Saturday, January 4, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்....! (38)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்....!"

 நாள் - 38



மது விற்பனையை ஊக்கப்படுத்தி இலவசங்கள் எதற்கு?

பிஜேபி தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கேள்வி...!

தமிழகத்தில் மது விற்பனையை ஊக்கப்படுத்தி, வேறொரு பக்கத்தில் இலவசங்களை எதற்கு வழங்க வேண்டும் என பா.ஜ.கவின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பூர் ஓடக்காடு பகுதியில், செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன்,
குஜராத்தை தவிர பெரு வாரியான மாநிலங்களில் மது விற்பனை நடைபெறுகிறது.

மது விற்பனையை பிரதான ஆதாரமாகக் கொண்டிருப்பது தமிழகம்தான்.


கடந்த ஆங்கிலப் புத்தாண்டுக்கு 180 கோடி விற் பனையானது. தற்போது, 270 கோடியாக உள்ளது வேதனை அளிப்பதாக அவர் கூறினார்.

தமிழகத்தில் மது விற்பனையை ஊக்கப்படுத்தி, வேறொரு பக்கத்தில் இலவசங்களை எதற்கு வழங்க வேண்டும்? என்றும் இல.கணேசன் கேள்வி எழுப்பினார்.

அரசு தரும் இலவசம் எல்லாம், மக்களின் வரிப்பணம். அதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இலவசத்துக்காக மதுக்கடைகளா? என்று இல.கணேசன் கேட்டார்.


இல.கணேசனின் கேள்வியில் நியாயம் உள்ளது.

மதுப்பிரியர்கள், பொதுமக்கள் இதனை புரிந்துக் கொள்ள வேண்டும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: