Friday, June 12, 2015

உலக அற்புதம்...!

தாஜ்மஹால்...!


உலக அதிசயங்களில் ஒன்று.

ஒவ்வொரு முறையும் அதை நேரில் பார்க்கும்போது நான் வியப்பு அடைவது உண்டு.

எந்த ஒரு வசதியும் இல்லாத அந்த காலத்தில் உலகமே வியக்கும் வகையில் வியப்பூட்டும் ஒரு அற்புதமான கட்டிடத்தை எழுப்பிய அந்த கட்டிடக்கலை நிபுணரின் திறமையை கண்டு ஆச்சரியம் அடைந்தது உண்டு.


டெல்லியில் வசித்தபோது பல முறை ஆக்ராவுக்கு பயணித்து தாஜ்மஹாலின் அழகை அற்புதத்தை அதிசயத்தை கண்டு அதில் மயங்கி போனதுண்டு.

நவீன கால கட்டிட கலைக்கு சவால் விடும் இந்த அற்புதமான கலை கட்டிடத்தை அனைவரும் அவசியம் காண வேண்டும் என்பது எமது வேண்டுகோள்.


உலகமே வியக்கும் தாஜ்மஹால் மற்றும் அதன் வளாகப் பகுதிகள் மத்திய மாநில அரசுகளால் சரியாக பராமரிக்கவில்லை என்பதுதான் வருத்தம் அளிக்கும் செய்தியாகும்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: