, பொடுகுத் தொல்லை குறையும். இதேபோன்று, வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி, 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து பிறகு குளித்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். கைப்பிடி வேப்பிலைகளை பேஸ்ட்போல அரைத்துக்கொண்டு,  இதைத் தலையில் தேய்த்து ஊறவைத்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளித்தால், இதன் கசப்பு தன்மை, தலையில் உள்ள பாக்டீரியா போன்ற தலைமுடிக்குத் தீங்கிழைக்கும் நுண்ணியிரிகளை அழித்துவிடும் என பல்வேறு அருமையாக ஆலோசனைகள் இயற்கை மருத்துவர்கள் தருகிறார்கள். 

கவலை வேண்டாம்:

பொடுகுப் பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருப்பது நமது வாழ்க்கை முறையும் என்பதை மறந்துவிடக் கூடாது. மன அழுத்தம் போன்ற பல பிரச்சினைகள் பொடுகு உருவாவதற்கு முக்கிய காரணங்கள் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே, வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் அனுபவித்து வாழ பழகிக் கொள்ள வேண்டும். மனதை எப்போதும் அமைதியாகவும் ஆனந்தமாகவும் வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். மன அழுத்தம் வராமல் இருக்க, நமது சூழ்நிலைகளை நல்லவிதமாக அமைத்துக் கொள்ள வேண்டும். பொடுகுப் பிரச்சினைக்கு இயற்கையான முறையில் தீர்வு காண முடியும் என்றாலும்,  மனஅழுத்தம் போன்ற பொடுகு உருவாவதற்கான காரணங்களைக் களையாவிட்டால் முழுமையான பலன் கிடைக்காது. ஆரோக்கியமான, சீரான உணவு மற்றும் முறையான முடி பராமரிப்பு நடைமுறைகள் பொடுகுப்  பிரச்சனைகளை தீர்க்க உதவும் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

நிவாரண நிதி....!

புனித ஹஜ் பயணத்தின்போது  தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிப்பு: 

தமிழ்நாடு மாநில ஹஜ் குழு சார்பில் 13 பேரின் குடும்பங்களுக்கு தலா  இரண்டு இலட்சம் ருபாய் நிவாரணத் தொகை அறிவிப்பு.....!

சென்னை, ஜுலை.09-உலகம் முழுவதும் இருந்து இந்தாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டவர்களில் ஆயிரத்து 301 பேர், வெப்ப அலை உள்ளிட்ட காரணங்களால் மரணம் அடைந்தனர். இவர்களில் 98 பேர் இந்தியர்கள் ஆவார்கள். இந்தியர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது. அவர்களின் உடல்கள் உறவினர்களின் ஒப்புதல் பெற்ற சவுதி அரேபியாவில் அடக்கம் செய்யப்பட்டது. 

தமிழ்நாடு மாநில ஹஜ் குழு அறிவிப்பு:

இந்நிலையில், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மு.அ.சித்தீக் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தாண்டு தமிழகத்தில் இருந்து மொத்தம் 5 ஆயிரத்து 801 பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.. சவுதி அரேபியாவில் இந்தாண்டு கடுமையான வெயில் நிலவியதால், ஹஜ் நாட்களில் புனித பயணம் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர். இதில் 11 பேர் உடல்நலக் குறைவால் இறப்பு எய்தினர் என்றும் அவர் கூறியுள்ளார். இரண்டு பேர் வாகன விபத்தில் உயிரிந்தனர் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 

இறந்தவர்களின் விவரம்:

மேலும் இறந்தவர்களின் முழு விவரங்களும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இராமநாதபுரம் மாவட்டம் ரசிக்கா பீவி, திருநெல்வேலி மாவட்டம் மைதீன் பாத்து, சென்னை நசீர் அகமது, கடலூர் மாவட்டம் அப்துல் ரஹீம் இக்பால், திருவாரூர் மாவட்டம் ஆரிப் சின்னதம்பி ராவுத்தர், மயிலாடுதுறை மாவட்டம் ஃபரீதா பேகம், விருதுநகர் மாவட்டம் ஷம்சுதீன் காதர் பாஷா, கரூர் மாவட்டம் லியாகத் அலி, தஞ்சாவூர் மாவட்டம் அப்துல் வாஹித், திருநெல்வேலி மாவட்டம் இஷா முகம்மது கவுஸ், வேலூர் மாவட்டம் சர்தார் கஃபார் ஆகிய 11 பேர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தனர். மேலும் செங்கல்பட்டு மாவட்டம் இர்ஷாத் பேகம் ஹனீப், செங்கல்பட்டு மாவட்டம் சாதிக் பாஷா கோட்டு ஹனீப் ஆகிய இரண்டு பேர் வாகன விபத்தில் மரணம் அடைந்தனர். 

நிவாரண தொகை அறிவிப்பு:

தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் மூலம் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட பயணிகளில் மரணம் அடைந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க தமிழ்நாடு மாநில ஹஜ் குழு முடிவெடுத்துள்ளது. இந்த தொகை, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிதியில் இருந்து மரணம் அடைந்த புனிதப் பயணிகளின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு செயலாளர் மு.அ.சித்தீக் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

சந்திப்பு....!

காங்கிரஸ் ஊடகம் மற்றும் செய்தி தொடர்பு துறை தலைவர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் மற்றும் மாநில  செயலாளர், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி  அனுசுயா ஆகியோர் பத்திரிகையாளர்கள் சந்திப்பு....!



Monday, July 8, 2024

உடனடி தீர்வு அவசியம்....!

கல்வி முறையில் உள்ள பிரச்சினைக்கு உடனடி தீர்வு அவசியம்....!

தனிமனிதன், சமூகம் மற்றும் நாட்டின் வளர்ச்சி என்பது கல்வியை அடிப்படையாக கொண்டே அமைகிறது. வளர்ந்த நாடுகள் என்று அழைக்கப்படும் பெரும்பாலான நாடுகளில் கல்வி வளர்ச்சி விகிதம் 80 சதவீதற்கும் அதிகமாக உள்ளது.  கல்வியின் முக்கியத்துவம், பயன்பாடு மற்றும் அவசியம் குறித்து அறிவாளிகள் மட்டுமே அறிய முடியும். ஒரு முட்டாள், ஒரு பைத்தியம் மட்டுமே கல்வியால் எந்த பயனும் இல்லை என மறுக்க முடியும். தற்போது நிலவும் சூழநிலையில், ஏழைகள், தொழிலாளர்கள், ஆதரவற்றோர் மற்றும் ஊனமுற்றோர் தங்கள் குழந்தைகளின் கல்வி பற்றி கவலைப்படுவதில்லை. பெரிதும் அக்கறை செலுத்துவதில்லை.

ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துகொண்டு, சட்டம் இயற்றுபவர்கள் படிப்பறிவில்லாதவர்களாக இருந்தாலும், நாட்டின் அமைப்பை நடத்துவதற்கும், சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் பியூன் முதல் ஆட்சியாளர் வரை படித்தவர்கள் மிகவும் அவசியம். நாட்டு மக்களின் எதிர்காலம் படித்த நல்ல அதிகாரிகளை நம்பியே உள்ளது.

ஆனால் மிகப்பெரிய கல்வி பெறாதவர்கள் ஆட்சி செய்யும் சோகம் பெரும்பாலான நாடுகளில் உள்ளது. ஆட்சி அதிகாரம் செய்ய எந்த கல்வித் தகுதியும் தேவையில்லை என்ற நிலை இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து வருகிறது.  

கல்வியறிவு இல்லாத அமைச்சர்கள்:

8வது தேர்ச்சி பெற்று மூன்று முறை மாநில முதலமைச்சராக இருந்தவர்., 12வது வகுப்பு தேர்ச்சி பெற்று மத்திய அமைச்சராக இருந்தவர் என நாட்டில் பட்டியில் நீளுகிறது. வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால், இந்திய அரசியலில் அனைத்து அதிகாரங்களும் நல்ல கல்வி பெறாதவர்களிடமும், அமைச்சர்களிடமும் உள்ளன என்று கூறலாம்.

நமது 76 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இத்தகைய போக்கு தொடர்கிறது.  அனுபவமற்ற மற்றும் குறைந்த தகுதி வாய்ந்த நபரின் கீழ், உயர்தகுதி வாய்ந்த பணியாளர் பணிபுரியும் போது ஏற்படும் முடிவுகளை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?

அமைச்சருக்கு கல்வித் திறன் இருந்தால் மட்டும் போதாது. அவர் தனது அரசியல் கட்சியின் கொள்கை மற்றும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர். இந்திய அரசியலமைப்பு, அதன் ஒருமைப்பாடு மற்றும் உயிர்வாழ்வதைப் பாதுகாப்பதாக ஒவ்வொரு அமைச்சரும் சத்தியம் செய்கிறார். ஆனால் நடைமுறையில் அப்படி நடந்துகொள்வதில்லை.

தேர்தலில் விளையாடும் பிரச்சினை:

இந்திய அரசியலில் பொறாமை என்ற விஷம் புதைந்து கிடக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல், மாறாக எந்தெந்த தொகுதியில் எந்த ஜாதி, மதம் பெரும்பான்மை என்பதை மனதில் வைத்து, பணிகள் செய்யப்படுகின்றன. எந்த ஜாதி பிரிவினையை பொறுத்து படிப்படியாக வெற்றி பெற முடியும் என நினைத்து தேர்தலில் செயல்படுகிறார்கள். இதேபோன்று, வாக்களிக்கும் போது ஜாதி, மதம் பார்க்கிறார்கள். அதனால்தான் தேர்தலில் வெற்றி தோல்வி என்பது செயல்பாட்டின் அடிப்படையில் அல்ல, சாதி மற்றும் மத அடிப்படையில் அமைகிறது.  வாக்குகளை வாங்குவதும் விற்பதும் இப்போது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.

நாட்டின் இன்றைய நிலைக்கு மிகப்பெரிய காரணியாக இருப்பது, நாட்டை ஆளும் குழுவிற்கு எந்த கல்வித் திறனும் தேவையில்லை என்பதை மக்கள் நம்ப வைப்பதாகும். இப்போது வரை, ஆரம்ப வகுப்புகள் முதல் பட்டப்படிப்பு வரை படித்து இருக்க வேண்டும் என்ற கல்வி தகுதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இருக்க வேண்டும் என விதி இருக்கவில்லை. 

வேதனை அளிக்கும் தேர்வு முறை:

மேலும், பள்ளி, கல்லூரி, தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை படிப்புகளின் தேர்வுகள் நடத்தப்படும் முறை வேதனை அளிக்கும் வகையில் உள்ளது. கல்லூரி நிர்வாகமே தேர்வு வினாத்தாள்களை தயாரித்து, தேர்வை நடத்தி பட்டங்களை வழங்குகிறது. இதனால் வினாத்தாள் கசிவு பிரச்சினை உள்ளது. அதாவது தேர்வுத் தாள்கள் தேர்வுக்கு முன் வழங்கப்படுகின்றன. பணம் அல்லது அரசியல் செல்வாக்கு காரணமாக - கடந்த பத்து ஆண்டுகளில் இதுபோன்ற 70-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 

கல்வியின் இந்த பயங்கரமான சூழ்நிலையில், பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, அவர்கள் குறைவாக படித்தவர்கள், அவர்களின் உழைப்பு மற்றும் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள் கீழ்நிலை ஊழியர்கள் தங்கள் கைகளில் பட்டங்களை வைத்திருந்தாலும் முற்றிலும் திறமையற்றவர்களாக இருப்பார்கள். நாட்டின் அமைப்பு எப்படி திறமையற்ற அரசியல்வாதிகளின்  கைகளில் இருக்கும் என்பதையும், அதன் விளைவுகள் எவ்வளவு மோசமானதாக இருக்கும் என்பதையும் வாசகர்கள் தாங்களாகவே கற்பனை செய்து கொள்ளலாம்.

தனியார் மயமாக்கல்:

தனியார் மயமாக்கல் காரணமாக, மருத்துவக் கல்லூரிகளில் கணிசமான எண்ணிக்கையிலான கட்டண சீட்டுகள் உள்ளன. நாட்டிற்கு மருத்துவர்கள் எப்படி வழங்கப்படுவார்கள் என்று நீங்கள் யூகிக்கிறீர்கள், லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள் எப்படிப்பட்ட மருத்துவர்களாக மாறுவார்கள்? நோய்க்கு சிகிச்சை அளிக்கும் திறனும் இருக்காது. நோயாளியின் மீது கருணையும் இருக்காது. இந்த ஊழல் மருத்துவத் துறையில் மட்டும் அல்ல, பி.எட், பி.எச்.டி பட்டங்களை வீட்டில் அமர்ந்து படிக்காமலேயே செய்து விடுகிறார்கள் ஆசிரியர்களின் இந்த பிரச்சனைகள் அனைத்தும் அரசை நடத்துபவர்கள் சார்புடையவர்களாகவும், சுயநலவாதிகளாகவும், கல்வியறிவு குறைவாகவும் இருப்பதால் தான் நடைபெறுகிறது. 

உடனடி தீர்வு அவசியம்:

நாட்டில் தற்போது நிலவும் பல்வேறு பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டுமானால், கல்வித்துறையில் அதிரடியாக சில மாற்றங்களை உடனடியாக கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் கல்வி தகுதி கட்டாயம் தேவை என்ற விதி இருப்பது போன்று, தேர்தலில் போட்டியிட அடிப்படை கல்வி தகுதி கட்டாயம் அவசியம் என்ற விதியை கொண்டு வர வேண்டும். நல்ல கல்வியாளர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களின் திறன்களை கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாடு முழுவதும்  குறிப்பாக, ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒரு நாடு அனைத்துத் துறைகளிலும் வேகமான வளர்ச்சியை எட்ட வேண்டுமானால், அந்த நாட்டில் கல்வித்துறை மிகச் சிறப்பான முறையில் இருக்க வேண்டும். எனவே, கல்வி, மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, அனைத்துத் தரப்பு மக்களும் நல்ல கல்விப் பெற நடவடிக்கைகளை அனைத்து அரசுகளும் எடுக்க வேண்டும். இதன்மூலம் மட்டுமே, நாடு மிகப்பெரிய அளவுக்கு வளர்ச்சியை எட்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Sunday, July 7, 2024

சிறப்பான வாழ்க்கைக்கு....!

சிறப்பான வாழ்க்கைக்கான சில விதிகள்....!

வாழ்க்கை என்பது ஏக இறைவனின் மிகப்பெரிய அருட்கொடைகளில் ஒன்றாகும். நம்பிக்கை, வழிகாட்டுதல், ஆரோக்கியம், வாழ்வாதாரம் மற்றும் மரியாதை ஆகிய எண்ணற்ற அம்சங்களை உள்ளடக்கிய ஒரு அழகிய பொக்கிஷம்தான் வாழ்க்கையாகும். ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணமும் வித்தியாசமானது. இயல்பாகவே ஒவ்வொருவருக்கும் அவரவர் தனிப்பட்ட கொள்கைகள் இருக்கும். நிலையான வாழ்க்கையை நடத்துவதற்கும் ஒழுக்கத்தைப் பின்பற்றுவதற்கும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது மிகவும் முக்கியம். கொள்கைகளின் அடிப்படையில் வாழும் வாழ்க்கை அழகான வாழ்க்கையாக அமைகிறது.

வாழ்க்கை மகிழ்ச்சியான, ஆரோக்கியமான  வாழ்க்கையாக அமைய வேண்டுமானால், ஒவ்வொருவரும் சில விதிகளை தங்களது வாழ்க்கைப் பயணத்தில் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த விதிகளின்படி, வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தால், ஓரளவுக்கு நிச்சயம் வாழ்க்கையில் ஆனந்தம் கிடைக்கும். விதிகளின்படி, வாழ்க்கையை நகர்த்திச் சென்றால், குடும்பத்தில் மகிழ்ச்சி குடி புகும். 

நேர்மறையான சிந்தனை:

வாழ்க்கையில் நேர்மறை சிந்தனை எப்போது இருக்க வேண்டும். நேர்மறையான சிந்தனைகளுடன் இருப்பர்கள் எப்போதும் சாதிக்கிறார்கள். 'நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னால் முடியும். ஏக இறைவனின் கருணையால் நிச்சயம் நான் அந்த பணியை நிறைவேற்றிவிடுவேன்.  நான் எல்லோருரையும் நேசித்து அரவணைத்துச் செல்வேன்' என்ற நேர்மறை சிந்தனைகள் உள்ளவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமல்லாமல், வாழ்க்கையில் மிகப்பெரிய அளவுக்கு சாதனை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் முகங்கள் மட்டுமல்ல உடல் மொழி கூட, பிறரை கவரும் வகையில் அமைந்துவிடுகிறது. 

எனவே, வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்க வேண்டுமானால் எதிர்மறை சிந்தனைகளை கைவிட்டு விட்டு, எப்போதும் நேர்மறை சிந்தனைகளுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும். நேர்மறையான சிந்தனையுடன் கூடிய வாழ்க்கை வாழ்வதும், நமது வாழ்க்கையை நாமே பாராட்டுவதும், தம் மீதும்,  ஒருவரின் திறமை மீதும் நம்பிக்கை வைப்பதும் வெற்றிகரமான வாழ்க்கைக்கு திறவுகோலாகும். நேர்மறை சிந்தனையுடன் தொடர்ந்து கற்றுக்கொள்வதோடு, எப்போதும் எடுத்த வேலையை முடிப்பதும் வெற்றிக்கு முக்கியமாகும். 

நேர்மறை சிந்தனையுடன் நேரமும் வளங்களும் ஒருவருக்கு கிடைக்கும் மிகவும் விலையுர்ந்த ஆசீர்வாதங்கள் ஆகும். அவற்றை ஒருபோதும் வீணாக்காதீர்கள். ஒருபோதும் நியாயமற்ற போட்டியின் ஒரு பகுதியாக இருக்கக்கூடாது. தோல்வி மற்றும் இழப்பின் அபாயங்களைக் குறைக்க நிதானத்துடன் செயல்படுவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நேரத்தை சரியாக திட்டமிட்டு, பணிகளை செய்து வருபவர்களின் வீட்டுக் கதவுகளை வாய்ப்புகள் தட்டும் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. அதனால் தான் 'ஆச்கா காம். கல்பர் நா டால்' (இன்றைய வேலையை நாளைக்கு ஒத்திப் போடாதே) என உர்தூவில் மிக அழகாக சொல்வார்கள். அதற்கு முக்கிய காரணம், தற்போது நம்மிடம் இருக்கும் நேரத்தை பயன்படுத்தி, பணிகளை முடித்துவிட வேண்டும். இந்த வாய்ப்பு, நேரம் மீண்டும் கிடைக்கும் என உறுதியாக சொல்ல முடியாது. 

பிறர் மீது நமது உரிமைகள்:


நமது வீடு, குடும்பம், உறவினர்கள், அண்டை வீட்டார், பயணிகள், கேள்வி கேட்பவர்கள், ஒவ்வொருவருக்கும் நம்மீது சில உரிமைகள் உள்ளன. கடமைகளையும் உரிமைகளையும் சமநிலைப்படுத்தி, நமது உள்நாட்டு மற்றும் சமூகக் கடமைகளை நிறைவேற்ற முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். பிறர் மீது நமக்கு உள்ள உரிமைகள், கடமைகள் ஆகியவற்றை எந்தவித தயக்கமும் இல்லாமல் செய்ய வேண்டும். இதன் காரணமாக தான் அண்டை வீட்டாரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், சரியாக பராமரிக்கப்பட வேண்டும் என இஸ்லாமிய மார்க்கம் மிக அழகாக அறிவுறுத்துகிறது. 

வாழ்க்கையில் சாதித்து, மகிழ்ச்சியாக இருக்க மற்றவர்களின் ஆளுமை மற்றும் செயல்களைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, உங்களது குணாதிசயங்களையும் ஆளுமையையும் தனித்துவமாக வைத்துக் கொண்டு, உங்களது நற்பண்புகளையும் குணங்களையும் மக்கள் பின்பற்றச் செய்ய முயற்சி செய்யுங்கள். உங்களை நீங்களே சவால் செய்துகொள்வது மற்றும் புதிய மாற்றங்களுக்கு எப்போதும் திறந்திருப்பது உங்களை உந்துதலாக வைத்திருக்க ஒரு சிறந்த வழியாகும். ஏக இறைவன் ஒவ்வொரு மனிதர்களுக்கும், அற்புதமான ஆற்றல்களை வழங்கியுள்ளான். இந்த ஆற்றல்களை மனிதர்கள் யாரும் சரியாக, முறையாக பயன்படுத்துவது இல்லை. இதன் காரணமாக, அவர்களின் வாழ்க்கை ஒரே இடத்தில் தேங்கி கிடக்கிறது. ஏக இறைவன் வழங்கியுள்ள ஆற்றல்களை சரியான நேரத்தில் முறையாகப் பயன்படுத்தினால், நிச்சயம் தனித்துவமாக ஒருவர் பயணிக்க முடியும். பிறரை கவர முடியும். 

ஆரோக்கியம் மிக முக்கியம்:

ஆரோக்கியம் என்பது வாழ்க்கையின் விலைமதிப்பற்ற சொத்தாகும். எனவே உங்கள் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களின் ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் முன்னேற்றத்தை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். ஆரோக்கியமான மனம்,  இதயத்திலிருந்து வருகிறது என்பதை மறந்துவிடாதீர்கள். எப்போதும் பணி, வேலை என்ற நிலையில் இருந்துவிட்டு, உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் இருந்துவிடாதீர்கள். சரியான ஓய்வு, முறையான தூக்கம், ஓரளவுக்கு நல்ல உடற்பயிற்சி, நல்ல ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம் என அனைத்தையும் ஆரோக்கிய வாழ்க்கைக்கு தேவையான முக்கிய அம்சங்களாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்க பணம் மட்டுமே அவசியம் இல்லை. ஆரோக்கியமும் மிகமிக அவசியம். ஆரோக்கியம் இருந்தால் தான், குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி கிடைக்கும். 

ஆரோக்கிய வாழ்க்கைக்கு,  ஆரோக்கிய மனநிலை கண்டிப்பாக இருக்க வேண்டும். எனவே,  யாரையும் புறக்கணிக்காமல், அனைவருக்கும் மதிப்பு அளித்து, எப்போதும் பழகுவதை உங்கள் குணங்களில் ஒன்றாக மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் விருப்பப்படி ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் அடிக்கடி பேசுங்கள். அவர்களிடம் கலந்துரையாடி, ஆலோசனை கேளுங்கள். அவர்கள் தரும் ஆலோசனைகள் பயன் உள்ளதாக இருக்கும் என நீங்கள் கருதினால், அதனை வாழ்க்கையில் செயல்படுத்துங்கள். அதன்படி வெற்றி கிடைத்தால், அந்த ஆலோசனைகளை தந்தவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு பாராட்டு கூறி, வாழ்த்து தெரிவியுங்கள். இதன்மூலம், உங்கள் மனம் மட்டுமல்ல, மற்றவர்களுடனான உறவுகளும் மேலும் மேம்படும். 

உளவியல் ரீதியான செயல்கள்:

வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்க வேண்டுமானால், சில உளவியல் ரீதியான செயல்கள் மிகமிக அவசியம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சிலர் எப்போதும் பேசிக் கொண்டே இருப்பார்கள். சில பேசவே மாட்டார்கள். இந்த இரண்டு பண்புகளும், ஒருவிதத்தில் பயன் தந்தாலும், அதன்மூலம் ஒருசில நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய நிலை உருவாகிறது. எனவே, தேவைக்கேற்ப பேசுவது  நல்லது. இதேபோன்று, எதிர்மறை சிந்தனைகள் கொண்ட மக்களுடன் பழகாமல் இருப்பது நல்லது.

அத்துடன், மற்றவர்களைப் பற்றி ஒருபோதும் ஒரு கருத்தை நாமே உருவாக்கி கொள்ளக் கூடாது. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்த கூடாது. உலகில் மிகப்பெரிய அளவுக்கு பிரச்சினைகள் ஏற்பட, மற்றவர்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பதும், அந்த சிந்தனையிலேயே வாழ்வதும் முக்கிய காரணமாக இருக்கிறது என உளவியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். மற்றவர்களின் நலனின் மட்டுமே நாம் அக்கறை செலுத்த வேண்டிமே தவிர, அவர்கள் என்ன செய்கிறார்கள் என உளவுப் பார்க்கக் கூடாது. இப்படி உளவுப் பார்ப்பது நமது வாழ்க்கையை சீர்குலைத்துவிடும். மகிழ்ச்சியை பறித்துவிடும். 

எப்போதும், எங்கும் உண்மையை நிலையுடன் நாம் இருக்க வேண்டும். குடும்பத்தில் உண்மையைச் சொல்ல வேண்டும். பொய்யான தகவல்களை சொல்லக் கூடாது. எந்த நிலையிலும் பொய் சொல்லாதீர்கள். உண்மை பேசுவதன் மூலம் குடும்பத்தில் உள்ளவர்கள் மத்தியில் உங்களை குறித்து ஒரு நம்பிக்கை உருவாகும். இது வாழ்க்கையின் வெற்றிக்கு மட்டுமல்ல, மகிழ்ச்சிக்கும் வழி வகுக்கும். இதேபோன்ற, உங்களிடம் இருக்கும்  தவறுகளைச் சரிசெய்து, புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

அத்துடன், உங்கள் ஆளுமை அல்லது மொழியால் யாரையும் புண்படுத்தாதீர்கள். தவறு நடந்தால் சரியான நேரத்தில் மன்னிப்பு கேளுங்கள். எந்த நிலையிலும் பொய் சொல்லாதீர்கள். யாரோ ஒருவர் உங்களிடம் மன்னிப்பு கேட்டால், மன்னிக்கவும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பழகுங்கள்.  இதுபோன்ற, முக்கிய கொள்கைகளை, விதிகளை ஒருவர் வாழ்க்கையில் நான் பின்பற்றினால், நிச்சயம் அவரது வாழ்க்கை ஆனந்த வாழ்க்கையாக, ஓரளவுக்கு நிறைவான வாழ்க்கையாக இருக்கும் என உறுதியாக கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Saturday, July 6, 2024

வேலையின்மை அதிகரிப்பு - முக்கிய காரணம்....!

வேலையின்மை அதிகரிப்புக்கு கல்வி, சுகாதாரம் புறக்கணிப்பே முக்கிய காரணம்....!

புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் கருத்து.....!!

ஒன்றியத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க., தற்போது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மீண்டும் ஆட்சியை தொடர்கிறது. முந்தைய பத்து ஆண்டு கால தனது ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி, வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்க உரிய நடவடிக்கைகளை எதுவும் எடுக்கவில்லை. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும் என்று தாம் அளித்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. 

மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ள மோடி, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதன்மூலம் மட்டுமே, நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்களின் வாழ்வில் ஒளி கிடைக்கும் என அவர்கள் கருத்து கூறுகிறார்கள். ஆனால், அதற்கான முயற்சிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. 

கடந்த பத்து ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு முன்வைத்த வெற்று முழக்கங்கள், தற்போது மீண்டும் தொடர்கின்றன என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வதில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது என்றே கூறலாம். இந்த வெற்று முழக்கங்கள் தற்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து அண்மையில் கருத்து கூறியுள்ள பா.ஜ.க. மூத்த தலைவரும் பொருளாதார நிபுணருமான சுப்ரமணியன் சாமி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். 

அமர்த்தியா சென் கருத்து:

இந்நிலையில், நோபல் பரிசு பெற்ற புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், நாட்டில் வேலையின்மை அதிகரிப்பு குறித்து தமது வேதனை தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினைக்கு கல்வி, சுகாதாரம் ஆகியவை புறக்கணிப்பு செய்வதே முக்கிய காரணம் என அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் போல்பூரில் தனியார் அறக்கட்டளை ஏற்பாடு செய்த 'நாம் ஏன் பள்ளிக்குச் செல்கிறோம்: ஒத்துழைப்பில் ஒரு பாடம்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பங்கேற்றார். அப்போது பேசிய சென், “கல்வி முறை குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடையவில்லை. இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணம், கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் புறக்கணிக்கப்படுவதே ஆகும்” என உறுதிப்பட தெரிவித்தார். அவர் தனது உரையில், 'சில நாடுகள் கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பிற்கு அதிக வளங்களைச் செய்து வருகின்றன' என்றும் குறிப்பிட்டார்.

'இத்தகைய சூழ்நிலையில், தனியார் ஆராய்ச்சி நிறுவனமான சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் எகனாமியின் (சிஎம்ஐஇ) சமீபத்திய தரவு, இந்தியாவில் வேலையின்மை விகிதம் இந்த ஆண்டு மே மாதத்தில் 7 சதவீதத்தில் இருந்து ஜூன் மாதத்தில் 9 புள்ளி 2 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்திய அரசு, இப்போது வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி கவலைப்படுகிறது. இதனால்தான்  பிரச்சனை நீடிக்கிறது' என்றும் சென் சுட்டிக் காட்டினார். 

கவலை அளிக்கும் கல்வி, சுகாதாரம் நிலை:

ஐரோப்பா, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் வேலையின்மை பிரச்சினையை ஏன் சந்திக்கவில்லை என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும். “அவர்கள் கல்வியைப் பெற்று மருத்துவத்தில் கவனம் செலுத்தியதால், படித்த மற்றும் ஆரோக்கியமான ஒருவர் தன்னை வேலைக்குத் தகுதியுடையவராக மாற்ற அதிக முயற்சி எடுக்க முடியும். இந்தியாவில் தற்போதுள்ள கல்வி மற்றும் சுகாதார அமைப்பின் நிலை உண்மையில் கவலைக்குரியது" என்றும் சென் வேதனை தெரிவித்தார். 

ரவீந்திரநாத் தாகூர் சாந்திநிகேதனில் உள்ளடங்கிய கல்வி, உலகம் முழுவதிலுமிருந்து ஆசிரியர்களை வரவழைத்து மாணவர்களின் ஆளுமை வளர்ச்சியில் கவனம் செலுத்துவதை எவ்வாறு அறிமுகப்படுத்தினார் என்பதை சென் மேற்கோள் காட்டினார். 'ரவீந்திரநாத் தாகூர் பள்ளிக்குச் சென்று தனியாகப் படிக்கவில்லை. ஆனால் ஒரு பள்ளி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அவருக்குத் தெளிவான யோசனை இருந்தது. சாந்திநிகேதனில் பள்ளி தொடங்கப்பட்டபோது, ​​எனது குடும்பத்தைச் சேர்ந்த பலர் அதில் இணைந்திருந்தனர். என் அம்மா அமிதா சென் அந்தப் பள்ளியில் படித்தவர். நூறு ஆண்டுகளுக்கு முன்பு, மாணவிகள் ஜுஜுட்சு (ஜப்பானிய தற்காப்புக் கலை) கற்றுக்கொண்ட பள்ளி இது. என் அம்மா ஜப்பானைச் சேர்ந்த ஒரு பயிற்றுவிப்பாளரிடம் ஜூடோ கற்றுக்கொண்டார். ஜப்பானிய பயிற்றுவிப்பாளர் அந்த இடத்தை விட்டு வெளியேறினார். ஆனால் பாரம்பரியம் தொடர்ந்தது. ஆனால் தற்போது நாட்டில் இத்தகைய நிலை இல்லை' என்றும் அவர் குறிப்பிட்டார்.  

குழந்தைகளின் சிந்தனைகள்:

பள்ளிக்குச் செல்லும் செயல் ஒரு குழந்தையின் சிந்தனையை முக்கியமான வழிகளில் எவ்வாறு வடிவமைக்கும் என்பதைப் பற்றி பேசிய சென், "ஒருவர் பள்ளிக்குச் செல்லும்போது, ​​​​அவர் அல்லது அவள் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிறைய நபர்களையும் நண்பர்களையும் சந்திப்பார். இந்தியாவை ஒரு இந்து நாடாக மாற்றலாம் என்று விவாதங்கள் நடந்தாலும், குழந்தைகள் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் வேறுபாடு காட்டவில்லை என்பது உரையாடல்கள் மூலம் தோன்றுகிறது" என்றும் தெரிவித்தார். 

பா.ஜ.க.விற்கு எதிர்ப்பு:

தொடர்ந்து பேசிய சென், 'அண்மையில் நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் இந்திய மக்கள் பா.ஜ.க.வின் இந்து நாடு என்ற சிந்தனையை தங்களது தீர்ப்பு மூலம் முறியடித்தனர். நாட்டை ஒரு இந்து ராஷ்டிராவாக மாற்றுவதற்கான முயற்சிகளை மக்கள் விரும்பவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. ராமர் கோவிலின் இல்லமான அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க. வெற்றிபெறவில்லை. இதன்மூலம்,  இந்தியாவை இந்து ராஷ்டிராவாக மாற்றும் முயற்சி  இந்திய வம்சாவளி மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெரிய கோவில் கட்டப்பட்ட இடத்தில், ஒரு மதச்சார்பற்ற வேட்பாளர், இந்து ராஷ்டிரத்திற்காக பேசிய ஒருவரை தோற்கடித்தார்' என்று கூறினார்.

மேலும், இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட புதிய கிரிமினல் சட்டங்கள் அமல்படுத்துவதற்கு முன்பாக விரியான ஆலோசனைகள், விவாதங்கள் மற்றும் ஆய்வுகள் நடைபெறவில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்தார். அதை நடைமுறைப்படுத்துவதற்கு முன் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து குறிப்பிட்ட வல்லுநர்களுடன், பரந்த அளவிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அமர்த்தியா சென் விமர்சனம் செய்தார்.  இந்த கருத்தரங்கில், சென்னுடன் இணைந்து புத்தகங்களை எழுதிய பொருளாதார நிபுணர் ஜீன் டிரேஸ் மற்றும் பல பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Friday, July 5, 2024

ஒரு அழகிய கலை....!

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு அழகிய கலை....!

உலகில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஆனந்தமும், மகிழ்ச்சியும் தவழ வேண்டுமானால், அங்கு குழந்தைகளின் சத்தங்கள் இருந்துகொண்டே இருக்க வேண்டும். குழந்தைகளின் அழகிய முறுவல், ஆனந்த புன்சிரிப்பு, கோபமான அழகை என ஒவ்வொரு அசைவுகளும், அந்த குழந்தையை பெற்ற தாய் தந்தையை மட்டுமல்லாமல், குடும்பத்தில் உள்ள மற்றவர்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். அதனால் தான், 'குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள், மழலைச்சொல் கேளாதவர்' என திருவள்ளுவர் மிக அழகச் சொல்லி சென்றுள்ளார்.  

ஏக இறைவனின் மிகப்பெரிய அருட்கொடையாக குழந்தைகள் இருந்து வருகிறார்கள். திருமணம் ஆகி பல ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களிடம் கேட்டால், குழந்தைகளின் அருமை நமக்கு நன்கு தெரியவரும். தற்போது நவீன விஞ்ஞான யுகத்தில், குழந்தை வளர்ப்பில் மிகப்பெரிய அளவுக்கு அக்கறை செலுத்தப்படுவதில்லை. பொருளாதார நெருக்கடி காரணமாக தாய், தந்தை ஆகிய இரண்டு பேரும், பணிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயச் சூழ்நிலை தற்போது இருந்து வருகிறது. எனவே, அவர்கள் இருவரும் குழந்தை வளர்ப்பில் தனிக் கவனம் செலுத்த மறந்துவிடுகிறார்கள். இதனால், குழந்தைகளின் எதிர்காலம் பெரிதும் பாதிப்பு அடைந்துவிடுகிறது என்பதை அவர்கள் நன்கு அறிந்தும், அறியாமல் இருப்பதைப் போன்று இருந்துவிட்டு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு செல்கிறார்கள்.

குழந்தை வளர்ப்பு சுமை இல்லை:

கடந்த 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்பு, ஒவ்வொரு குடும்பத்திலும் நான்கு, ஐந்து ஏன் பத்து குழந்தைகள் கூட இருந்தன. அந்த குழந்தைகள் அனைவரிடமும் ஒரே விதமான அன்பையும், பாசத்தையும் செலுத்தி, பெற்றோர்கள் வளர்த்தார்கள். அனைத்து உறவினர்களும் பாச மழையை பொழிந்தார்கள். இதனால், அனைத்துக் குடும்பங்களிலும், மகிழ்ச்சியோ, மகிழ்ச்சி குடிக்கொண்டிருந்தது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. ஒரு குழந்தை இருந்தாலே போதும் என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள். மேலும், குழந்தை வளர்ப்பை மிகப்பெரிய சுமையாக அவர்கள் கருதுகிறார்கள். இப்படி சுமையாக கருதுவதால் தான், குழந்தைகளின் வளர்ப்பில் தனி அக்கறை செலுத்தாமல், மற்றப் பணிகளில் கவனத்தைத் திருப்பி விடுகிறார்கள். இத்தகைய போக்கு நல்ல சமுதாயம் உருவாக தடையாக இருக்கிறது என்றே கூறலாம். 

உலகம் முழுவதும் தற்போது குற்றச்செயல்கள் அதிகரிக்க 'குழந்தை வளர்ப்பில் அவர்களின் பெற்றோர்கள், முழு ஈடுபாடுடன் செயல்படுவதில்லை' என்பதே முக்கிய காரணம் என உளவியல் மருத்துவர்கள் கருத்து கூறுகிறார்கள். ஒரு நல்ல குழந்தை, தீய குழந்தையாக மாற, சுற்றுச்சூழல் மட்டுமே, காரணம் என ஒருபோதும் கூற முடியாது. பெற்றோர்களும், குழந்தைகளின் குணம், செய்கை, அவர்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றில் தனி அக்கறை செலுத்தாமல் இருந்து விடுகிறார்கள். இதனால், தங்களைக் கேட்க ஆளே இல்லை என்ற மனப்பான்மையுடன் வளரும் குழந்தை, எதிர்க்காலத்தில், தீயச் செயல்களில் ஈடுபடுகிறது. 

குழந்தை வளர்ப்பு ஒரு கலை:

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு அழகிய கலை என்பதை பெற்றோர்கள் உணர்ந்துகொண்டால், குழந்தை வளர்ப்பு சுமையாக இருக்காது. ஒருபோதும் பாரமாக இருக்காது. அது, அற்புதமான கலையாக மாறிவிடும். ஒவ்வொரு நாளும் குழந்தையின் முகத்தைப் பார்க்கும்போது, உள்ளத்தில் மகிழ்ச்சி பிறக்கும், ஆனந்தம் உருவாகும். பல தாய்மார்கள் தங்கள் குழந்தை சாப்பிடுவதில்லை அல்லது சாப்பிட்டால் வயிறு நிரம்பாமல் மிகக் குறைவாகவே சாப்பிடுகிறது என்று புகார் கூறுகின்றனர்.

தாய்மார்கள் தங்கள் குழந்தை சரியாக சாப்பிட என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருந்து வருகிறார்கள். இதேபோன்று, பல தாய்மார்கள் தங்கள் குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் அறிந்திருப்பதாகவும் புரிந்துகொள்வதாகவும் உணர்கிறார்கள், ஆனால் அது எப்போதும் சாத்தியமில்லை.

உணவின் அடிப்படையில் குழந்தையின் வயது மிகவும் முக்கியமானது. குழந்தைக்கு ஒரு வயது முடிந்து, காலையில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை என்றால், அவர் தனது நிலையை விவரிக்கும் நிலையில் இல்லை என்பதை தாய்மார்கள் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைக்கு எப்பொழுதும் முழு கிண்ணத்தையும் ஊட்ட வேண்டும் என்று தாய்மார்கள் நினைக்கக்கூடாது. சிறிது கூட சாப்பிட்டால், கவலைப்பட வேண்டாம். சில சமயங்களில் குழந்தைகள் அதிகமாக தண்ணீர் குடித்திருப்பார்கள். சில சமயங்களில் உடல்நிலை சரியில்லாமல் அல்லது உணவு செரிக்கவில்லை என்ற காரணத்தால் குறைவாக உண்ணுவார்கள்.

வலுக்கட்டாயம் வேண்டாம்:

அதேநேரத்தில், குழந்தை தினமும் எவ்வளவு சாப்பிடுகிறது என்பதையும் தற்போது, அதைவிட குறைவாகவோ சாப்பிடுகிறதா என்பதையும் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் செயல்களை கண்டு, அமைதியாக இருப்பது நல்லது. சில சமயங்களில் குழந்தை சாப்பிட மனதளவில் தயாராக இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த விஷயத்தில் குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக வழங்கப்படும் எந்த உணவும் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். குடும்பத்தில் மூன்று குழந்தைகள் இருந்தால், மூவரின் உளவியல் ஒரே மாதிரியாக இருக்கும் என்று அவசியமில்லை. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு சவாலை கொண்டுவருகிறது. பண்புகளுடன் இருக்கிறது. குழந்தை தாயின் மனதுடன் சிந்திக்காது. தாய்தான்,  பிரச்சனைகளை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். குழந்தையின் உணவில் சத்துக்கள் நிரம்பவில்லை என்றால், குழந்தையின் உணவை மூன்றாவது நாளில் மாற்றுவது முக்கியம்.

தனிக் கவனம் செலுத்துவோம்:

உலகில் ஒவ்வொரு குடும்பங்களிலும் பிரச்சினைகள் இருந்துகொண்டே இருக்கின்றன. பிரச்சினைகள் இல்லாத குடும்பங்களே இல்லை என உறுதியாக கூறலாம். இத்தகைய பிரச்சினைகளுக்கு நடுவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வளர்ப்பில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகள், தங்களுக்கு பாரம் என ஒருபோதும் நினைக்காமல், அவர்களின் நலனில் தனி அக்கறை எடுத்துக் கொண்டு, செயல்பட வேண்டும். ஒரு நல்ல குடும்பம், ஒரு நல்ல சமுதாயம் உருவாக வேண்டுமானால், ஆரோக்கியமான சிந்தனைகளுடன் கூடிய குழந்தைகள் மிகமிக அவசியம். இதைக் கவனத்தில் கொண்டு, ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் குழந்தைகள் மீது பாசத்தைப் பொழிந்து, அதேநேரத்தில் சில நேரங்களில் கண்டிப்புடன் நடந்துகொண்டு, குழந்தைகளை வளர்க்க வேண்டும். இதன்மூலம் மட்டுமே குடும்பத்தில் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும் என்பதையும், அதன்மூலம் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் நன்மை கிடைக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

Thursday, July 4, 2024

வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான் கன்னிப் பேச்சு....!

 *சிறுபான்மையின மக்கள் மீதான தாக்குல்களை இரும்பு கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்.

* அலட்சியமாக செயல்படும் தேசிய தேர்வு முகமையை உடனே கலைத்துவிட வேண்டும்.

* மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியில் சேருவதற்கான போட்டி தேர்வுகளை நடத்தும் உரிமையை மாநில அரசுகளின் கைகளில் ஒப்படைக்க வேண்டும்.

* நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்.

* கிரிமினல் சட்டங்களை அமல்படுத்தப்படுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

* மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

மாநிலங்களவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான் கன்னிப் பேச்சு:

புதுடெல்லி, ஜுலை05- மாநிலங்களவை உறுப்பினராக கடந்த 2ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர், வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாத்தில் கலந்துகொண்டு, உரையாற்றினார். அந்த உரையின் முழு விவரம் இதோ:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இந்த அவைக்கு நான் வந்து இருக்கிறேன். அதற்காக எங்கள் தலைவர் பனக்காடு செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றியையும் பாராட்டுதல்களையும் கூறிக் கொள்கிறேன். இ.யூ.முஸ்லிம் லீகின் மாநிலங்களவை தலைவராக இருக்கும் அப்துல் வஹாப் அவர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அவையில் என்னுடைய கன்னிப்பேச்சை பேச எனக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு அவர் வழங்கி இருக்கிறார். இந்த வாய்ப்பை நான் எப்போது மறக்க மாட்டேன். 

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாத்தில் பங்கேற்று பேசுவதில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. குடியரசுத் தலைவர்  பதவி என்பது பெண்களுக்கு உரிய அதிகாரம் அளிப்பதுடன் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு பதவி என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தவும் மிகச் சிறந்த முறையில் பணியாற்றுவதற்கு வாய்ப்பு அளிக்கும் ஒரு அதிகாரம் அதுவாகும்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம்:

எனினும், மிகவும் வேதனையுடன் நான் இங்கு ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன். அரசு கட்டாயப்படுத்தி ஒரு உரையை குடியரசுத் தலைவரிடம் கொடுத்து வாசிக்க வைத்துள்ளது. பல முக்கிய அம்சங்கள் இந்த உரையில் இடம்பெறவில்லை. அதில் முதலாவதுதாக சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது குறித்து இந்த உரையில் எந்த தகவலும் இடம்பெறவில்லை. சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது அரசியலமைப்பு சட்டம் 64ன்படி, வழங்கப்பட்டுள்ள உரிமையாகும். அதன்படி, ஒவ்வொரு 10 ஆண்டுக்கும், அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும். 

சாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் அவசியம் நடத்த வேண்டுமெனில், அரசியலமைப்பு சட்டம் 64ல் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு துறைகளில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்கள் அரசு மற்றும் அரசின் துறைகளில் பங்ககெடுக்க வேண்டுமானால், அதற்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு கட்டாயம் நடத்தப்பட்டு, அவர்களின் விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும். எனவே தான், அரசியலமைப்பு மற்றும் சமூக மேம்பாடு அமைப்புகள் சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என வலியுறுத்தி வருகின்றன. 

இதன் காரணமாக தான் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகிறார். ஆனால் ஒன்றிய அரசு இந்த விவகாரத்தில் எந்தவித முடிவும் எடுக்காமல் மவுனம் கடைப்பிடித்து வருகிறது. 

மாநிலங்களுக்கு உரிய நிதி:

என்னுடைய மாநிலம் தொடர்பாக நான் இங்கு சில விவரங்களை கூற விரும்புகிறேன். பொருளாதாரம் உள்ளிட்ட பல துறையில் கேரள மாநிலம் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது. ஆனால் ஒன்றிய அரசு, கேரளாவிற்கு உரிய நிதி பங்களிப்பை வழங்காமல் வளர்ச்சிப் பணிகளுக்கு தடையாக உள்ளது. இதேபோன்று, அண்டை மாநிலமான கர்நாடகாவும் தங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாத காரணத்தால் உச்சநீதிமன்றத்தை அணுகியது. அதன்மூலம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வறட்சி நிவாரண நிதியை ஒன்றிய அரசிடம் இருந்து கர்நாடகா பெற்றது. இந்த அரசியலமைப்பு சட்டத்தின்படி, பன்முகத்தன்மை கொள்கையை கடைப்பிடிக்காமல் ஒன்றிய அரசு செயல்பட்டால், மாநிலங்களில் வளர்ச்சிப் பணிகள் எப்படி நடைபெறும். 

தாக்குதல்கள் தடுத்து நிறுத்த வேண்டும்:

தலித் மற்றும் சிறுபான்மையின மக்கள் மீதான தாக்குதல்கள் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜுன் மாதத்தில், பல சம்பங்கள் நடைபெற்று இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. பிரதமர் பேசும்போது நாட்டில் உள்ள மக்கள் மட்டுமல்லாமல், உலகமே கூர்ந்து கவனிக்கிறது. ஆனால் பிரதமர் ஒரு சமுதாய மக்களை மட்டும் குறிவைத்து தாக்கி பேசி வருகிறார். இந்த பேச்சுகள் மூலம் சிறுபான்மையின சமுதாய மக்கள் மீதான தாக்குதல்கள் இன்னும் அதிகரிக்ககின்றன. மத்திய பிரதேசம், ராய்ப்பூர், உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோ, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் இதுபோன்று சம்பவங்கள் நடைபெற்ற உயிரிழப்பு ஏற்பட்டுள்ளன. சிறுபான்மையின மக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. வீடுகள் புல்டோர் மூலம் இடிக்கப்பட்டன. 

சிறுபான்மையின மக்களுக்கு எதிரான இதுபோன்ற தாக்குதல் சம்பங்கள் மற்றும் வெறுப்பு பேச்சுகள் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறத்தியுள்ளது. மாநில அரசுகள் தாங்களே முன்வந்து தாக்குல்களை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் உச்சநீதிமன்றம் கண்டிப்பாக உத்தரவிட்டப் பிறகும், தாக்குதல் சம்பவங்களையும் வன்முறையும் தடுத்து நிறுத்த ஒன்றிய அரசு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. புலனாய்வு அமைப்புகளும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றன. 

பிரதமரின் வெறுப்பு பேச்சுகள், சிறுபான்மையின மக்கள் மீதான தாக்குதல்களை மேலும் அதிகரிக்க வழி வகை செய்கிறது. எனவே, நாட்டு மக்களை, இதுபோன்ற வன்முறை தாக்குதல்களில் இருந்து அரசு பாதுகாக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். அதன்மூலம், அரசியலமைப்பு சட்டம், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஆகியவற்றை அரசு பாதுகாக்க வேண்டும். அத்துடன் உச்சநீதிமன்றம்தின் தீர்ப்புக்கு மதிப்பு அளித்து அதை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கிரிமினல் சட்டங்கள் மறுபரிசீலனை:

கிரிமினல் சட்டங்கள் குறித்தும் சில கருத்துகளை நான் கூற விரும்புகிறேன். புதிதாக மாற்றம் செய்யப்பட்டு ஜுலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள கிரிமினல் சட்டங்கள், நாட்டு மக்களை மேலும் துன்பங்களுக்கு ஆளாக்கும் சட்டங்களாக உள்ளன. கடந்த 100 ஆண்டுகளாக அமலில் உள்ள சட்டங்களை மாற்றிவிட்டு, புதிய சட்டங்கள் கொண்டு வந்து இருப்பதால், உச்சநீதிமன்றம் மட்டுமல்ல, அனைத்து நீதிமன்றங்களில் ஒவ்வொரு பிரிவு குறித்து சந்தேகங்கள், கேள்விக்குறிகள் ஏற்படும். நாட்டின் சட்டத்தை பாதுகாக்கவும் அமல்படுத்தவும் எவ்வளவு நேரம் பிடிக்கிறது என்பதை வழக்கறிஞராக உள்ள உங்களுக்கு நன்கு தெரியும். 

புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவுக்கு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. தாங்கள் குற்றம் செய்து இருக்கிறோமா, அல்லது செய்யாமல் இருக்கிறோமா என்ற சந்தேகங்கள் மக்களுக்கு ஏற்பட்டுள்ளன. ஏனெனில், அவசரக் கோலத்தில் அனைத்தும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. எனவே, நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமா, காவல்துறை அதிகாரிகளிடம் செல்ல வேண்டுமா என பல கேள்விகள், சந்தேகங்கள் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. 

தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள கிரிமினல் சட்டங்கள் மூலம் வழக்கைப் பதிவு செய்வது தொடர்பாகவும் காவல்துறைக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் புதிய கிரிமினல் சட்டங்கள் மூலம் காவல்துறையின் அத்துமீறல்கள் தான் அதிகம் ஏற்படும். போலீஸ் ராஜ்ஜியம் நடைபெறும். எனவே, இந்த விவகாரத்தில் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். கிரிமினல் சட்டங்கள் குறித்து நாட்டு மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் பயத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தேசிய தேர்வு முகமை தேவையில்லை:

நீட் விவகாரத்தை எடுத்துக் கொண்டால், நீட் தேர்வு நடத்தப்படும் முறையில் மிகப்பெரிய அளவுக்கு முறைகேடுகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக கடின உழைப்பு, பயிற்சி எடுத்து நீட் தேர்வில் கலந்துகொண்ட 24 இலட்சம் மாணவர்கள் தற்போது பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நீட் தேர்வு விவகாரத்தில், அரசு மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், முகவர்கள் செய்த மோசடிகள், முறைகேடுகள் காரணமாக, மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. 

ஒரு மாணவர் மட்டுமே முறைகேட்டில் ஈடுபட்டால், அந்த தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதை நாம் நன்கு அறிவோம். யார் முறைகேட்டில் ஈடுபட்டு, மருத்துவப் படிப்பில் சேர்ந்து இருக்கிறார் என்பதை நாம் அறிய முடியாது. எனவே, இந்தாண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வை முழுவதும் ரத்து செய்துவிட்டு, புதிதாக தேர்வை நடத்த வேண்டும். இதன்மூலம் மட்டுமே, லட்சக்கணக்கான மாணவர்களுக்கு நீதியை வழங்க முடியும். 

தேசிய தேர்வு முகாமை நடத்திவரும் தேர்வுகளில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே தேசிய தேர்வு முகமையை கலைத்துவிட வேண்டும். மாநில அரசுகளிடம் தேர்வு நடத்தும் உரிமையை அளிக்க வேண்டும். மாநில அரசுகள் மிகச் சிறந்த கல்வி முறையை கடைப்பிடித்து வருகின்றன. 

வாக்களிக்கும் உரிமை:

வாக்குரிமை குறித்து தேர்தல் ஆணையம் நல்ல சிந்தனையுடன் இருந்து வருகிறது. வாக்களிக்க உரிமையுள்ள வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது. ஆனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வெளிநாடுகளில் வாழும் இந்திய தொழிலாளர்கள் கோடிக்கணக்கான மக்கள், தங்களது வாக்குரிமைய பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்திய மக்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்தும் வகையில் அரசு புதிய முயற்சிகளை எடுக்க வேண்டும். 

இவ்வாறு தனது கன்னிப்பேச்சில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலங்களவை உறுப்பினர் வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான், பல்வேறு விஷயங்கள் குறித்து மிகவும் தெளிவாக உரையாற்றினார். 

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Wednesday, July 3, 2024

ஆளுமையை மேம்படுத்தும் அம்சங்கள்....!

பெண்களின் ஆளுமையை மேம்படுத்தும் முக்கிய அம்சங்கள்....!

வாழ்க்கையில் ஒருவர் வெற்றியை அடைய அல்லது வெற்றிகரமான நபராக மாறுவதற்கு பல முக்கிய அம்சங்கள் அவசியம் தேவை. சில சமயங்களில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் சிறு தோல்விகளால் மனம் தளர்ந்து, தங்களது முயற்சிகளை விட்டுவிடுவார்கள். அவர்கள் தங்களது முயற்சிகளை கைவிடாமல் இலக்கை நோக்கி தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். இந்த முயற்சியே வெற்றிக்கான திறவுகோல் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

வெற்றிக்கான விதிகள்:

வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் எந்த பணியிலும் வெற்றியை அடைய சில விதிகளை உருவாக்குவது மிகவும் முக்கியம். இந்தக் கொள்கைகளைப் பின்பற்றினால் மட்டுமே வெற்றி சாத்தியமாகும். வெற்றியை அடைய அல்லது வெற்றிகரமான நபராக மாறுவதற்கு பல முக்கிய அம்சங்கள், பண்புகள், செயல்பாடுகள் மிகவும் அவசியமாகும். புகழ்பெற்ற கால்பந்து வீரர் பீலேவின் கூற்றுப்படி, 'வெற்றி என்பது தற்செயலானது அல்ல. இது கடின உழைப்பு, விடாமுயற்சி, கற்றல், படிப்பது, தியாகம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் செய்வதை நேசிப்பதன் அல்லது கற்றுக்கொள்ள முயற்சிப்பதன் விளைவாகும்.' என்னவொரு அற்புதமான வார்த்தைகள். 

பெண்களின் ஆளுமை:

பெண்கள்  தங்கள் ஆளுமையை மேம்படுத்த சில விதிகளை, அம்சங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதன்படி, வாழ்க்கையில் வெற்றிக்கு அடிப்படையாக இருக்கும் தெளிவான மற்றும் குறிப்பிட்ட இலக்குகளை அமைக்க வேண்டும். ஒருவரின் இலக்குகள் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக அவருக்கு வெற்றி கிடைக்கும். 

அத்துடன், விடாமுயற்சி மற்றும் நிலையான கடின உழைப்பு ஆகியவை வெற்றியின் முக்கிய தூண்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.  துன்பம் வந்தாலும் தொடர்ந்து உழைக்க வேண்டும். பெண்கள் தங்களது கல்வியைத் தொடரவும், புதிய திறன்களையும் அறிவையும் பெற எப்போதும் முயற்சி செய்ய வேண்டும்.. பெற்ற தகவலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். தொடர்ச்சியான கற்றல் நம் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நேர்மறை சிந்தனை: 

ஓரளவிற்கு வெற்றியும் தோல்வியும் நமது சிந்தனையைப் பொறுத்தது. எனவே நேர்மறை சிந்தனையை ஏற்று சிரமங்களை வாய்ப்புகளாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும். நேரத்தை மதிப்பிடுவதும் நேரத்தை சரியாகப் பயன்படுத்துவதும் வெற்றிகரமான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம். நேரத்தை தவறாமல் செய்வதை உங்கள் விதியாக மாற்றி ஒவ்வொரு பணியையும் குறித்த நேரத்தில் முடிக்கவும். 'இன்றைய வேலையை இன்றே செய். நாளை தள்ளிப் போடாதே' என்ற முதுமொழியை மனதில் எப்போதும் அசைப் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். 

பெண்கள் தங்களது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். அதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் ஆரோக்கியமான மனமும், ஆரோக்கியமான உடலும் சிறப்பாக செயல்பட முடியும். மேலும், மக்களுடன் நல்ல உறவுகளை உருவாக்கி அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். நேர்மறையான நபர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும். நேர்மறை நபர்களின் கூட்டுறவு, பெண்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய நேர்மறையான கண்ணோட்டத்தைத் தரும்.

இதேபோன்று, துன்பம் மனித வாழ்வின் ஒரு பகுதி என்பதை உள்வாங்கிக் கொண்டு, பெரிய இலக்குகளை அடைவதற்கான வழியில் வீர நடைப்போட வேண்டும். வாழ்க்கையில் எதிர்கொள்ள வேண்டிய பல சவால்கள் உள்ளன என்பதை மறந்துவிடக் கூடாது.  இந்த சூழ்நிலைகளில் பீதி அடைய வேண்டியதில்லை. மாறாக அவற்றை எதிர்கொண்டு சவால்கள், துன்பங்கள், ஆகியவற்றில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

முறையான திட்டமிடல்: 

எந்தவொரு பணியையும் வெற்றிகரமாகச் செயல்படுத்த முறையான திட்டமிடல் அவசியம். ஒவ்வொரு பணியையும் திட்டமிடுங்கள். இதனால் உங்கள் இலக்குகளை எளிதாக அடையலாம். ஏற்கனவே வெற்றி பெற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அவர்களின் அனுபவங்களைப் படித்தும், கேட்டும், அவர்களின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். இந்த கற்றல் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவுக்கு நல்ல பலனை தரும். 

எந்தவொரு கடினமான மற்றும் தனித்துவமான பணியைச் செய்வதற்கு தன்னம்பிக்கை அவசியம். எனவே, பெண்கள் தங்களின் தனித் திறன்களை நம்ப வேண்டும். அத்துடன், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் முதலில் தங்களை  நம்புவது வெற்றிக்கான முதல் படி என்பது உணர வேண்டும். நேர்மறையான விமர்சனத்தை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். எதிர்மறையான விமர்சனங்களால் சோர்வடைய வேண்டாம். புறக்கணித்துவிட்டு செல்லுங்கள்.

மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற கற்றுக்கொள்ளுங்கள். குழுப்பணி சிறந்த முடிவுகளுக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், புதிய யோசனைகளையும் முன்னோக்குகளையும் கொண்டுவருகிறது. குழுவில் உள்ள பல்வேறு நபர்களின் அறிவு மற்றும் அனுபவத்துடன் எந்த பணியையும் நிறைவேற்ற முடியும். நேரத்தை வீணடித்தல், சோம்பல், எதிர்மறையான சிந்தனை போன்ற எதிர்மறைப் பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். நேர்மறை பழக்கங்களை பெண்கள் தங்கள் வாழ்க்கையின் வழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். 

விடாமுயற்சி: 

துன்பங்கள் மற்றும் பின்னடைவுகளை எதிர்கொள்ளும் போது பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும். சகிப்புத்தன்மை உள்ளவன் வாழ்க்கையின் எந்தத் துறையிலும் பின்தங்கியவன் அல்ல. சிறிய தோல்விகளால் சோர்வடைய வேண்டாம். சகிப்புத்தன்மையைக் காட்டி, முழு வலிமையுடன் உங்கள் வேலையை மீண்டும் செய்யுங்கள். உங்கள் செயல்திறனை மேம்படுத்த எப்போதும் முயற்சி செய்யுங்கள். உங்களை மேம்படுத்துவதற்கு திட்டங்களை உருவாக்கி அவற்றைப் பின்பற்றுங்கள். நிலையான மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்தின் பாதையில் இருங்கள்.

அத்துடன், உங்கள் தவறுகளை மதிப்பாய்வு செய்து, அவற்றிலிருந்து கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். சுய பொறுப்புணர்வு உங்கள் தவறுகளை மீண்டும் செய்வதைத் தவிர்க்க உதவும் என்பது மறந்துவிடக் கூடாது. தேவைப்படும் போதெல்லாம், மற்றவர்களிடம் உதவி கேட்க தயங்காதீர்கள். ஒத்துழைப்பு சிக்கலைத் தீர்ப்பதை எளிதாக்குகிறது. உங்களின் தனிப்பட்ட பலவீனங்களை நீக்கி, நவெற்றிகரமான மற்றும் திறமையான நபராக மாற தொடர்ந்து முயற்சி செய்யும். அது உங்களால் முடியும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


Tuesday, July 2, 2024

சுப்ரமணியன் சுவாமி தாக்கு...!

பொருளாதாரம், வேலையில்லா திண்டாட்டம்: உண்மை நிலை என்ன?

*பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி அதிகரிப்பு

*கடந்த இரண்டு  ஆண்டுகளாக ஒன்றிய அரசின் பட்ஜெட் பற்றாக்குறை பட்ஜெட்டாக உள்ளது

*நாடு பொருளாதார வளர்ச்சிப் பெற வேண்டுமானால் பொருளாதார நிர்வாகம் மாற்றி அமைக்க வேண்டும்.  

சுப்ரமணியன் சுவாமி கருத்து.....!

இந்திய பொருளாதரம் குறித்தும். மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறித்தும், ஒன்றிய பா.ஜ.க. அரசு, பல்வேறு புள்ளிவிவரங்களையும், தகவல்களையும் அளித்து வருகிறது. அதன் உண்மை நிலை என்ன? என்பது குறித்து பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், பிரபல பொருளாதார நிபுணருமான சுப்ரமணியன் சுவாமி, 'தி இந்து ஆங்கில நாளிதழில்' 02.07.2024 அன்று கட்டுரையை எழுதியுள்ளார். அதில், சில அடுக்கடுக்கான பல கேள்விகளையும் சந்தேகங்களையும் அவர் எழுப்பியுள்ளார். அவர் எழுதியுள்ள அந்த கட்டுரையின் சில முக்கிய அம்சங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:

புதிய வேலைவாய்ப்புகள் இல்லை:

இந்தியப் பொருளாதாரத்திற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டரை கோடிக்கும் அதிகமான வேலைகள் உருவாக்கப்பட வேண்டும். அதன்மூலம் நாட்டில் தற்போது வேலையில்லாமல் இருக்கும் அனைவருக்கும் வேலை கிடைக்கும். நரேந்திர மோடி அரசு, இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம்) கடந்த ஆண்டு 8 சதவீதம் அளவு வேகத்தில் வளர்ந்து இருப்பதாக, கூறிவருகிறது. அந்தக் கூற்று உண்மையாக இருந்தாலும், நாட்டில் தற்போது நிலவும் வேலையின்மை பிரச்சினையை தீர்க்க போதுமான எண்ணிக்கையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பதே நிதர்சனமாக உண்மையாகும். 

ஒன்றிய அரசு அண்மையில் வழங்கியுள்ள புள்ளிவிவரங்களின்படி, நாட்டில், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில்  வேலையில்லாமல் இருப்போரின் எண்ணிக்கை  கடந்த 2021 ஆம் ஆண்டில் 4 புள்ளி 2 சதவீதம் அளவுக்கு இருந்தது. அது 2023ஆம் ஆண்டில் 3 புள்ளி ஒரு சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. ஆனால் இந்த புள்ளிவிவரத்தை வைத்துக் கொண்டு, ஜிடிபி வளர்ச்சி விகிதம் 8 சதவீதம் அளவுக்கு உயர்ந்துவிட்டது என கூற முடியாது. 

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி தற்போது பா.ஜ.க. பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது. பொருளாதார சித்தாந்தங்களில் மாறுப்பட்ட நிலைபாடுகள் கொண்டு கட்சிகளின் இணைந்து பா.ஜ.க. தற்போது ஆட்சி அமைத்துள்ளது. 

இடைவெளி அதிகரிப்பு:

நாட்டில் கடந்த இருபது ஆண்டுகளாக, வசதியானவர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு இடையிலான இடைவெளி பெரும் அளவுக்கு அதிகரித்துள்ளது. அத்துடன், பா.ஜ.க.வின் கடந்த பத்து ஆண்டு கால ஆட்சியில், நாட்டின் பெரும் அளவுக்கான செல்வம் ஒரு சதவீதம் மக்களிடம் தான் இருந்து வருகிறது. அதாவது, நாட்டின் 40 சதவீத செல்வத்தை ஒரு சதவீத மக்களின் கையில் இருந்து வருகிறது. இதனால் பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது ஜனநாயக மற்றும் ஸ்திரதன்மை கொண்ட நாட்டிற்கு மிகவும் ஆபத்து விளைவிக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  

நாட்டின் பொருளாதாரம், வசதிகள் அனைத்தையும் குறிப்பிட்ட ஒரு சதவீத மக்கள் மட்டுமே அனுபவித்து வருகிறார்கள். அவர்களின் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களின் சொத்து மதிப்பு கூடிக் கொண்டே போகிறது. ஆனால், நாட்டில் பெரும்பாலான மக்கள் ஏழ்மை நிலையில் இருந்து வருகிறார்கள். அவர்களின் வருவாய் கூடவில்லை. மாறாக தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. 

உண்மை நிலை என்ன?

நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் அதிகரிப்பு காரணமாக நாட்டில் வறுமை நிலையில் இருந்து, சுமார் 25 கோடிக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதேபோன்று, அரசு ஆதரவு பொருளாதார நிபுணர்கள் கூட, மோடி அரசு மிகப்பெரிய அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை எட்டி, நாட்டு மக்களை மகிழ்ச்சியில் வைத்து இருப்பதாக கூறி வருகிறார்கள். இந்த வளர்ச்சி விகிதம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தொடரும் என்றும் அவர்கள் கருத்து கூறுகிறார்கள். 

ஆனால், உண்மையில் தேர்தல் முடிவுகள் பல்வேறு கேள்விகளை நம்மிடையே எழுப்பியுள்ளது. அரசும், அதிகாரிகளும் இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும் பொருளாதார நாடு என்று கூறிவரும் நிலையில், தேர்தலில் ஏழை மக்களின் ஆதரவு பா.ஜ.க.விற்கு கிடைத்து இருக்க வேண்டும். ஆனால், தேர்தல் முடிவுகள், பா.ஜ.க.வின் பலத்தை வெகுவாக குறைத்துவிட்டது. மக்களவையில் பா.ஜ.க. உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது. இரண்டு மாநில கட்சிகளுடன் ஆதரவுடன் தான் பா.ஜ.க. தற்போது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. 

நாடு உண்மையான பொருளாதார வளர்ச்சிப் பெற வேண்டுமானால், பா.ஜ.க. அரசின் பொருளாதார நிர்வாகம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஆனால், அண்மையில் நியமிக்கப்பட்ட ஒன்றிய அமைச்சர்கள் பார்க்கும்போது இந்த நம்பிக்கை உடைந்து போகிறது. 

2023-24ஆம் நிதியாண்டில், நாட்டின் ஜி.டி.பி. 8 புள்ளி சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடையும் என்றும், கடந்த 2022-23ஆம் ஆண்டில் இருந்த 7 சதவீத்தை கடந்து முன்னேற்றம் பெறும் என்றும் மோடி அரசு கூறி வருகிறது. ஆனால், இதை எப்படி கணித்தார்கள் என்பது குறித்த விவரங்கள் எதுவும் தெளிவாக கூறப்படவில்லை. 

பொருளாதார வல்லுநர்களின் கருத்து:

இந்தியாவின் பட்ஜெட் கடந்த இரண்டு ஆண்டுகளாக, பற்றாக்குறை பட்ஜெட்டாக இருந்து வருகிறது. செலவை விட, வருவாய் மிகவும் குறைந்து வருகிறது. அத்துடன், தொழில், வேளாண் மற்றும் சேவை உள்ளிட்ட துறைகளில் மிகப்பெரிய அளவுக்கு முதலீடுகள் செய்யப்படவில்லை. இப்படி நிலைமை இருக்கும்போது, ஜிடிபி வளர்ச்சி பெறும் என கூறுவது, பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ஒன்றிய நிதியமைச்சகம் கணித்தப்படி நாட்டின் ஜிடிபி வளர்ச்சி என்பது 8 புள்ளி 2 இருக்கும் என்பது, வெறும் கற்பனையில் மட்டுமே இருக்க முடியும். வரும் 2024-25ஆம் நிதியாண்டில் இது தொடரும் என்பதும் சந்தேகமே. நாட்டின் பொருளாதாரம் குறித்து நன்கு ஆய்வு செய்துவரும் பொருளாதார வல்லுநர்கள், வளர்ச்சி விகிதம் குறையும் என கருத்து கூறியுள்ளார்கள். 

கடந்த பத்து ஆண்டுகளாக மோடியும் அவரது அரசும், அடுத்த தலைமுறையினருக்கான சீர்திருத்தங்கள் செய்து வருவதாக கூறி வருகிறார்கள். இதன்முலம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்றும் அவர்கள் மார்பு தட்டிக் கொள்கிறார்கள். இது உண்மையாக இருந்து இருந்தால், நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு மிகப்பெரிய சரிவு ஏற்பட்டு இருக்காது. இதன்மூலம் கடந்த காலங்களில் பின்பற்றிய பொருளாதார நிலைப்பாடுகளை இனி பா.ஜ.க. தொடரக் கூடாது. 

வேளாண் துறையை எடுத்துக் கொண்டால், அமைப்புசாரா துறையில் 92 சதவீத வேலைவாய்ப்புகள் இருந்து வருகின்றன. இதேபோன்று, தொழில், சேவை துறைகளில் 73 சதவீத வேலைவாய்ப்புகள் உள்ளன. எனினும் அரசு மற்றும் தனியார் துறைகள் மூலம் தற்போது 27 சதவீத வேலைவாய்ப்புகள் மட்டுமே அளிக்கப்பட்டு வருகின்றன. எனவே, நீண்ட கால அணுகுமுறையை கையாண்டு, இந்தியா புதிய பொருளாதார நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்றத்தில் தற்போது பா.ஜ.க. பெரும்பான்மை பலத்துடன் இல்லாத காரணத்தினாலும், பொருளாதார வல்லுநர்கள், அமைச்சர்களுடன் பொருளாதார நிலை குறித்து வெளிப்படையாக விவாதித்து, உரிய ஆலோசனைகளை வழங்க முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே, பா.ஜ.க.வின் கூற்றுப்படி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது கேள்விக்குறியாகவே இருக்கும்.

- நன்றி: சுப்ரமணியன் சுவாமி, தி இந்து ஆங்கில நாளிதழ்

- தமிழில்: எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்