Friday, June 26, 2015

புதுமலர் இயக்குநர்....!

இயக்குநர்....!


வேலூரில் புதுமலர் மாத இதழை நடத்தியபோது எடுத்தப்படம் இது.

மறைந்த நண்பர் சீதாராமனுடன் இணைந்து கையெழுத்து பிரதியாக புதுமலரை ஆரம்பித்தேன்.

பின்னர் புதுமலர் அச்சில் வந்து வழக்கம் போல பல சிரமங்கள் இன்னல்களை சந்தித்து வெற்றிகரமாக வலம் வந்தது.

எனினும் புதுமலரை தொடர்ந்து எங்களால் நடத்த முடியாமல் போனது வருத்தம்தான்.

அதேநேரத்தில் ஊடகத்துறையில் தற்போது ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட புதுமலர் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தது எனலாம்.

மேலும் சில தோல்விகள் பல வெற்றிகளுக்கு நிச்சயம் உதவும் என்ற பாடம் தத்துவம் ஆகியவை புதுமலர் நடத்தியதன் மூலம் எனக்கு கிடைத்தது எனலாம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: