Wednesday, November 26, 2025

தாக்கு....!

 RSS வாரிசான ஆளுநர் ஆர்.என்.ரவி காரல் மார்க்ஸ் குறித்து பேச அருகதையற்றவர். CPIM  தோழர் சண்முகம் தாக்கு..!



உறுதி...!

 அரசமைப்புச் சட்டம் அமலான தினம் இன்று...!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உறுதி...!

Constitution day...!



பேச்சு...!

தாய்மொழிப் பற்று குறித்து தமிழ்நாட்டுக்கு ஆளுநர் ஆர.என்.ரவி  பாடமெடுக்க வேண்டாம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்....!




பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சிறப்பு நேர்காணல்....!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஐந்து தொகுதிகளில் போட்டியிட விருப்பம்.....!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சிறப்பு நேர்காணலில் தகவல்....!

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -

2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு மத்தியில், அரசியல் கட்சிகள் எந்ததெந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும்., எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் மட்டுமல்லாமல், அதிமுக கூட்டணியில்  உள்ள கட்சிகளும் தொகுதி நிலவரம், போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய இஸ்லாமிய இயக்கமான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கமும், 2026ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் தற்போது தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக கடந்த நவம்பர் 19ஆம் தேதி புதன்கிழமை அன்று திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழுக் கூட்டத்தில், 52 மாவட்டங்களைச் சேர்ந்த செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டு சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தங்களது கருத்துகளை தெரிவித்தனர். 

இந்நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து அறிந்துகொள்ள விரும்பினோம். மூத்த ஊடகவியலாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் அவர்கள், தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களை சென்னை மண்ணடியில் உள்ள காயிதே மில்லத் மன்ஜிலில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்தில் பேராசிரியர் அவர்களை சந்தித்து, இனிய திசைகள் மாத இதழுக்காக சிறப்பு நேர்காணல் நடத்தினார். அந்த நேர்காணலின் முழு விவரம் இதோ:

அவசர செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசனை :

திருச்சியில் நவம்பர் மாதம் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  மாநில அவசர செயற்குழுக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மீண்டும் இணைந்து செயல்பட இயக்கம் முடிவு செய்துள்ளது. திமுக தலைமையில் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, தற்போதைய நல்லாட்சி தொடரும். அதற்கான தேர்தல் பணிகளை  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இயக்கம் ஏற்கனவே தொடங்கியுள்ளது.

தேர்தலில் போட்டியிட வேண்டிய தொகுதிகள், அதன் எண்ணிக்கை ஆகியவை குறித்து மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர் தங்களுடைய எண்ணங்களையும் கருத்துகளையும் கூட்டத்தின் முன்பு வைத்தனர். கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் நாங்கள் தோல்வி அடைந்தோம். வரும் தேர்தலில் அந்த நிலை ஏற்படாது. 2026 தேர்தலில் 5 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என்கிற விருப்பம் எங்களுக்கு உள்ளது. கலைஞர் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 16 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. வரும் தேர்தலிலும் அதை வலியுறுத்துவோம். பீகாரின் நிலைமை வேறு. தமிழ்நாட்டின் நிலைமை வேறு. தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் அமையும், மு.க.ஸ்டாலின் ஆட்சி அனைத்துச் சமுதாய மக்களையும் உள்ளடக்கிய ஆட்சியாக இருக்கும்.

மஹல்லா ஜமாத்துக்கள் மாநாடு :

இந்திய யூனியன் முஸ்லீக் கட்சி சார்பில் அடுத்த ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி கும்பபோணம் சுவாமிமலை அருகே மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் 8 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டில் பங்கேற்கிறார். திருச்சி செயற்குழுக் கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் சில முக்கியக் கோரிக்கைகளாக 20 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் உள்ள முஸ்லிம்‘ சிறைவாசிகள் விடுவிக்கப்பட வேண்டும். இதற்கான உரிய நடவடிக்கையை முதலமைச்சர் எடுக்க வேண்டும். பட்டா இல்லாத பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் மற்றும் அடக்கஸ்தலங்களுக்கு பட்டா வழங்கப்பட வேண்டும். வாக்காளர் பட்டியலில் குழப்பங்கள் ஏற்படுவதைத் தடுக்க, எஸ்.ஐ.ஆர். (தனிநபர் தகவல் பதிவு) தொடர்பான நடைமுறைகளை ஒத்திவைத்துவிட்டு, தேர்தலுக்குப் பின்பு நடத்த வேண்டும். இது தொடர்பாக இ.யூ.முஸ்லிம் லீக்  சார்பிலும் உச்ச நீதிமன்றம், கேரள உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் வெளிநாடு வாழ் தமிழர்களையும் இணைக்க வேண்டும். தமிழறிஞர்களின் நூல்களை அரசுடமையாக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

ஐந்து முக்கிய தொகுதிகள் :

திருச்சி அவசர செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு, மஹல்லா ஜமாஅத் ஒருங்கணைப்பு மாநாடு மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் இயக்கம் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது. திருச்சியில் செயற்குழு நிர்வாகிகள் வழங்கிய ஆலோசனையின் படி, வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திமுக கூட்டணி தலைமையில் இருந்து வாங்கும் தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பது திருச்சியில் நடைபெற்ற அவசரச் செயற்குழுக் கூட்டத்தில் நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். 

கடந்த தேர்தலில் நாங்கள் மூன்று தொகுதிகளை வாங்கி, போட்டியிட்டு தோல்வி அடைந்தோம். அத்தகைய சூழ்நிலையில், திரும்பவும் மூன்று தொகுதியா, ஐந்து தொகுதியா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும், 5 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது கட்சியின் நிர்வாகிகளின் எல்லோரின் விருப்பமாக இருந்து வருகிறது. இந்த கருத்தை தான் திருச்சி செயற்குழுக் கூட்டத்தில் பேசப்பட்டது.

இராமநாதபுரத்தில் திருவாடானை, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் ஆகிய தொகுதிகள் நல்ல தொகுதிகள் என நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதேபான்று,  சென்னையில் ஆயிரம் விளக்கு தொகுதி, திருச்சியில் திருச்சி கிழக்கு தொகுதி, தஞ்சாவூரில் பாபநாசம் தொகுதி, நாகை மாவட்டடத்தில் நாகப்பட்டினம் தொகுதி, கடலூர் மாவட்டத்தில் ஒரு தொகுதி, கரூரில் அரவக்குறிச்சி தொகுதி என இப்படி, ஒரு பத்து இருபது தொகுதிகளின் பெயர்களை நிர்வாகிகள் பரிந்துரை செய்து கருத்துகளை தெரிவித்தார். 

இந்த பத்து, இருபது தொகுதிகளில் குறைந்தது 5 தொகுதியாவது வாங்க வேண்டும் என்பது செயற்குழுவில் நிர்வாகிகளின் விருப்பமாக இருந்தது. ஆனால் நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற செயற்குழு நிர்வாகிகளின் கருத்துகள், விருப்பங்கள், ஆலோசனைகள் ஆகிய அனைத்தையும் கட்சி தலைமை தீவிரமாக ஆய்வு செய்யும். அதன்பிறகே, எந்தவெரு முடிவும் எடுக்கப்படும். 

தமிழக மக்கள் நல்ல தீர்ப்பு அளிப்பார்கள் :

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தமிழக மக்கள் நிச்சயம் ஆதரவு அளிப்பார்கள். தற்போதைய திராவிட மாடல் ஆட்சி, இந்திய நாட்டிற்கு மட்டுல்லாமல், உலகத்திற்கே வழிகாட்டும் ஆட்சியாக இருந்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு, மிகச் சிறந்த முறையில் செயல்பட்டு, கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாட்டை இந்திய மாநிலங்களுக்கு வழிக்காட்டும் மாநிலமாக மாற்றியுள்ளது. 

அனைத்துத் தரப்பு மக்களும், திமுக ஆட்சிக்கு நன்மதிப்பு வழங்கி வருகிறார்கள். மக்களின் எண்ணங்கள் அனைத்தும், மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதாகவே இருந்து வருகிறது. சிறுபான்மையின மக்கள் மட்டுமல்லாமல், அனைத்துச் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் திமுகவின் ஆட்சியை பாராட்டு வருகிறார்கள். எனவே நூறு சதவீதம் மீண்டும் திமுகவே ஆட்சியைப் பிடிக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள், திமுக ஆட்சிக்கு முழு ஆதரவு அளிப்பார்கள். திமுக ஆட்சிக்கு துணையாக இருப்பார்கள். ஒத்துழைப்பு வழங்குவார்கள். அந்த நம்பிக்கை  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்திற்கு இருந்து வருகிறது. 

இவ்வாறு சிறப்பு நேர்காணலில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள், தமது எண்ணங்களை மிகத் தெளிவாக தெரிவித்தார். அவரது விருப்பப்படி, தமிழ்நாட்டில், மீண்டும் திமுக ஆட்சி அமைந்து, திராவிட மாடல் நல்லாட்சி தொடர்ந்து தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் வேகமான வளர்ச்சியும், முன்னேற்றமும் அடைய வாழ்த்திவிட்டு விடைப்பெற்றோம். 

- சந்திப்பு : மூத்த ஊடகவிலாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

===========================================

Tuesday, November 25, 2025

குற்றச்சாட்டு....!

 பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகம்...!

வஞ்சிக்கப்படும் தமிழகம்...!

மதுரை எம்.பி. வெங்கடேசன் குற்றச்சாட்டு...!



அழகிய செயல்....!

 Churches in Germany are now inviting imams to recite Muslim prayers and calls of Allahu Akbar to appear more ‘inclusive.’

Would the opposite ever be allowed? I don’t think so.



Monday, November 24, 2025

மூன்று தலைமுறையாக முஸ்லிம் பெயரை இணைத்து பயன்படுத்தும் குடும்பம்....!

" மூன்று தலைமுறையாக முஸ்லிம் பெயரை இணைத்து பயன்படுத்தும் 

இராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர் பாட்சா முத்துராமலிங்கம் குடும்பம் "

- சில சுவையான தகவல்கள் -

தமிழகத்தில் எல்லோருடைய கவனத்தை கவரும் வகையில் இருக்கும் முக்கிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றாக இராமநாதபுரம் தொகுதி இருந்து வருகிறது. இந்த தொகுதியின் உறுப்பினராக (எல்.எல்.ஏ.) இருப்பவர் காதர் பாட்சா முத்துராமலிங்கம். இப்படி முஸ்லிம் மற்றும் சகோதர சமுதாய பெயரை இணைத்துக் கொண்டு, தனது பெயரை காதர் பாட்சா முத்துராமலிங்கம் என வைத்துக் கொண்டு இருக்கும் இவர், உண்மையில், இஸ்லாமியரா அல்லது சகோதர சமுதாயத்தைச் சேர்ந்தவரா என்ற கேள்வி அல்லது குழப்பம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்துச் சமுதாய மக்களுக்கு ஏற்படுவது இயல்பாகவே இருந்து வருகிறது. காதர் பாட்சா முத்துராமலிங்கம் என்ற  ஒத்திசைவான பெயரில் பல சுவையான தகவல்கள் அடங்கி இருப்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். 

தனித்துவமான கலவையான பெயர் : 

உடன்பிறப்பே வா திட்டத்தின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை (நவம்பர் 24, 2025) சென்னையில் கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினைச் சந்தித்த தி.மு.க. தலைவர்களில், ராமநாதபுரம் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.எல்.ஏ., காதர் பாட்சா முத்துராமலிங்கமும் ஒருவர். அவரது தனித்துவமான கலவையான முஸ்லிம் மற்றும் இந்து இணைந்த பெயர் நீண்ட காலமாக பொது ஆர்வத்தை ஈர்த்துள்ளது. திரைப்பட நடிகர் ஆர்யா முக்கிய வேடத்தில் நடித்த காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் என்ற தமிழ் திரைப்படத்தையும் கூட ஊக்கப்படுத்தியது. தமிழ்நாடு சட்டப்பேரவைச் சபாநாயகர் எம். அப்பாவு சட்டமன்றத்தில் காதர் பாட்சா முத்துராமலிங்கம் என்ற அவரது பெயரை அழைக்கும் போதெல்லாம், அது எப்போதும் கேள்விகளைத் தூண்டுகிறது. எம்.எல்.ஏ இஸ்லாத்திற்கு மாறிவிட்டாரா என்று பலர் யோசிக்கிறார்கள். வியப்புடன் ஆச்சரியம் அடைகிறார்கள். 

காதர் பாட்சா முத்துராமலிங்கம் விளக்கம் : 

இப்படி அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், இராமநாதபுரம் தொகுதியில் உள்ள மக்களும், ஏன் தமிழக மக்களும், காதர் பாட்சா முத்துராமலிங்கம் பெயர் குறித்து தொடர்ந்து குழப்பத்தில் இருந்து வருகிறார்கள். இப்படி ஒரு பெயர் வைத்து பயன்படுத்துவதில் உள்ள உண்மையான காரணம் என்ன? போன்ற பல கேள்விகளுக்கு காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. அருமையான விளக்கத்தை அளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 

மூன்று தலைமுறைகளாக காதர் பாட்சா பெயர் :

“நாங்கள் மூன்று தலைமுறைகளாக ‘காதர் பாட்சா’ என்ற பெயரை பயன்படுத்தி வருகிறோம். என் தந்தை காதர் பாட்சா வெள்ளைசாமி தேவர், என் பெயர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், என் மகன் பாட்சா” என்று இராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர் பாட்சா முத்துராமலிங்கம் மகிழ்ச்சியுடன் விவரிக்கிறார்.  இராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளராகவும் பணியாற்றும் இவர், தனது பாட்டி, மீரக்கல், மறைந்த ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் தாயார் இந்திரானிணியின் உறவினர் என்றும் பெருமையுடன் தெரிவிக்கிறார். 

மேலும் விவரிக்கும் காதர் பாட்சா முத்துராமலிங்கம், "பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர், முஸ்லிம் சமுதாய மக்களுடன் எப்போதும் பாசமும் அன்புன் செலுத்தி நெருக்கமாக இருந்தவர். தேவரின் தாயார் இறந்தபிறகு, அவர் குழந்தையாக இருந்தபோது, அவருக்கு சாந்தா பீவி என்ற முஸ்லிம் செவிலியர் பாலுட்டி வளர்த்தார்.  மேலும், கிறிஸ்துவ மிஷனரிகள் நடத்தும் பள்ளியில் அவர் கல்வி பயின்றார்.  இதன் காரணமாக தங்களுடைய குடும்பம், முஸ்லிம் சமுதாய மக்களுடன் இரண்டறக் கலந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறது" என்று கமுதி தாலுகாவில் உள்ள மேலராமநதி கிராமத்தில் வசிக்கும் காதர் பாட்சா முத்துராமலிங்கம் மகிழ்ச்சியுடன் கூறுகிறார். 

தொடர்ந்து பேசிய அவர், "எங்களது குடும்பம் நீண்ட காலமாகவே இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்து மிகுந்த நன்மதிப்பு கொண்ட குடும்பமாக இருந்து வருகிறது. எனது பாட்டி மீரக்கல் பல ஆண்டு காலமாக குழந்தை இல்லாமல் வேதனை அடைந்து வந்த நிலையில், நாகூர் தர்காவிற்குச் சென்று பிரார்த்தனை செய்தார். இந்த பிரார்த்தனைக்குப் பிறகு, என்னுடைய தந்தை  பிறந்தார். நாகூர் ஆண்டவரின் ஆசி அவருக்கு கிடைத்ததால், காதர் பாட்சா என்ற பெயர்  அவருக்கு சூட்டப்பட்டது. பின்னர், வெள்ளைசாமி தேவர் என்ற பெயரும் இணைத்துக் கொண்டு, காதர் பாட்சா வெள்ளைசாமி தேவர் என்று அவர் அழைக்கப்பட்டார். பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் பாட்னாரின் பெயர் வெள்ளைசாமி தேவர் என்பதால், அதை என்னுடைய தந்தையின் பெயருடன் இணைத்து வைக்கப்பட்டது. 

சமூக நல்லிணக்கத்தின் கோட்டை :

இராமநாதபுரம் எப்போதும், இந்து முஸ்லிம் ஒற்றுமையை பிரதிபலிக்கும் சமூக நல்லிணக்கத்தின் கோட்டையாக இருந்து வருகிறது. கொடை வள்ளல் சீதக்காதி, இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் சேதுபதியின் நெருங்கிய நண்பராக மட்டுமல்லாமல், ஆலோசகராகவும் இருந்தவர்.  இப்படி, இராமநாதபுரம், இந்து முஸ்லிம் சமுதாய மக்களின் கலவையாக எப்போதும் அமைதியாக வாழ்ந்து வருகிறது. பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரைப் பின்பற்றி,  தேவர் சமுதாய மக்கள், முஸ்லிம் சமுதாய மக்கள் மீது மிகுந்த அன்பு செலுத்தி, எப்போதும் ஒற்றுமையுடன், அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள். 

அந்த வகையில் எங்கள் குடும்பமும், மூன்று தலைமுறையாக  முஸ்லிம் பெயரை எங்கள் பெயர்களுடன் இணைத்து பயன்படுத்தி வருவது எங்களுக்கு பெருமையாக மட்டுமல்லாமல், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இதன்மூலம் இந்து - முஸ்லிம் ஒற்றுமை அனைத்துச் சமுதாய மக்கள் மத்தியில் எடுத்துரைக்க எங்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இதை நாங்கள் தொடர்ந்துகொண்டே இருப்போம்" இப்படி தனது பெயருடன் காதர் பாட்சா என்ற முஸ்லிம் பெயர் இணைத்து அழைப்படுவது குறித்து பல சுவையான தகவல்களை இராமநாதபுரம் எம்.எல்.ஏ.,  காதர் பாட்சா முத்துராமலிங்கம் விவரித்தபோது மிகுந்த வியப்பாகவும் அதே நேரத்தில் சமூக நல்லிணக்கம் தழைக்க அவரது குடும்பம் செய்துவரும் பணியை பாராட்ட வார்த்தைகளே இல்லை.  

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

இப்தார்....!

 "In the Prophet's Mosque,

 every Monday and Thursday,

 Iftars are held for those who are fasting."



உண்மை என்ன?

 Islam does not encourage child marriage,

Rasulallah did not marry NANA Aisha at 6-9 rather at 16-19

Watch this video except if u naturally hate Islam and u aren’t willing to open ur heart then u can skip !!



Sunday, November 23, 2025

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாகுபாடு....!

“ நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாகுபாடு ”

 - மௌலானா அர்ஷத் மதானி வேதனை -

ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு, நாட்டில் வாழும் 25 கோடிக்கும் மேலான முஸ்லிம்களுக்கு எதிராக காரியங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் உள்ள முஸ்லிம் பெயர்களை மாற்றுதல், முஸ்லிம்களை எப்போதும் ஒருவித பதற்றத்தில் வைப்பது, முஸ்லிம்களின் கவனத்தை வளர்ச்சிப் பணியில் செலுத்தாமல் தடுத்தல் என பல்வேறு வகையில் முஸ்லிம்கள் தற்போது பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டே வருகிறார்கள். நாட்டில் இஸ்லாமிய வெறுப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிறிய பிரச்சினையை கூட, மிகப்பெரிய பிரச்சினையாக மாற்றி, இஸ்லாமியர்கள் குறி வைக்கப்படும் நிகழ்வுகள் அண்மைக் காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 

இஸ்லாமிய வெறுப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட முஸ்லிம் இயக்கங்கள் தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டே இருக்கின்றன. இந்திய நாட்டை உண்மையில் நேசிக்கும் முஸ்லிம்களை சந்தேக கண்ணுடன் ஒருபோதும் பார்க்கக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனினும், ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில், முஸ்லிம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. மாறாக, தொடர்ந்து முஸ்லிம் வெறுப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதை தடுத்து நிறுத்த தீவிர நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. 

மௌலானா அர்ஷத் மதானி வேதனை :

இத்தகைய சூழ்நிலையில், நாட்டில் முஸ்லிம்களக்கு எதிராக பாகுபாடு அதிகர்த்து வருவதாக ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா அர்ஷத் மதானி வேதனை தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட பாகுபாடு திணிக்கப்பட்டு அவர்கள்  அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்பட்டு வருவதாக மௌலானா அர்ஷத் மதானி விமர்சனம் செய்துள்ளார். 

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு மற்றும் அரசியல் மற்றும் சமூக பற்றாக்குறை குறித்து அவர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். தாருல் உலூம் தேவ்பந்தில் நடந்த ஒரு விழாவில் உரையாற்றிய மௌலானா அர்ஷத் மதானி, தற்போதைய பாஜக அரசாங்கம், முஸ்லிம்களின் அரசியல் தலைமை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளைப் பறித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசாம் கான் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டமை, டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் முஸ்லிம்களைக் குறிவைத்தல் மற்றும் அல்-பலா பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஜவாத் அகமது சித்திக் கைது போன்ற பிரச்சினைகளை அவர் உதாரணங்களாகக் குறிப்பிட்டார்.

பன்முக சவால்களை எதிர்கொள்ளும் முஸ்லிம் சமூகம் :

நாட்டின் முன்னணி முஸ்லிம் அமைப்பாக இருப்பது ஜாமியத் உலமா-இ-ஹிந்த். அதன் தலைவராக இருக்கும் மௌலானா அர்ஷத் மதானி, முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும், நாட்டின் அமைதி, வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தற்போது நாட்டில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அதிகரித்து வரும் பாகுபாடு மற்றும் இஸ்லாமிய வெறுப்பு குறித்து அவர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். அரசியல், சமூக மற்றும் பொருளாதார மட்டங்களில் முஸ்லிம் சமூகம் பன்முக சவால்களை எதிர்கொள்கிறது என்று மௌலானா கூறியுள்ளார். 

தாருல் உலூம் தேவ்பந்தில் உள்ள தனது செமினரியில் நடந்த விழாவில் உரையாற்றிய மௌலானா மதானி, சமீபத்திய டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அசாம் கான் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதையும், பல தனிநபர்கள் குறிவைக்கப்பட்டதையும் மேற்கோள் காட்டினார். பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் முஸ்லிம்களின் அரசியல் தலைமை, சமூக அந்தஸ்து மற்றும் வேலை உரிமைகளை பறிக்கும் கொள்கையை பின்பற்றுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார். 

உலக அளவில் முஸ்லிம்கள் சாதனை :

தற்போது அமெரிக்காவின் நியூயார்க்கில் தஹ்ரான் மம்தானி மற்றும் இங்கிலாந்தின் லண்டனில் சாதிக் கான் போன்ற முஸ்லிம்கள் உயர் பதவிகளை வகிக்க முடியும். ஆனால் ஒரு முஸ்லிம் இந்தியாவில் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆவது மிகவும் கடினம் என்று மௌலானா மதானி கூறினார். ஒரு முஸ்லிம் துணைவேந்தர் பதவியை அடைந்தாலும், அவர் அசாம் கானைப் போல சிறைக்கு அனுப்பப்படுகிறார் என்று அவர் வருத்தப்பட்டார். 

"தற்போது அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது?" என்ற கேள்வியை அவர் எழுப்பினார். முஸ்லிம்கள் ஒருபோதும் எழுந்திருக்காமல், வளர்ச்சி அடையாமல், பல்வேறு துறைகளில் சாதிக்காமல் இருக்க பா.ஜ.க. அரசாங்கம் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது" என்று மௌலானா குற்றம்சாட்டினர்.  அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான ஜவாத் அகமது சித்திக், பணமோசடி மற்றும் போலி சான்றிதழ்கள் குற்றச்சாட்டில் 13 நாள் அமலாக்க இயக்குநரகத்தின் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். அத்துடன், மத்தியப் பிரதேசத்தில் உள்ள அவரது மூதாதையர் வீட்டிற்கு இடிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, என்று மௌலானா மதானி குற்றம்சாட்டினார். அவரது கூற்றுப்படி, இந்த சூழ்நிலை நீதித்துறை அமைப்பு பற்றிய கேள்விகளையும் எழுப்புகிறது. ஏனெனில் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்படாமல் தொடர்ந்து சிறையில் அடைக்கப்படுகிறார்.

முஸ்லிம்கள் முன்னேறுவதைத் தடுக்கிறார்கள் :

இந்தியாவில் 75 ஆண்டுகள் காலமாக சுதந்திரம் இருந்தபோதிலும், கல்வி, தலைமைத்துவம் மற்றும் நிர்வாக கட்டமைப்புகளில் முஸ்லிம்கள் முன்னேறுவதைத் தடுக்கிறார்கள் என்று மௌலானா மதானி மேலும் கூறினார். பா.ஜ.க. அரசாங்கம் முஸ்லிம்களின் காலடியில் இருந்து தரையை இழுக்க விரும்புகிறது. மேலும் இந்த இலக்கை பெருமளவில் அடைந்துள்ளது என்றும்மௌலானா மதானி தெரிவித்தார். 

ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா அர்ஷத் மதானியின் வேதனையும் குற்றச்சாட்டுகளும் மிகவும் கவனத்தில் எடுத்துக் கொண்டு சிந்திக்கப்பட வேண்டியவையாகும். பல்வேறு வகைகளில் இந்திய முஸ்லிம்கள் நாட்டில் தொடர்ந்து சந்திக்கும் பிரச்சினைகள் காரணமாக அவர்கள் அமைதியான வாழ்க்கையை வாழ முடியாத ஒரு சூழல் தற்போது உருவாக்கப்பட்டு இருக்கிறது. எஸ்.ஐ.ஆர். போன்ற வகையில் முஸ்லிம்களின் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து பிரச்சினைகளையும் வேதனைகளையும் சந்தித்து வரும் இந்திய முஸ்லிம்களின் அமைதியான வாழ்க்கைக்காக, முன்னேற்றத்திற்காக மௌலானா அர்ஷத் மதானி குரல் எழுப்பி இருப்பது ஆட்சியாளர்கள் கவனத்தில் கொண்டு, நாட்டை உண்மையாக நேசிக்கும் 25 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களை அமைதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும். அவர்களின் முன்னேற்றம் நாட்டின் உண்மையான முன்னேற்றம் என்பதை நினைத்து செயல்பட வேண்டும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


தாக்கு...!

 Mr Gyanesh Kumar @ECISVEEP you are responsible for aiding & abetting the suicide of BLO Rinku Tarafdar, 52 , who took her own life last night. In her suicide note she mentioned clearly that only the EC  was responsible for her death.

- Mahua Moitra...



விமர்சனம்.....!

 தேர்தல் ஆணையம்...!

ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் விமர்சனம்...!

முழு விவரம் இதோ....



சவால்....!

 "HD Kumaraswamy is a traitor.

I will quit politics if he can prove I am in touch with Amit Shah."

- Karnataka DCM D K Shivakumar



உரை...!

 Dearborn Muslim woman whose family has been in America since the 1640’s speaks in response to the anti-Islam protests.



Saturday, November 22, 2025

டிரம்ப்-மம்தானி சந்திப்பு....!

 " டிரம்ப்-மம்தானி சந்திப்பு: கவனிக்க வேண்டிய அம்சங்கள் "

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் மக்களின் ஆமோக ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்ற முஸ்லிம் வேட்பாளர்  சஹ்ரான் மம்தானி, பல அதிரடி நடவடிக்கைகள் மூலம் நியூயார்க் மக்களின் கவனத்தை மட்டுமல்ல, அமெரிக்கா மற்றும் உலக மக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். தேர்தலில் மிகவும் துணிச்சலான பேச்சுகள், மக்களிடம் வாக்கு கேட்கும் முறையில் புதிய அணுகுமுறை, எளிமையான வாழ்க்கை பணிகள் என அனைத்தும் கொண்டவர் தான் சஹ்ரான் மம்தானி. பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்துவரும் அவர், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் வந்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார் என்றும் தேர்தலுக்கு முன்பு மட்டுமல்லாமல், மேயராக தேர்வு செய்யப்பட்ட பிறகும் கூட மிக தெளிவாக, உறுதியாக தெரிவித்து வருகிறார்.

பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா நிதி உள்ளிட்ட எந்தவித உதவிகளையும் வழங்கக் கூடாது என்பது மம்தானியின் நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில் அவர் மிகமிக உறுதியாகவும் இருந்து வருகிறார். அமெரிக்க மக்களின் வரிப் பணம், பாலஸ்தீன மக்கள் கொல்வதற்கு பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் உறுதிப்பட கூறி வருகிறார். மேயராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, முதல்முறையாக வாஷிங்டன் நகருக்கு சஹ்ரான் மம்தானி சனிக்கிழமை (22.11.2025) சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். சஹ்ரான் மம்தானியின் வாஷிங்டன் பயணம் தற்போது உலகம் முழுவதும் வரவேற்றைப் பெற்றுள்ளது. அதற்கு முக்கிய காரணம், சஹ்ரான் மம்தானியின் புதிய அணுகுமுறை என்றே கூற வேண்டும். 

டிரம்ப்-மம்தானி சந்திப்பு :

நியூயார்க்கில் இருந்து வாஷிங்டன் சென்ற மம்தானி, அமரிக்க அதிபர் டொனால்ட் டிரப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார்.  டிரம்ப்-மம்தானியின் இந்த சந்திப்பு பலரை, குறிப்பாக பழமைவாதிகளை ஆச்சரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. சில வாரங்களுக்கு முன்பு, மம்தானி தலைமையிலான நியூயார்க்கிற்கு "முழுமையான மற்றும் முழுமையான பொருளாதார மற்றும் சமூக அழிவு" ஏற்படும் என்று அதிபர் டிரம்ப் விமர்சனம் செய்து இருந்தார்.  மேலும், கூட்டாட்சி நிதியை நிறுத்தி வைப்பதாகவும் அச்சுறுத்தினார். 

ஆனால் வாஷிங்டன், டி.சி.யில், இருவரும் நட்பு சூழ்நிலையில் பேசிக் கொண்டிருந்தனர். மம்தானி நிர்வாகத்தின் கீழ் நியூயார்க்கில் வாழ்வது தனக்கு வசதியாக இருக்கும் என்று டிரம்ப் கூறினார். மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயரை வலுவான தலைமைத்துவ திறன்களைக் கொண்ட "பகுத்தறிவு நபர்" என்றும் டிரம்ப் பாராட்டினார். மம்தானியும் அந்த உணர்வை எதிரொலித்தார். நியூயார்க்கை அதன் குடியிருப்பாளர்களுக்கு மிகவும் மலிவு விலையில் மாற்ற டிரம்புடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகக் கூறினார். மம்தானியின் முயற்சிகளுக்கு உதவ விரும்புவதாகவும் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறினார். மேலும், புதிய மேயரின் நியூயார்க்கர்களுக்காக பணியாற்றும் திறனில் நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார். பின்னர் சந்திப்பில், குடியேற்ற அமலாக்கம் மற்றும் மலிவு விலை குறித்த கவலைகளைப் பற்றி மம்தானி விவாதித்தார். சித்தாந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும், பொதுவான இலக்குகளில் ஒன்றாக இணைந்து பணியாற்ற முடியும் என்று இருவரும் ஒப்புக்கொண்டனர்.

அதிபர் டிரம்ப் கருத்து :

நியூயார்க் மேயர்  சஹ்ரான் மம்தானிவுடனான சந்திப்பு குறித்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்து, அமெரிக்க மக்களை மட்டுமல்லாமல், பல்வேறு அரசியல் தலைவர்களை வியப்பு மற்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.  “மம்தானி என்னிடம் குற்றத்தைப் பார்க்க விரும்பவில்லை. நானும் அவரிடம் குற்றத்தைப் பார்க்க விரும்பவில்லை. அதில் நாங்கள் உடன்படுகிறோம்” என்று டிரம்ப் கூறினார். 

“சோசலிசத்தின் பயங்கரமான விளைவுகளை” கண்டிக்கும் பிரதிநிதிகள் சபையின் வாக்கெடுப்பு குறித்து கேட்டபோது, ​​மம்தானி கவலைப்படவில்லை என்றார். ஒரு ஜனநாயக சோசலிஸ்டாக, தனது கவனம் வரவிருக்கும் வேலையில் இருப்பதாக அவர் கூறினார். “மக்களுக்கு வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், நியூயார்க் நகரத்தை வாழத் தகுதியானதாக மாற்ற நாம் செய்ய வேண்டிய வேலை” என்று மம்தானி கூறினார்.

ஜனநாயகத்தின் சரியான எடுத்துக்காட்டு :

அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கும் நியூயார்க் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சஹ்ரான் மம்தானிக்கும் இடையிலான இந்த சந்திப்பு இந்தியாவில் உள்ள சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து கருத்து கூறியுள்ள காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர், இந்தியாவில் இதுபோன்ற ஜனநாயக நடைமுறைகளைக் காண விரும்புவதாகக் கூறியுள்ளார். 

இந்த சந்திப்பு ஜனநாயகத்தின் சரியான எடுத்துக்காட்டு என்று சசி தரூர் தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மற்றும் தெற்காசிய மேயராக மம்தானியின் வரலாற்று வெற்றியை முன்னதாகப் பாராட்டிய தரூர், மக்கள் தீர்ப்பிற்குப் பிறகு தலைவர்கள் எவ்வாறு தேர்தல்களில் கடுமையாகப் போராட முடியும். ஆனால் பொது நன்மைக்காக ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதையும் டிரம்ப்-மம்தானி சந்திப்பு காட்டுகிறது என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். டிரம்ப்-மம்தானி நல்லிணக்கத்தை பாராட்டிய தரூர், ஜனநாயகம் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்றும், தேர்தல்களில் உங்கள் கருத்துக்காக எந்தவித தடைகளும் இல்லாமல், உணர்ச்சிவசப்பட்டுப் போராடுங்கள். ஆனால் தேர்தல் முடிந்ததும், மக்களின் தீர்ப்பு வந்ததும், நீங்கள் இருவரும் சேவை செய்வதாக உறுதியளித்த நாட்டின் பொதுவான நலன்களுக்காக ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க கற்றுக்கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிலும் இதுபோன்ற காட்சிகளைக் காண தாம் விரும்புவதாக கூறியுள்ள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், அதற்காக தனது பங்கை ஆற்ற முயற்சிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். 

உண்மையில் அதிபர் டிரம்புக்கும், நியூயார்க் நகர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சஹ்ரான் மம்தானிக்கும் இடையிலான சந்திப்பு மிகமிக தெளிவான ஒரு பார்வையை, நல்ல அம்சத்தை, கருத்தை உலகின் முன் வைத்துள்ளது. தேர்தல்களின்போது எப்படி எதிர்த்து செயல்பட்டாலும், தேர்தல் முடிந்ததும், நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான், நாட்டில் உண்மையான வளர்ச்சி, அமைதி, முன்னேற்றம், பொருளாதார மேம்பாடு ஏற்படும். அந்த வகையில், அதிபர் டிரம்ப் மற்றும் நியூயார்க் மேயர் சஹ்ரான் மம்தானியின் வாஷிங்டன் சந்திப்பு இந்திய அரசியல் தலைவர்களுக்கு மட்டுல்லமல்லாமல், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு அனைவருக்கும்  ஒரு நல்ல பாடத்தை சொல்லியுள்ளது என்பது மறக்க முடியாத உண்மையாகும். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


மன வேதனையுடன்...!

 Today at Masjid an-Nabawi, after completing all the necessary formalities, the final burial procedures were carried out for all the victims of the Makkah–Madinah Highway road accident who belonged to Hyderabad.



ஒழுக்கம்....!

 She really explained how discipline can change your entire life.



Meeting...!

 Trump on Mamdani (all in one place).

This is how democracy should work. Fight passionately for your point of view in elections, with no rhetorical holds barred. But once it’s over, & the people have spoken, learn to cooperate with each other in the common interests of the nation you are both pledged to serve. I would love to see more of this in India — and am trying to do my part.



Friday, November 21, 2025

விளக்கம்....!

 பீகார் சட்டமன்றத் தேர்தல்...!

SIR....!

முறைகேடுகள் எப்படி நடைபெறுகிறது...!

காங்கிரஸ் விளக்கம்...!



Thursday, November 20, 2025

78வது தப்லீக் ஜமாஅத் இஜ்திமா....!

 " போபாலில் நடைபெற்ற 78வது தப்லீக் ஜமாஅத் இஜ்திமா "

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் மத்தியில் நல்ல ஒழுக்கச் சிந்தனைகள், பண்புகள், ஆன்மீக பயிற்சிகள், சகோரத்துவ குணங்கள் உள்ளிட்டவற்றை சொல்லித்தரும் ஒரு இஸ்லாமிய அமைப்பாக தப்லீக் ஜமாஅத் இருந்து வருகிறது. இந்தியாவின் பல நகரங்களில் தப்லீக் ஜமாஅத் மூலம், அவ்வப்போது இஜ்திமா எனும் மாநாடுகள் மிகவும் அமைதியான முறையில் நடத்தப்பட்டு வருகின்றன. எந்தவித ஆர்ப்பாட்டம், விளம்பரம் என எதுவும் இல்லாமல் வாய்மொழியாக பரப்படும் இஜ்திமா தொடர்பான தகவல்கள் மற்றும் செய்திகள் மூலம், முஸ்லிம்கள் தங்களுடைய சொந்த பணத்தை செலவு செய்து இத்தகைய இஜ்திமாவில் கலந்துகொண்டு, இறை நம்பிக்கையை மேலும் வலிமையாக மாற்றிக் கொள்கிறார்கள். நல்ல ஒழுக்கச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்கிறார்கள். 

78வது தப்லீக் ஜமாஅத் இஜ்திமா :

அந்த வகையில், மத்திய பிரதேச தலைநகர் போபாலில் அண்மையில் 78வது தப்லீக் ஜமாஅத் இஜ்திமா நடைபெற்றது. 600 ஏக்கர் பரப்பளவில் மிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இஜ்திமா,  நவம்பர் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றது. இஜ்திமாவில் 240 உணவுக் கடைகள் அமைக்கப்பட, 25 ஆயிரம் தன்னார்வலர்கள் சிறப்பான பணியை செய்ய, உலகம் முழுவதும் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிகள் கலந்துகொண்டனர்.

இந்தியா முழுவதும் இருந்து மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழுக்கள் இந்த இஜ்திமாவில் கலந்துகொண்டு சிறப்பித்தன. இஜ்திமாவில் 300 நிக்ஹாக்கள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை தொடங்கிய இஜ்திமா திங்கள்கிழமை (17.11.2025)  காலை உலக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒரு பிரமாண்டமான 'துஆ' (பிரார்த்தனை) உடன் முடிவடைந்தது. இந்த இஜ்திமாவில், லட்சக்கணக்கான முஸ்லிம்கள் கூடியபோதும் எந்தவித பிரச்சினையும், நெரிச்சலும் ஏற்படவில்லை. சுமார் 10 லட்சம் வரை இஜ்திமாவில் மக்கள் கூடியதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

பிரமாண்ட ஏற்பாடுகள் :

போபாலின் புறநகரில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஐன்ட்கெடியில் இந்த 78வது தப்லீக் இஜ்திமா நடைபெற்றது. இந்த ஆண்டு, ஏற்பாட்டாளர்கள் பரந்த கூட்டத்தை இடமளிக்க மிகவும் சிறப்பான, முறையான ஏற்பாடுகளைச் செய்து இருந்தனர்.  பிரதான  பெவிலியன் 120 ஏக்கர் பரப்பளவையும், வாகன நிறுத்துமிடம் 350 ஏக்கர் பரப்பளவையும், முழு இஜ்திமா தளமும் கிட்டத்தட்ட 600 ஏக்கர் பரப்பளவையும் கொண்டு இருந்தது.. சமீபத்திய டெல்லி குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.  நிர்வாகக் குழு மற்றும் காவல்துறையினர் இருவரும் இஜ்திமா நடைபெறும் இடத்தை தீவிரமாக மேற்பார்வையிட்டு, மிகச் சிறந்த முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். 

இஜ்திமாவை ஒட்டி, ஒரு வாரமாக தன்னார்வலர்களின் உதவியுடன் போக்குவரத்து, மருத்துவம், போக்குவரத்து மற்றும் பிற உள்கட்டமைப்பு சேவைகள் நிர்வகிக்கப்பட்டன. கரோண்ட் சந்திப்பிலிருந்து ஐன்ட்கெடி வரை, ஜமாஅத்தினர் தொடர்ந்து வந்ததால் சாலைகள் தொடர்ச்சியான ஊர்வலத்தைப் போல இருந்தன. பலர் திங்களன்று இறுதி நிகழ்வுகளில் பங்கேற்க இரவு தங்கத் தேர்ந்தெடுத்தனர்.

உலக அமைதிக்காக துஆ :

இறுதி அமர்வு திங்கட்கிழமை (17.11.2025) காலை திட்டமிடப்பட்டு, மிகச் சிறந்த முறையில் நடைபெற்றது. அப்போது உலக அமைதிக்காக பிரமாண்டமான 'துஆ' காலை 10 மணியளவில் தொடங்கியபோது, அதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அதில் கலந்துகொண்டு, கண்ணீர் சிந்தி, மனம் உருகி, இந்திய நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் மேலும் உலக அமைதிக்காகவும், பாலஸ்தீன மக்களுக்காகவும்  ஏக இறைவனிடம் கையேந்தி  பிரார்த்தனை செய்தனர். 

இதற்கிடையில், பழைய இஜ்திமா தளமான தாஜ்-உல்-மசாஜித்-ராயல் சந்தைப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் கடைகள், குறிப்பாக அவசர மற்றும் பொது வாகனங்களைப் பாதித்தன. பிரதான அணுகு சாலைகளில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் மற்றும் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தாலும், ராயல் சந்தையில் போக்குவரத்து மேலாண்மை குறைவாகவே இருந்தது.  

 300 நிக்ஹாக்கள் :

முதல் நாளில், பாரம்பரியத்தின் படி 300 நிக்ஹாக்கள் செய்யப்பட்டன. மௌலானா யூசுப் புதுமணத் தம்பதிகளுக்கு எதிர்பார்க்கப்படும் நடத்தை குறித்து வழிகாட்டுதலை வழங்கினார். குறைந்த கட்டணத்தில் ஜமாஅத்தினருக்கு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 240 கடைகள் பல்வேறு பொருட்களை வழங்கின. இஜ்திமா குழுவைச் சேர்ந்த 25 ஆயிரம் தன்னார்வலர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள், நிர்வாகம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 5 ஆயிரம் ஊழியர்கள் உட்பட மொத்தம்  35 ஆயிரம் பணியாளர்கள் இஜ்திமா நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டனர். அவர்கள் சுகாதாரம், போக்குவரத்து, நீர் வழங்கல், பாதுகாப்பு மற்றும் உணவு ஏற்பாடுகளை நிர்வகித்து அழகிய முறையில் தங்களை சேவையை வழங்கினார்கள்.  தீயணைப்பு படை குழுக்கள் மற்றும் வாகனங்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. 

இந்த ஆண்டு நடந்த இஜ்திமா மற்றொரு பெரிய அளவிலான, உன்னிப்பாக நிர்வகிக்கப்படும் கூட்டத்தைக் குறிக்கும் வகையில் வெற்றிகரமாக அமைந்து இருந்தது. இது நிகழ்வின் நீடித்த முக்கியத்துவத்தையும், உலகம் முழுவதிலுமிருந்து பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை நடத்துவதற்குத் தேவையான பாரிய ஒருங்கிணைப்பையும் நிரூபிக்கும் வகையில் தப்லீக்  ஜமாஅத் இஜ்திமா அமைந்து இருந்தது. 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

குழந்தை வளர்ப்பு கலை....!

 " குழந்தை வளர்ப்பு எனும் அழகிய கலை "

மனித சமுதாயத்திற்கு ஏக இறைவன் கொடுத்துள்ள மிகப்பெரிய செல்வம் குழந்தை செல்வம் என்றே கூற வேண்டும். காசு, பணம், பொருள், வசதி, வாய்ப்பு என அனைத்தும் குவிந்து இருந்தாலும், வீட்டில் குழந்தைகள் இல்லையெனில், அந்த வீடு மகிழ்ச்சியின் இருப்பிடமாக ஒருபோதும் இருக்காது. குழந்தைகளின் மழலை பெற்றோர்களின் மனதில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும். பெற்றோர்களை மட்டுமல்லாமல், வீட்டிற்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் குழந்தைகளின் மழலைப் பேச்சு மிகப்பெரிய ஆனந்தத்தைத் தரும். மகிழ்ச்சியான சூழலை உருவாக்கும்.

இதன் காரணமாக தான் வள்ளூவர் பெருந்தகை தனது திருக்குறளின் 66 ஆம் குறட்பாவில் "குழல் இனிது யாழ் இனிது" என்று அழகிய முறையில் ஒரு குறளை உருவாக்கியுள்ளார். "குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்" என்ற அந்த குறளில் "குழலின் ஓசையும் யாழின் இசையும் இனிமையானவை என்று கூறுபவர்கள், தங்கள் குழந்தைகளின் மழலைக் குரலைக் கேட்காதவர்கள்" என்று வள்ளூவர் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். குழந்தைகளிடம் இருந்து வரும் மழலைச் சொற்களே குழல் மற்றும் யாழின் இசையை விட மிகவும் இனிமையானவை என்பதே குறளின் சாராம்சமாகும். இது உண்மை தான். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்டால், அதன் இனிமை காரணமாக, குழல் மற்றும் யாழ் போன்ற கருவிகளின் இசை இனிமையானது என்ற கருத்தை அவர்கள் புறக்கணித்துவிடுவார்கள். 

குழந்தை வளர்ப்பு ஒரு அழகிய கலை :

இப்படி, குழலின் ஓசை மற்றும் யாழின் இசையை விட மிகவும் உயர்ந்த மழலையின் குரலை கேட்கும் பெற்றோர்கள், குழந்தை வளர்ப்பில் மிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.  பெரியவர்களை மதிப்பது, எல்லா சூழ்நிலைகளிலும் உண்மையைப் பேசுவது, குழந்தைகளை நேசிப்பது போன்ற பழக்கங்களை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சொல்லித் தர வேண்டும். குறிப்பாக தாய்மார்கள், சில குறிப்புகளைப் பின்பற்றும்போது, அவர்களின் குழந்தைகளும் அவர்களைப் பின்பற்றுவார்கள். எனவே, குழந்தைகளைத் திருத்துவதற்கு முன், பெற்றோர்கள் தங்களைத் திருத்திக் கொண்டு, அவர்கள் முன் சிறந்த முன்மாதிரியாக தங்களைக் காட்டிக் கொள்ள வேண்டும்..

ஒரு நல்ல சமூகத்தை உருவாக்க ஒரு வலுவான அடித்தளம் தேவை. தற்போதைய சகாப்தத்தில், சமூகத்தின் அடித்தளம் பலவீனமடைந்து வருகிறது. மனிதன் மனிதனை மதிப்பதில்லை. நாம் ஒருவருக்கொருவர் அக்கறை கொள்வதில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறோம். பெரும்பாலும் நாம் உணர்திறன் மிக்க விஷயங்களைக் கூட நகைச்சுவைப் பொருளாக ஆக்குகிறோம். யாராவது விழுந்தால், அவரை ஆதரிப்பதற்குப் பதிலாக, அவரைப் பற்றிய வீடியோக்களை உருவாக்கத் தொடங்குகிறோம். அந்நியரிடம் கூட அனுதாபம் இல்லை.  நெருங்கிய உறவினர்கள் கூட அந்நியர்களாகத் தெரிகிறார்கள். 

நமக்குத் தேவைப்படும்போது நம் அன்புக்குரியவர்களை நினைவில் கொள்கிறோம். நமது புதிய தலைமுறையினர் இந்த நடத்தையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கேள்வி என்னவென்றால், நமது கலாச்சாரத்தையும் மதிப்புகளையும் மாற்றும் காரணிகள் என்ன, அவற்றை எவ்வாறு நிறுத்த முடியும்? வீட்டுச் சூழல் குழந்தைகளின் ஆளுமையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, குழந்தைகள் தங்கள் பெற்றோர் செய்வதைப் பின்பற்றுகிறார்கள். குழந்தைகளின் ஆரம்பக் கல்வி மிகவும் முக்கியமானது. இதில் தாய்மார்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். எனவே, அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு செயலிலும் தாய்மார்கள் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகள் வீட்டிலிருந்து ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்கிறார்கள். ஒவ்வொரு சகாப்தத்திலும் நல்லதும் தீமையும் இருந்து வந்துள்ளன. குழந்தைகளுக்கு நல்ல மற்றும் நேர்மறையான விஷயங்களைக் கற்றுக்கொடுத்து கற்பிக்கப்படும் இடத்தில், சமூகத்தில் நல்ல மற்றும் நேர்மறையான சிந்தனை மேலோங்கி நிற்கிறது.

நேர்மறையான சிந்தனை :

தாய்மார்களே நல்ல விஷயங்களையும் நேர்மறையான சிந்தனையையும் அறியாதபோது, ​அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்ன விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்?  இன்றைய நிலைமை என்னவென்றால், சமூகத்தில் எல்லா இடங்களிலும் தீமைகள் சிதறிக்கிடக்கின்றன. குடும்பம் பாதிக்கப்பட்டு கூட்டுக் குடும்ப அமைப்பு உடைந்து வருகிறது. தனது வீட்டிற்காக சமரசம் செய்து, பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் உழைத்து, தியாகங்களைச் செய்த பெண், ஆனால் வாழ்க்கையின் உயர்ந்த மதிப்புகளைப் பாதுகாக்கும் சமூகம் அத்தகைய பெண்ணை மதிக்கவில்லை. அவளுடைய நேர்மையான முயற்சிகளையும் தியாகங்களையும் பாராட்டவில்லை. பின்னர் இந்தப் பெண் இந்த மதிப்புகளை தனது மகளுக்கும் புதிய தலைமுறைக்கும் மாற்றவில்லை. இதனால், அந்த மதிப்புகள் கட்டுக்கதைகள் மற்றும் கனவுகளின் கதாபாத்திரங்களாக மாறின. இதன் விளைவாக, நமது தார்மீக மதிப்புகளை மோசமாக மீறியுள்ளது. சமூகத்தில், தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான உறவுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது மட்டுமல்லாமல், தந்தை மற்றும் பிற நெருங்கிய உறவினர்களும் குழந்தையின் ஆளுமையை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். 

நமது நடுத்தர வர்க்கத்தில் குடும்ப அமைப்பு இன்னும் ஓரளவுக்கு பயனுள்ளதாக உள்ளது. மேலும் அங்கு நல்ல மதிப்புகள் இன்னும் காணப்படுகின்றன. எனவே, முழு சமூகமும் சீரழிவை நோக்கிச் செல்கிறது என்று சொல்வது சரியல்ல. நிலைமையை இன்னும் மாற்ற முடியும், இதற்காக, பெண்கள் முன்வர வேண்டும். பெற்றோர்கள், குறிப்பாக தாய்மார்கள், குழந்தைகளை வழிநடத்துகிறார்கள். எனவே, முதலில், அவர்களே ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் தொடர்பு மிகவும் முக்கியமானது. இன்றைய சகாப்தத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒழுக்கத்துடன் நன்றாக வளர்க்கும் கடமையைச் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

தொடர்ந்து திட்டமிடல் :

இதற்காக, அவர்கள் தொடர்ந்து திட்டமிட வேண்டும். இன்றைய சகாப்தத்தில் திட்டமிடல் மற்றும் தொடர்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சமூகம் வேகமாக மாறி வருகிறது என்பதில் சந்தேகமில்லை, எனவே ஒரு புதிய பாணியிலான பயிற்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைகளின் கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.. பாரம்பரிய பயிற்சி முறையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, இணையத்தில் கிடைக்கும் நிபுணர்களின் பெற்றோருக்குரிய பாணிகளைப் பற்றிப் படித்து அவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள். பெரியவர்களை மதிப்பது, எல்லா சூழ்நிலைகளிலும் உண்மையைப் பேசுவது, குழந்தைகளை நேசிப்பது போன்ற பழக்கங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். பெற்றோர்கள், குறிப்பாக தாய்மார்கள், இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றும்போது, ​​குழந்தைகளும் அவர்களைப் பின்பற்றுவார்கள். 

எனவே, குழந்தைகளைத் திருத்துவதற்கு முன், பெற்றோர்கள் தங்களைத் திருத்திக் கொண்டு, அவர்கள் முன் சிறந்த முன்மாதிரியாக உங்களைக் காட்டிக் கொள்ளுங்கள். ஹலால் உணவுமுறை குழந்தைகளைப் பயிற்றுவிப்பதில் மிகவும் உதவியாக இருக்கும். நாம் நம் குழந்தைகளை நம்ப வேண்டும். நல்லது கெட்டதுக்கு இடையிலான வித்தியாசத்தை அவர்களுக்குச் சொல்ல வேண்டும். இவை அனைத்தையும் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே, நாம் நல்ல பெற்றோர்கள் என்பதை நிரூபிக்கவும், சிறந்த சமூகத்தை உருவாக்கவும் முடியும்.

கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் :

தாய்மார்கள் குழந்தைகளை 'நீங்கள்' என்று அழைக்க வேண்டும்.வீட்டின் மூத்த குழந்தைகள் திட்டப்பட்டால், தலையிடவோ அல்லது குழந்தைக்காக வாதிடவோ வேண்டாம். ஏனெனில் இந்த வழியில், குழந்தையின் இதயத்தில் பெரியவர்கள் மீது எதிர்மறையான அணுகுமுறை உருவாகலாம். மேலும் அவர் எதிர்காலத்தில் அத்தகைய சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கலாம். குழந்தைகளுக்கு இடையே வேறுபாடு காட்டாதீர்கள். ஒரு குழந்தை பலவீனமாக இருந்தாலும், வெளிப்புறமாக அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்துங்கள்.

குழந்தைகள் முன் மொபைல் போன்களைப் பயன்படுத்த வேண்டாம். குழந்தைகள் தங்கள் பெரியவர்களைப் பின்பற்றுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை மொபைல் போன் பயன்படுத்துவதைத் தடை செய்தால், நீங்களும் போன்களைப் பயன்படுத்துவதாக அவர்கள் நியாயப்படுத்துவார்கள். குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லுங்கள். தாய்மார்கள் குழந்தைகளிடம் ஒருபோதும் பொய் சொல்லக்கூடாது. குழந்தைகள் பொய் சொல்லும்போது கொஞ்சம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.  தாய்மார்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் குழந்தைகளுடன் அர்த்தமுள்ள நேரத்தைச் செலவிட வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நெருக்கமாக இருப்பதன் மூலம் அவர்கள் சிறப்பாகப் பயிற்சி பெற முடியும். இப்படி அழகிய முறையில் குழந்தைகளை ஒரு கலை உணர்வுடன் வளர்த்தால், நிச்சயம் ஒரு எதிர்கால சமுதாயம் உருவாக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றே கூறலாம். 

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

குர்ஆன்....!

 Heal your soul with the Qur'an...!




துயரம்....!

 Muslims who died during pilgrimage in Medina are buried at the Holy City. That’s the equality and beauty of Islam. It doesn’t matter if you are Arab, South Asian, Indonesian, African or European. All are buried in same cemetery. All are equal for Allah....!.



Wednesday, November 19, 2025

சில....சில....!

 பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்...!

சில கேள்விகள்...!

சில சிந்தனைகள்...!

சில விமர்சனங்கள்...!

சில கருத்துகள்...!



Tuesday, November 18, 2025

என்ன தகவல்...?

 பீகார் சட்டமன்றத் தேர்தல்...!

SIR மூலம் எப்படி முறைகேடு நடைபெற்றது?

பிரசாந்த் கிஷோர் என்ன சொல்கிறார்?

இதோ....



முடிவு....!

 S I R....!

காங்கிரஸ் முக்கிய ஆலோசனை...!

என்ன முடிவு எடுக்கப்பட்டது..!

இதோ முழு விவரம்...!



SIR....!

 S I R மோசடி...!

சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் தரும் பரபரப்பு தகவல்.

கேளுங்கள்....!

கேளுங்கள்...!!



குர்ஆன்....!

 A Spanish girl who recently embraced Islam now shares daily broadcasts explaining Quranic verses to help clarify them for Western audiences...

quite astonishing to see new muslims become the teachers of islam to muslims and non-muslims....



குற்றச்சாட்டு....!

 Prashant Kishor exposed the Election Commission of India for favouring BJP

"ECI is playing in hands of govt, since Maharashtra election there is suspicious increase in voting %. Opposition need to pressurise them.." 



Monday, November 17, 2025

வெந்நீர்.....!

 If you drink hot water every morning on an empty stomach listen carefully..

This is what will happen to your body...!



கேளுங்கள்...!

 ED

CBI

SIR

Godi Media

Electoral Bonds

Election Commission 

Elections are no longer level playing fields, they are now one-sided fixed matches whose outcomes are pre-decided by BJP.

Be honest, is India still a democracy?



நம்பிக்கையின் கதிர்களாக....!

 " நம்பிக்கையின் கதிர்களாக விளங்கும் தென் மாநிலங்கள் "

இந்திய மக்கள் தொகையில் இரண்டாவது மிகப்பெரிய தொகையாக முஸ்லிம்கள் இருந்து வருகிறார்கள். இந்தியாவில் வாழும் 140 கோடி மக்களில், சுமார் 25 கோடி பேர் முஸ்லிம்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் முஸ்லிம்களில் கிட்டத்தட்ட 60 சதவீத பேர் உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், அசாம் மற்றும் அவற்றை ஒட்டிய பகுதிகளில் வாழ்கின்றனர். அவர்களின் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை பங்கு மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் இருந்தபோதிலும், இந்த மாநிலங்களில் வாழும் முஸ்லிம்கள் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் மிகமிக பின்தங்கிய நிலையில் உள்ளனர். இந்த வட மாநிலங்களின் முஸ்லிம்கள் இந்தியப் பிரிவினையால் அதிகம் பாதிக்கப்பட்டனர். இது அவர்களுக்கு ஒரு கூட்டு பாதிக்கப்பட்டவர் என்ற உணர்வையும் தோல்வியுற்ற கதையையுமே விட்டுச் சென்றது.

இந்தப் பகுதிகளில் தோன்றிய தலைமை பெரும்பாலும் அடையாளப் பிரச்சினைகளை உயிருடன் வைத்திருப்பதன் மூலம் செழித்து வளர்ந்துள்ளது. 1986 ஆம் ஆண்டு ஷா பானோ வழக்கிலிருந்து, வடக்கில் முஸ்லிம் அரசியல், சல்மான் ருஷ்டி மற்றும் தஸ்லிமா நஸ்ரின் எழுதிய புத்தகங்களைத் தடை செய்தல், பாபரி மஸ்ஜித் தகராறு, முத்தலாக் விவாதங்கள் மற்றும் ஈத் மிலாதுன் நபி விடுமுறைகள் போன்ற உணர்ச்சி மற்றும் மதப் பிரச்சினைகளைச் சுற்றியே சுழன்றுள்ளது. அதேநேரத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டுவசதி மற்றும் பொருளாதார சீர்திருத்தம் போன்ற அழுத்தமான கவலைகளைப் புறக்கணிக்கிறது.

அறிவொளியின் கலங்கரை விளக்கம் :

சுதந்திரம் அடைந்த எட்டு தசாப்தங்களுக்குப் பிறகும், வட மாநிலத் தலைமை, நவீன உலகின் யதார்த்தங்களிலிருந்து துண்டிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மதரஸாக்களால் ஆதரிக்கப்படும் உணர்ச்சிபூர்வமான சொல்லாட்சிகளால் மக்களை தொடர்ந்து ஈடுபடுத்துகிறது. உத்தரப் பிரதேசத்தில் மட்டும், சுமார் 23 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட மதரஸாக்களும், பீகாரில் சுமார் 4 ஆயிரம் மதரஸாக்களும் உள்ளன. இந்த நிறுவனங்களுக்கு ஏராளமான ஜகாத், ஃபித்ரா மற்றும் தொண்டு நிதிகள் கொட்டப்படுகின்றன. அதேநேரத்தில் ஆசிரியர்கள் ரமழானில் சொகுசு உம்ரா பயணங்களின் வசதியை அனுபவிக்கிறார்கள். ஒருசில ஆசிரியர்கள் அனைத்து வசதியையும் விட்டுவிட்டு, மார்க்கத்திற்காக உண்மையாக உழைக்கிறார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது. 

இந்தப் பின்னணியில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் அறிவொளியின் கலங்கரை விளக்கமாக நிற்கிறது. இருப்பினும், சர் சையது அகமது கானின் சீர்திருத்த நோக்கம் மதகுருமார்களின் எதிர்ப்பால் குறைமதிப்பிற்கு உட்பட்டது. இது வட இந்தியாவில் பாரம்பரிய மதரஸாக்களின் வெள்ளத்திற்கு வழிவகுத்தது. எனவே வட மாநிலங்களில் நவீன கல்விக்கான நிறுவனங்கள் உருவாகவில்லை. அதில் வட மாநில முஸ்லிம்கள் அதிக கவனம் செலுத்தவில்லை. 

தென்மாநிலங்களில் நவீன கல்வியில் முதலீடு :

இதற்கு நேர்மாறாக, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள தென்னிந்திய முஸ்லிம்கள் சரியான பாடங்களைக் கற்றுக்கொண்டனர். அவர்கள் நவீன கல்வியில் முதலீடு செய்தனர். இன்று அவர்களின் சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்முறை நிறுவனங்களை நிறுவினர்.

தமிழ்நாட்டில், முகமதியன் கல்லூரி 1905 இல் சென்னையில் நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய கல்லூரி (1951) மற்றும் எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரி (நீதிபதி பஷீர் அகமது சயீத் நிறுவினார்). வாணியம்பாடி என்ற சிறிய நகரம் 1919 இல் இஸ்லாமியா கல்லூரியை நிறுவியது. இப்போது ஒரு நூற்றாண்டுக்கும் மேலானது. திருச்சி ஜமால் முகமது கல்லூரி, மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கல்லூரி என பல கல்வி நிறுவனங்கள் தமிழக முஸ்லிம்கள் நிறுவி முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல், அனைத்துச் சமுதாய இளைஞர்களும் பயன்பெறும் வகையில் கல்விப் பணியை ஆற்றி வருகிறது. இன்று, மாநிலத்தில் சுமார் 35 பட்டப்படிப்பு மற்றும் முதுகலை கல்லூரிகள், இரண்டு பல்கலைக்கழகங்கள், 20 பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. இருப்பினும் முஸ்லிம்கள் மக்கள் தொகையில் 5 புள்ளி 6 சதவீதம்   மட்டுமே உள்ளனர்.

கர்நாடகா மாநிலமும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 55 பல்கலைக்கழகங்களில், ஐந்து பல்கலைக்கழகங்கள் முஸ்லிம்களால் நிறுவப்பட்டவை. டாக்டர் மும்தாஜ் அகமது கான் 1964 ஆம் ஆண்டு அல்-அமீன் கல்லூரியை நிறுவினார். இது 200 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் வலையமைப்பாக வளர்ந்தது. பெங்களூருவில் மட்டும் சுமார் 550 முஸ்லிம்களால் நிர்வகிக்கப்படும் உயர்நிலைப் பள்ளிகள், 600 தொழில்துறை அலகுகள் மற்றும் ஏராளமான செழிப்பான முஸ்லிம் தொழில்முனைவோர் உள்ளனர்.

கொரோனா பேரிடர் நெருக்கடியின் போது, ​​பெங்களூருவில் உள்ள ஒரு முஸ்லிம் தன்னார்வ தொண்டு நிறுவனமான மெர்சி மிஷன், 20 சமூக சமையலறைகளை நடத்தி, ஏழைக் குடும்பங்களுக்கு 14 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவை விநியோகித்தது. இந்த சேவை மிகவும் திறமையாக இருந்து மிகப்பெரிய அளவுக்கு பாராட்டு பெற்றது. அப்போதைய  பாஜக ஆட்சியின் கீழும் கூட, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பெட்டிகளை வழங்கும் பொறுப்பை மாநில அரசு அவர்களிடம் ஒப்படைத்தது.

கேரளாவில் ஒரு அரிய நிகழ்வு :

கேரளாவின் முன்னேற்றம் சமமாக ஊக்கமளிக்கிறது. அதன் முதல் முஸ்லிம் கல்லூரியான ஃபாரூக் கல்லூரி (1949), 150 க்கும் மேற்பட்ட பட்டப்படிப்பு கல்லூரிகள் மற்றும் டஜன் கணக்கான பொறியியல் மற்றும் மருத்துவ நிறுவனங்களின் வலையமைப்பிற்கு வழி வகுத்தது. யூசுப் அலி (லுலு குழுமம்) மற்றும் எம்.ஏ. யூசுப்ஃபாலி (மலபார் கோல்ட்) போன்ற முஸ்லிம் தொழிலதிபர்கள் உலகளாவிய பெயர்களாகிவிட்டனர். கேரளாவில், மக்கள் தொகையில் சுமார் 27 சதவீதம் முஸ்லிம்கள் விகிதாசார அரசியல் பிரதிநிதித்துவத்தை அனுபவிக்கின்றனர். இது இந்தியாவில் ஒரு அரிய நிகழ்வு.

கேரள முஸ்லிம்கள் உலக அளவில் மிகப்பெரிய அளவுக்கு சாதித்து வருகிறார்கள் என்றால், அதற்கு முக்கிய காரணம், கல்வியில் அவர்கள் அதிக கவனம் செலுத்தியது என்றே கூறலாம். பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட கல்வியை கூட, மீண்டும் பெற்றுவிட வேண்டும் என்ற ஆவல் கேரள முஸ்லிம் பெண்களிடம் அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அவர்கள் திருமணம் முடிந்து, குழந்தைகளைப் பெற்றபிறகு கூட, படிக்க கல்வியில் சேருகிறார்கள். நல்ல படிப்பை தேர்வு செய்து அதில் வெற்றியும் குவித்து வருகிறார்கள். 

பாடம் தெளிவாக உள்ளது : 

இத்தகைய சூழ்நிலையில், வட மாநில முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டவர் மற்றும் குறை அரசியலுக்கு அப்பால் உயர வேண்டும். அவர்கள் தங்கள் மனநிலையை நவீனமயமாக்க வேண்டும். கல்வி மற்றும் தொழில் நிறுவனத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் தென் மாநிலங்களின் வெற்றியைப் பின்பற்ற வேண்டும். மதரஸாக்களிலிருந்து உருவாகும் தலைமை 21 ஆம் நூற்றாண்டுக்குத் தயாராக இல்லை என்ற ஒரு வாதம் இருந்தாலும், மதரஸாக்களை நவீனமயமாக்கி, மார்க்கக் கல்வி, உலகக் கல்வி ஆகிய இரண்டிற்கும் பயன்படும் வகையில் முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வியைச் சொல்லித்தர முன்வர வேண்டும். மேலும் சமூகத்தை காலாவதியான சிந்தனைக்குள் அடைத்து வைக்கும் போக்கை உடனே கைவிட வேண்டும். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் முன்னேற, இந்திய முஸ்லிம்கள் சீர்திருத்தம், அறிவு மற்றும் நவீன ஈடுபாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும். 

தென்மாநில முஸ்லிம்கள் கல்வித்துறையில் செய்த சாதனைகளையும், வெற்றிகளையும் அறிந்துகொள்ள வட மாநில முஸ்லிம்கள் முன்வர வேண்டும். தென் மாநிலங்களில் பயணம் செய்து, அங்குள்ள முஸ்லிம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று ஆய்வு செய்ய வேண்டும். தென் மாநிலங்களில் எப்படி முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள் என்பதை அறிந்துகொள்ள முன்வர வேண்டும். தற்போது இந்திய முஸ்லிம்கள் பல்வேறு சவால்களை சந்தித்து மிகவும் நெருக்கடியான சூழலில் வாழ்ந்துவரும் நிலையில், அவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆர்வம் கொள்ள முன்வர வேண்டும். முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு கல்வி மற்றும் அதன்மூலம் அமையும் நல்ல தொழில் என்பதை மனதில் உள்வாங்கிக் கொண்டு, உடனே செயலில் இறங்க வேண்டும். முஸ்லிம்களுக்கு மதரஸாக்களும் வேண்டும். நவீன கல்விக்கான பல்கலைக்கழங்களும் வேண்டும். அப்போதுதான் அவர்கள் 21 ஆம் நூற்றாண்டில் சுதந்திரமாக சுவாசிக்க முடியும்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்


விளக்கம்...!

 S I R...!

தேர்தல் ஆணையம் கூறுவது உண்மையா...!

சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் கூறும் விளக்கம் என்ன?

இதோ சில, பல தகவல்கள்...!



கொய்யா...!

This is how to grow guava ath ome garden....

கொய்யா....!

சில தகவல்கள்...!



சில....சில....!

 பீகார் சட்டமன்றத் தேர்தல்...!

முறைகேடுகள் எப்படி நடைபெற்றன.

சில விளக்கம்....!

 சில தகவல்கள்.....!



Vote Chori...!

 There is no more any speculation Indians are acutely aware of the large scale voter fraud happening under the Modi govt. Indians finally know of fake votes, multiple voter ids, fake addresses, hundreds of people registered in tiny one-room houses thanks only and only to Rahul Gandhi who brought it all to light. 

He exposed the unholy nexus between Modi and ECI with proof. He started asking direct, pointed questions to the Election Commission and demanded data, which has been denied. 

Meanwhile the ECI has been deleting and adding lakhs of voters in state after state at will - undermining our electoral democracy. The issue now stands undeniable.

Yet instead of answers, Rahul Gandhi is being attacked - nonstop ugly personal attacks, media trials - to discredit him and drown his voice of truth and somehow desperately take the attention away from the blatant vote theft. 

Have you wondered - that if his allegations were baseless, why the panic? Why the coordinated senseless attack?

They’re terrified of the questions he’s forcing India to ask about the integrity of our elections - questions that affect every single vote you cast.

So if you have become party to the witch hunt against him,  unknowingly perhaps - step away.

Because when they try to drown his voice, remember - they’re actually drowning yours.

𝐓𝐡𝐞𝐲’𝐫𝐞 𝐧𝐨𝐭 𝐫𝐞𝐚𝐥𝐥𝐲 𝐚𝐟𝐭𝐞𝐫 𝐑𝐚𝐡𝐮𝐥 𝐆𝐚𝐧𝐝𝐡𝐢 - 𝐭𝐡𝐞𝐲’𝐫𝐞 𝐚𝐜𝐭𝐮𝐚𝐥𝐥𝐲 𝐚𝐟𝐭𝐞𝐫 𝐲𝐨𝐮! 𝐇𝐞’𝐬 𝐣𝐮𝐬𝐭 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐰𝐚𝐲. 

Demand answers. Because Vote Chori isn’t a Congress or BJP issue. It’s an India issue. It’s your issue.



Sunday, November 16, 2025

காஸா தெருக்களின் துயரம்.....!


"காஸா தெருக்களின் துயரம் திருவனந்தபுரத்தில் எதிரொலிப்பு"

பாலஸ்தீனத்தின் காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய கொடூரமான தாக்குதல்கள் காரணமாக, காஸாவின் தெருக்கள் முற்றிலும் சிரழிந்து துயரமான காட்சிகளாக விளங்கி வருகின்றன. இஸ்ரேலின் இரண்டு ஆண்டுகளின் தாக்குதலால், காஸாவின் அனைத்துக் கட்டடங்களும் இடிந்து விழுந்தன. இதனால் காஸா மக்களின் வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறிவிட்டது.

தற்போது போர் நின்றபோதிலும், அங்கு உண்மையான ஒளி அமைதி இன்னும் பிறக்கவே இல்லை. குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், காஸாவின் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் சந்திக்கும் சிரமங்களைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பெரும் துயரங்களைச் சந்திக்கும் காஸா மக்களுக்காக உலகம் முழுவதும் ஆதரவு குரல் எழுந்துகொண்டே இருக்கிறது. மனிதநேய உதவிகள் செய்ய உலக நன்மக்கள் தங்களுடைய கரங்களை நீட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் காஸா மக்களின் துயரங்கள் நீங்க பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, தங்களது ஆதரவை சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

திருவனந்தபுரத்தில் எதிரொலிப்பு :

அந்த வகையில், கேரள மாநிலத்  தலைநகர் திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (16.11.2025) அன்று நடைபெற்ற இஸ்ரேலிய தாக்குதல்களில் பலியான எண்ணற்ற குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலை வழித்தடமான மனவீயம் வீதி, நினைவு, துக்கம் மற்றும் கொடுமைகளை எதிர்க்கும் ஒற்றுமையின் உயிருள்ள காப்பகமாக மாறியது.

காஸா குழந்தைகள் மற்றும் மக்களின் ஒவ்வொரு பத்துப் பெயர்களுக்குப் பிறகு, கலாச்சாரத் தெருவிலிருந்து குரல்களின் முழக்கங்கள் (ரிலே) எழுந்தது, காஸாவின் இழந்த குழந்தைகளின் பலவீனமான அடையாளங்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் நினைவுகள்  மங்காமல் இருக்கச் செய்தது.

சிந்தா ரவி அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட 'தி நேம்ஸ் ஆஃப் காஸாவில்' என்ற இந்த நிகழ்ச்சியில், இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதர் அப்துல்லா அபு ஷாவேஷ், எழுத்தாளர் என்.எஸ். மாதவன், பாளையம் மஸ்ஜித் இமாம் வி.பி. சுஹைப் மௌலவி ஆகியோர் கலந்து கொண்டனர்.  பாலஸ்தீன டீப் டைவ் ஊடக தளத்தின் இயக்குனர் உமர் அஜீஸ் இந்த நிகழ்விற்கு வந்தவர்களில் ஒருவர். அறக்கட்டளைத் தலைவர் என்.எஸ். மாதவன் மற்றும் சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் ஆகியோரும் பங்கேற்றனர்.

கேரள மாநில குழந்தைகள் நல கவுன்சில் மனவீயம் வீதியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பல குழந்தைகள் மற்றும் பிற முக்கிய நபர்கள் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வாசித்தனர். சமூக, கலாச்சார ஆர்வலர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள் மற்றும் பலர் காஸாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீன குழந்தைகளின் பெயர்களை வாசிக்க ஒன்றுகூடினர். ஒவ்வொரு பங்கேற்பாளரும் பத்து குழந்தைகளின் பெயர்களை வாசிக்க  பொறுப்பை ஏற்றனர். மேலும், கலாச்சார வழித்தடத்தின் ஓரங்களில், இனப்படுகொலை பாதிக்கப்பட்டவர்களுக்கு காட்சி அஞ்சலி செலுத்தும் வகையில் தன்னார்வலர்கள் சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் அப்பட்டமான பதாகைகளை வரைந்தனர்.

மாநிலம் தழுவிய பிரச்சாரம் :

இந்த நிகழ்வு கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கிய மாநிலம் தழுவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதேபோன்ற அடையாள விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு கூட்டமும் கடந்த இரண்டு ஆண்டுகளில் காஸாவில் கொல்லப்பட்ட கிட்டத்தட்ட ஆயிரத்து 500 குழந்தைகளின் பெயர்களை வாசித்து முழங்கின. கேரளா முழுவதும் பயணித்த இந்த நிகழ்ச்சி காஸாவில் பாதிக்கப்பட்டவர்களின் 20 ஆயிரம் பெயர்களை எடுத்துக்காட்டியது.

பாலஸ்தீன் தூதர் உரை :

நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்தியாவிற்கான பாலஸ்தீன தூதர் அப்துல்லா எம். அபு ஷாவேஷ், உலகின் பெரும்பகுதி காஸாவின் துயரங்களை காணாமல் திரும்பிச் சென்றுவிட்டது என்ற நேரத்தில், கேரள மக்களின் அசைக்க முடியாத ஒற்றுமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.  "காஸாவின் குழந்தைகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் கொல்லப்பட்டனர். கட்டுப்பாடு இல்லாமல் மற்றும் வேண்டுமென்றே நோக்கத்துடன் செயல்பட்ட இஸ்ரேலிய கொலை இயந்திரத்தால் காஸா குழந்தைகள் கொல்லப்பட்டனர். இந்த குழந்தைகள் ஒரு குறுக்குவெட்டுக்கு பலியாகி இருக்கவில்லை. பல நாட்கள் பசி, பயம் மற்றும் இடப்பெயர்ச்சிக்குப் பிறகு அவர்கள் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டனர்" என்று பாலஸ்தீன தூதர் அப்துல்லா எம். அபு ஷாவேஷ் வேதனையுடன் கூறினார்.

மேலும், பல குழந்தைகள் இறந்த சூழ்நிலைகளை அவர் விரிவாக விவரித்தார். பட்டினி, நீரிழப்பு, குண்டுவெடிப்புகள், துப்பாக்கிச் சூடு, உறைபனி மற்றும் மருத்துவ முற்றுகைகளை எதிர்கொண்டு, சில குழந்தைகள் உயிரை விட மரணத்தை விரும்புவதாக அழுதனர் என்று  ஷாவேஷ் வேதனை தெரிவித்தார்.  காஸாவில் உள்ள தனது சொந்த குடும்பத்தைப் பற்றிப் பேசிய தூதர், தமது குடும்பங்கள் மழைநீரில் மூழ்கி தவிப்பதாகவும், குழந்தைகள் குளிரில் நடுங்குவதாகவும் கூறினார். இவர்கள் குண்டுவெடிப்பில் இருந்து தப்பிய குழந்தைகள், மற்றொரு வகையான துன்பத்தை மட்டுமே சந்தித்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒற்றுமை என்பது பாலஸ்தீனத்தின் எதிர்காலத்திற்கான உறுதியான ஆதரவாக மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றும் தூதர் வலியுறுத்தினார். பாலஸ்தீனத்தின் குழந்தைகள் மற்றும் மக்களுக்கு பச்சாதாபத்தை விட அதிகம் தேவை. அவர்களுக்கு உறுதியான திட்டங்கள் மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகள்  என்றும் பாலஸ்தீன தூதர் அப்துல்லா எம். அபு ஷாவேஷ் கூறினார்.

சிந்தா ரவி அறக்கட்டளையின் பணி :

சிந்தா ரவி அறக்கட்டளையின் நிறுவன அறங்காவலர் சஷி குமார் இறுதி பத்து பெயர்களைப் படித்ததுடன் நிகழ்ச்சி முடிந்தது. விழிப்புணர்வு யூத எதிர்ப்புக் கூட்டம் அல்ல என்பதை அவர் பார்வையாளர்களுக்கு நினைவூட்டினார். "உலகம் முழுவதும் நடைபெறும் போராட்டங்களில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக நிற்பவர்களில் பெரும்பாலோர் யூதர்கள்தான். இது சியோனிசத்திற்கும் அதன் கொடூரமான மற்றும் இரக்கமற்ற முகத்திற்கும் எதிரானது" என்று மூத்த பத்திரிகையாளர் வலியுறுத்தினார்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்