Thursday, January 9, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (46)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"

நாள் - 46



தமிழகம் முழுவதும் 4 நாட்கள் மதுக்கடைகள், பார்கள் அடைப்பு.....!

தமிழக அரசு அறிவிப்பு......!!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

ஆனால், இந்த கோரிக்கை அரசின் காதுகளில் இன்னும் விழவேயில்லை.


இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில்,
நபிகள் நாயகம் பிறந்த நாள் ஜனவரி 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை), திருவள்ளுவர் தினம் ஜனவரி 15-ந்தேதி (புதன்கிழமை), வள்ளலார் நினைவுதினம் 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை). குடியரசு தினம் 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தினங்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோன்று, எப்.எல்.2, உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்.எல்.3, உரிமம் கொண்ட ஹோட்டல்களை சேர்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.3 (ஏ), உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும் என அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த 4 நாட்களில் மதுபானம் ஏதும் விற்பனை செய்யப்படமாட்டாது என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த காலங்களில் ஒரே மாதத்தில் 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படவில்லை என்பதும், டாஸ்மாக் கடைகளுக்கு இதுபோன்று 4 நாட்கள் விடுமுறை அளிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


நான்கு நாட்கள் தொடர் விடுமுறை இருக்கட்டும்.....டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும் என்பதுதானே மது இல்லாத வளமான நாட்டை காண விரும்பும் மக்களின் எதிர்பார்ப்பு....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: