Wednesday, January 8, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (41)

" மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!"

நாள் -  41



என் மனைவி உட்பட எந்த பெண்ணையும் மது அருந்துமாறு வற்புறுத்தியது கிடையாது: முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி தகவல்....

இந்திய ஊடகங்களில் கடந்த சில நாட்களாக தலைப்புச் செய்தியாக வலம் வந்துக் கொண்டிருப்பவர் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி.

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதையடுத்து மேற்குவங்க மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவியில் இரூந்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கங்குலி பதவி விலகினார்.

இது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:


என் மீது சுமத்தப்படும குற்றச்சாட்டுக்கள் அர்த்தமற்றது; மாநில மற்றும் மத்திய அரசுகள் எனக்கு எதிராக செயல்படுகின்றன;

தேவையில்லாமல் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது,

நான் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டுள்ளேன்,

எனக்கு எதிர்ப்புக்கள் அதிகரித்ததால் நான் பதவி விலகினேன்;

என் மீதான குற்றச்சாட்டுக்கள் ஒருதலைபட்சமானது;


நான் என் மனைவி உட்பட எந்த பெண்ணையும் மது அருந்த வற்புறுத்தியது கிடையாது.

இந்நிலையில் மது அருந்துமாறு நான் எப்படி ஒருவரை கட்டாயப்படுத்த முடியும்.

நான் அப்பெண்ணை என்னுடன் தங்க வற்புறுத்தவில்லை;

அவள் ஏற்கனவே ஹோட்டலில் தான் தங்கி இருந்தார். இவ்வாறு அவர் கூறினார்.

ஆக, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி, தன்னுடைய பேட்டியில் மதுவுக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.


தம் மனைவி உட்பட எந்த பெண்ணையும் தாம் மது அருந்த வற்யுறுத்தியது கிடையாது என அவர் தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார்.

அவர் மீதான பாலியல் புகார்கள் எப்படி இருந்தாலும் மதுவுக்கு எதிராக கருத்து தெரிவித்த நீதிபதி கங்குலியை நாம் பாராட்டுகிறோம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: