Tuesday, June 2, 2015

சீதாராமன்....!

நியூ டெல்லி....! (2)


மறைந்த நண்பர் சீதாராமனின் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து டெல்லியில் எடுத்த புகைப்படம் இது.

இந்து பிராமணரான சீதாராமனுக்கும் எனக்கும் இடையே நல்ல ஆழ்ந்த நட்பு இருந்தது.

கல்லூரி நாட்களில் மலர்ந்த இந்த நட்பை சீர் குலைக்க சிலர் சதி செய்து தோல்வி அடைந்தனர்.

என்னுடைய சுக துக்கங்களில் சீதாராமன் பங்கெடுத்து ஆறுதல் சொன்னதை வாழ்க்கையில் மறக்க முடியாது.

அவரது தந்தை ராமன் ஐயரும் என் மீது நல்ல அன்பையும் பாசத்தையும் பொழிந்தார்.

இப்படி வளர்ந்த எங்கள் நட்பில் சீதாராமனின் திருமண வாழ்க்கைக்கு பிறகு விரிசல் ஏற்பட்டது.

பின்னர் இதய நோயால் பாதிக்கப்பட்ட சீதாராமன் டெல்லியிலேயே இளம் வயதில் காலமானது எனக்கு அதிர்ச்சியை அளித்தது.

எனினும் நண்பரின் நட்பு சார்ந்த நினைவுகள் என்னில் இன்னும் அசைப் போட்டுக் கொண்டே இருக்கின்றன.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: