Sunday, January 5, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (39)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"

நாள் : 39


தேர்தலில் பாமகவுக்கு போடப்படும் வாக்குகள் மதுவிற்கு எதிரான
வாக்குகள் .....!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு....!!

விழுப்புரத்தில் பாமக மகளிர் அணி சார்பில் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது.

அதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மதுவை முற்றிலும் ஒழித்தால் மட்டுமே, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.


மதுவை ஒழிக்க பாமக தொடர்ந்து பாடுபடும் என்று டாக்டர் ராமதாஸ் உறுதி அளித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவுக்கு போடப்படும் வாக்குகள் மதுவுக்கு எதிரான வாக்குகள் என்றும்  ராமதாஸ் தெரிவித்தார்.

இதேபோன்று, விழுப்புரம் மாவட்ம் திண்டிவனத்தில் நடைபெற்ற பாமக மகளிர் அணி அரசியல் எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய டாக்டர் ராமதாஸ்,  சட்டப்பேரவை தேர்தலில் பாமக-வை வெற்றிப் பெறச்செய்தால், தமிழகத்தில்  பூரண மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறினார்.


பாமக ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகளை ஒழிப்பதற்கே முதல் கையெழுத்திடப்படும் என்றும் அவர் கூறினார்.

மதுப்பழகத்திலிருந்து மாணவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: