Thursday, June 18, 2015

எல்லோரும் கொண்டாடுவோம்...!

எல்லோரும் கொண்டாடுவோம்...!


இந்தியாவில் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கியது.

வழக்கமான உற்சாகத்துடன் இறையச்சத்துடன் நோன்பு வைக்கும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் எமது ரமலான் நல்வாழ்த்துகள்.

இந்த இனிய நேரத்தில் ஒரு மலரும் நினைவு.

இங்குள்ள புகைப்படத்தில் என்னுடன் இருப்பது மறைந்த என் நண்பர் சீதாராமன்.

ஒவ்வொரு ரமலானின்போது என்னுடைய வீட்டிற்கு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சி அடைந்த நல்ல பண்பாளர்.

இந்து பிராமணர் குடும்பத்தில் பிறந்தாலும் மத இன வேறுபாடுகளை தூக்கி எரிந்து மனிதநேயப் பண்புகளுடன் பழகிய மனிதர்.


பன்முகத் தன்மை கொண்ட அந்த நல்ல இதயத்துடன் பழகிய நாட்கள் என்றும் மறக்க முடியாது.

நண்பர் சீதாராமனை போன்று நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் நல்வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வதுடன் மகிழ்ச்சியுடன் ரமலானை கொண்டாடுவோம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: