Saturday, January 18, 2014

மதுவுக்கு எதிராக ஓர் போர்......! (49)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்......!"

நாள் - 49



குடி உயிரையும் உறவையும் கெடுக்கும்......!

தற்கொலை செய்த மதுரை காவலர் கடிதம்.......!!

மது பழக்கம் மனிதனை பாதாளத்திற்கு அழைத்துச் செல்லும் என்பது அனைவரும் அறிந்ததே...

இதற்கு பல உண்மை சம்பவங்கள் சாட்சிகளாக இருந்து வருகின்றன.

இதுபோன்ற ஒரு சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

மதுரை மாவட்ட ஆயுதப்படை காவலர் கார்த்திக்ராஜா என்பவர், குடி உயிரையும், உறவையும் கெடுக்கும் என  கூறி கடிதம் எழுதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள சர்வகுடியைச் சேர்ந்தவர் சித்திரைவேல் மகன் கார்த்திக்ராஜா.

மதுரை மாவட்ட ஆயுதப்படை காவலரான இவர், ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வந்தார்.


கடந்த ஜனவரி 15ஆம் தேதி இரவு அதிகளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்ட இவர், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக விளாங்குடியில் வசிக்கும் அவரது சகோதரிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர்கள் ஆயுதப்படை குடியிருப்புக்கு வந்து, மயங்கிய நிலையில் கிடந்த கார்த்திக்ராஜாவை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஜனவரி 16ஆம் அதிகாலை கார்த்திக்ராஜா இறந்தார்.

தகவலறிந்த தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீஸார் கார்த்திக்ராஜாவின் வீட்டில் சோதனையிட்டபோது ஒரு கடிதம் சிக்கியது.


அதில், 'எனது சாவுக்கு யாரும் காரணமில்லை. குடி உறவையும், உயிரையும் கெடுக்கும். எனது முடிவு மற்றவர்களுக்கு பாடமாக இருக்கட்டும்' என எழுதியிருந்தார்.

ஆக, மது பழக்கம் உறவையும், உயிரையும் கெடுக்கும் என்பது காவலர் கார்த்திக் ராஜாவின் வாழ்க்கையின் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிய வருகிறது.

மதுப்பிரியர்கள் இதை உணர்ந்து கொண்டால் சரி....!

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: