Thursday, June 4, 2015

குரு - சிஷ்யன்...!

குரு - சிஷ்யன்...!


மெஹபூப் பேகம்.

நண்பர் ரீகா நசீர் அகமத்தின் தாயார்.

கல்லூரி நாட்களில் நசீரின் வீட்டிற்கு செல்லும்போது அவரது தாயார் மெஹபூப் பேகம் என்னை மகிழ்ச்சியுன் வரவேற்று அன்பைப் பொழிந்து பாசத்தை வெளிப்படுத்தினார்.



அந்த அன்பையும் பாசத்தையும் வாழ்க்கையில் எப்படி மறக்க முடியும்.

மெஹபூப் பேகம் நல்ல கலகலப்பான பெண்மணி மட்டுமல்லாமல் சதுரங்கம் விளையாட்டில் கில்லாடியாக இருந்தார்.

ஓய்வு நேரங்களில் எனக்கு சதுரங்க விளையாட்டின் நுணுக்கங்களை சொல்லி தந்தார்.

அவர் கற்றுத் தந்த நுணுக்கங்களை பயன்படுத்தி வேலூர் யூத் ஃபோரம் என்ற இளைஞர் அமைப்பு நடத்திய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நான் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினேன்.



அந்த மகிழ்ச்சியில் குரு மெஹபூப் பேகத்துடன் சிஷ்யன் அடியேன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இவை.

மெஹபூப் பேகம் மறைந்தாலும் அவர் என் மீது காட்டிய அன்பான உபசரிப்புகள் கூறிய ஆலோசனைகள் அறிவுரைகள் என்னை விட்டு மறையவில்லை.

என்னுடைய வாழ்க்கையில் அவை எனக்கு பலன் அளித்து வருகின்றன.

என் இறுதி காலம் வரை அந்த அன்பான அன்னையை நான் மறக்க முடியாது.

மறக்கவும் கூடாது.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: