Thursday, June 11, 2015

படிக்காதவன்...!

படிக்காதவன்...!


கல்வியில் அதிக ஆர்வமும் அக்கறையும் இல்லாத வழக்கமான முஸ்லிம் சமுதாயத்தில் எங்கள் குடும்பமும் விதிவிலக்காக இருக்கவில்லை.

கல்வியில் அக்கறை இல்லாத சாதாரண குடும்பத்தில் பிறந்த நான் எப்படியோ படித்து விட்டு முதுகலை பட்டம் பெற்றேன்.

எங்கள் குடும்பத்தில் நான்தான் முதல் பட்டதாரி.

இந்த சந்தோஷம் கவுரவம் எனக்கு கிடைக்க என் மூத்த சகோதர்கள் செய்த தியாகங்கள் ஏராளம்.

என் சகோதரர்களின் வேர்வை துளிகள் மூலம்தான் நான் உயர்கல்வி பெற முடிந்தது.

குடும்பத்தில் முதல் பட்டதாரியாக நான் மலர்ந்தது எனக்கு மகிழ்ச்சி அளித்ததோ இல்லையோ என் சகோதரர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


இதேபோல் என் தாய் என் மூத்த சகோதரி இளைய சகோதரி ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகள் என்னை பாராட்டி மகிழ்ந்தனர்.

என் கல்வி வளர்ச்சிக்கு அவர்களும் மறைமுகமாக செய்த உதவிகள் என்றும் மறக்க முடியாதவை.

பட்டம் பெற்ற மகிழ்ச்சியில் எடுத்த இந்த புகைப்படத்தை காணும் போது அந்த பின்னணியில் என் குடும்ப உறுப்பினர்கள் செய்த தியாகங்களை என்றும் நினைத்து நான் ஆனந்த கண்ணீரால் மகிழ்ச்சி அடைவது உண்டு.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: