Thursday, July 31, 2025

புனித ஹஜ் பயணம்: காலக்கெடு நீட்டிப்பு...!

 

2026ஆம் ஆண்டிற்கான புனித ஹஜ் பயணம்:

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை

காலக்கெடு நீட்டிப்பு

ஒன்றிய அரசு அறிவிப்பு

 

புதுடெல்லி, ஆக..01- 2026ஆம் ஆண்டிற்கான புனித ஹஜ் பயணம் செல்லும் இந்திய முஸ்லிம்கள் பயணிகள்  அனைவரும், தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டு இருப்பதாக   ஒன்றிய அரசின் சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டிற்கான புனித ஹஜ் கடமைக்காக மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதால், எந்தவித சிரமமும் இல்லாமலும், பாதிப்புகள் எதுவும் இல்லாமலும் ஹஜ் பயணத்தை ஹாஜி நல்ல முறையில் நிறைவேற்ற முடிந்தது. குறிப்பாக, சவுதி அரேபிய அரசின் ஹஜ் விவகாரங்கள் குழு மற்றும் இந்திய ஹஜ் கமிட்டி ஆகியவை இணைந்து சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்து இருந்ததை, ஹாஜிகள் வரவேற்று பாராட்டு தெரிவித்துள்ளனர்.

2026ஆம் ஆண்டிற்கான ஹஜ் பயணம் :

இந்நிலையில், அடுத்த ஆண்டு அதாவது 2026ஆம் ஆண்டிற்கான புனித ஹஜ் பயணம் தொடர்பான  பணிகளை ஒன்றிய அரசின் சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய ஹஜ் கமிட்டி, கடந்த ஜுலை மாதம் தொடங்கியது.   இதையடுத்து 2026ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் (யாத்தீகர்கள்) தங்களது விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆன்லைன் முகவரியில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அதாவது https://hajcommittee.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், "HAJ SUVIDHA" என்ற செல்பேசி செயலி மூலம் கூட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.  விண்ணப்பங்களை இந்த மாதம் ஜுலை 7ஆம் தேதி முதல், ஜுலை 31ஆம் தேதி இரவு 11.59 மணி வரை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

காலக்கெடு நீட்டிப்பு :

இந்நிலையில், 2026ஆம் ஆண்டிற்கான புனித ஹஜ் பயணம் செல்லும் இந்திய முஸ்லிம்கள் பயணிகள்  அனைவரும் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசின் சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சக துணைச் செயலாளர் விகாஸ் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள ஹஜ் கமிட்டிகள், ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய தகவல்கள் :

2026ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணம் செல்வதற்காக விண்ணப்பிக்கும் ஹஜ் பயணிகள் அனைவரும் இந்திய ஹஜ் கமிட்டி அறிவுறுத்தியுள்ள வழிக்காட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகள் அனைத்தையும் கவனமாக படித்து நினைவில் வைத்துக் கொண்டு விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். இந்திய அரசின் சார்பில் வினியோகம் செய்யப்படும் சர்வதே பாஸ்போர்ட் தற்போது வழக்கத்தில், அதாவது பயன்பாட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். பாஸ்போர்ட் 31 டிசம்பர் 2026 தேதிக்கு முன்பு வினியோகம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். அதேபோன்று, பாஸ்போர்ட் 31.12.2026 தேதி வரை செல்லுபடியாகும் வகையில் இருக்க வேண்டும்.

புனித ஹஜ் பயணத்திற்காக விண்ணப்பம் செய்யும் பயணிகள் முக்கியமான அம்சங்கள் இருந்தால் மட்டுமே, தங்களது விண்ணப்பங்களை ரத்து செய்ய வேண்டும். அதாவது இறப்பு அல்லது கடுமையான நோய் உள்ளிட்ட காரணங்கள் இருந்தால் மட்டுமே ரத்து செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்துவிட்டு, திடீரென விண்ணப்பத்தை ரத்து செய்தால், ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பிக்கும் பயணிக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். இது மிகப்பெரிய அபராதத் தொகையாக இருக்கும் என்பதால், விண்ணப்பம் செய்துவிட்டு எந்தவித காரணமும் இல்லாமல் விண்ணப்பத்தை திரும்ப பெறக் கூடாது. எனவே, புனித ஹஜ் பயணம் செய்ய விரும்பும் பயணிகள், மிகவும் கவனமாக இருந்து ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்..அப்துல் அஜீஸ்

ஹஜ் வயது வரம்பு....!

 2026ஆம் ஆண்டிற்கான புனித ஹஜ் பயணம்:

ஹஜ் பயணிகளுக்கு துணையாக செல்வர்களுக்கான வயது வரம்பு...!

இந்திய ஹஜ் கமிட்டி புதிய அறிவிப்பு....!!

புதுடெல்லி, ஜுலை.31- 2026ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுடன், உதவியாக செல்ல 60 முதல் 65 வயது உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என ஒன்றிய அரசின் சிறுபான்மையின அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. 

2026ஆம் ஆண்டிற்கான ஹஜ் பயணம் :

அடுத்த ஆண்டு அதாவது 2026ஆம் ஆண்டிற்கான புனித ஹஜ் பயணம் தொடர்பான  பணிகளை ஒன்றிய அரசின் சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய ஹஜ் கமிட்டி, தற்போது தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக இந்திய ஹஜ் கமிட்டியின் தலைமைச் செயல் அலுவலர் சி.ஷாநவாஸ் ஐ.ஏ.எஸ்.,ஏற்கனவே  வெளியிட்ட அறிக்கையில், 2026ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் (யாத்தீகர்கள்) தங்களது விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆன்லைன் முகவரியில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அதாவது https://hajcommittee.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், "HAJ SUVIDHA" என்ற செல்பேசி செயலி மூலம் கூட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.  விண்ணப்பங்களை இந்த மாதம் ஜுலை 7ஆம் தேதி முதல், ஜுலை 31ஆம் தேதி இரவு 11.59 மணி வரை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

வயது வரம்பு குறித்த அறிவிப்பு :

இந்நிலையில், ஒன்றிய அரசின் சிறுபான்மையின அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய ஹஜ் கமிட்டி, 2026ஆம் ஆண்டிற்கான ஹஜ் வழிகாட்டுதல்களின் விதிகளில் ஒரு பகுதியாக ஹஜ் பயணிகளுக்கு துணையாக செல்பவர்களுக்கான வயது வரம்பு தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய ஹஜ் கமிட்டியின் தலைமைச் செயல் அலுவலர் ஷாநவாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  60 முதல் 65 வயதான உதவியாளர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான யாத்ரீகர்களின் துணைவர்களுக்கான வயது வரம்பு தொடர்பான 2026 ஹஜ் வழிகாட்டுதல்களின் விதிகளில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, 60 முதல் 65 வயது வரையிலான துணைவர் (உதவியாளர்) அனுமதிக்கப்படுகிறார் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய துணைவர் அதாவது உதவியாளர் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட யாத்ரீகரின் கணவன் அல்லது மனைவி அல்லது உடன்பிறந்தவராக இருந்தால், அத்தகைய அனுமதி அரசு மருத்துவரின் மருத்துவ தகுதிச் சான்றிதழுக்கு உட்பட்டது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.  

மற்ற அனைத்துக் குழு உறுப்பினர்களும் 18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும், இந்த வயது வரம்பு ஹஜ் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முதல் தேதியான 2025 ஜுலை 7ஆம் தேதியை, அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும் என்றும் இந்திய ஹஜ் கமிட்டியின் தலைமைச் செயல் அலுவலர் ஷாநவாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார். 

இதேபோன்று, ஒன்றிய அரசின் சிறுபான்மையின அமைச்சகத்தின் துணைச் செயலாளர் விகாஸ் மோகன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், 2026ஆம் ஆண்டு ஹஜ் திட்டத்தின் கீழ், ஆந்திர மாநில விஜயவாடாவில் இருந்து ஹஜ் விமானங்கள் புறப்பட்டு செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

உரை....!

 Operation Sindhur Discussion  in Rajya Sabha.

IUML Member Adv. Harris Peeran Speech.



Press Meet.

 ⦁ The main issue that India is facing today is that the Modi government has destroyed our economic policy, defense policy, and foreign policy. They are running this country into the ground. 

⦁ Everybody knows that the Indian economy is a dead economy. I am glad that President Trump has stated a fact.Dead economy'

 LoP RahulGandhi



Wednesday, July 30, 2025

உரை....!

 Operation Sindhur Discussion - Rajya Sabha.

Congress M.P., Renuka Chowudhury speech.



Speech....!

 Operation Sindhur Debate - Lok Sabha.

IUML Leader E.T.Mohammed Basheer Speech.



Tuesday, July 29, 2025

கேள்வி....!

 கேள்வியோ....கேள்வி....!

 CEASEFIRE  30 Times.

We shall not tolerate such nonsense.

Congress President M.Kharege Press Meet.



உரை....!

 Former Union Home Minister Shri PChidambaram IN's full speech in Rajya Sabha on the Pahalgam terror attack.



Speech....!

 Congress President Shri kharge speaks on Operation Sindoor in Rajya Sabha.



உரை....!

 

LoP Shri RahulGandhi's full speech in Lok Sabha on the Pahalgam terror attack.



Speech...!

 Congress M.P., Smt.Priyanka Gandhi ji speaks on Operation Sindoor in Lok Sabha.



Speech....!

 Congress M.P. from Kerala Mr.Shafi Parambi speech in Lok Sabha...!

"This wasn't just a terror attack on individuals; it was an assault on the very soul of our nation, an attempt to fracture our unity and sow the seeds of division.

LoP Rahul Gandhi ji gave the first statement, emphasising that the whole country is united against terrorism, and we offered unconditional support to the Modi government. Our president, Kharge ji, also mentioned that this isn't the time for partisan politics but for a collective resolve to ensure justice. 

Our resolution stated that Pakistan must be taught a lesson and the perpetrators must face consequences. We attended the all-party meeting, but the Prime Minister didn't attend."

 Listen to shafi_parambil_  ji on how the Modi govt. and the Congress party responded to the Pahalgam terror attack.



Monday, July 28, 2025

பாலஸ்தீனத்தில் நீதிக்கான தீர்வு....!

 "பாலஸ்தீனத்தில் நீதிக்கான ஒரே பாதை இரு நாடுகள் தீர்வு தான்"

-  எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் -

இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்சினை கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரும் நிலையில், காசாவில் ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கு இடையேயும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சண்டை நீடித்து வருகிறது. இந்த சண்டையில் காசாவை இஸ்ரேல் ராணுவம் முற்றிலும் அழித்துவிட்டாலும், ஈமானில் உறுதியுடன் இருக்கும் காசா மக்கள், தங்கள் சொந்த பூமியை விட்டு எங்கும் செல்ல முடியாது என்ற நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்து வருகிறார்கள். மடிந்தாலும், சொந்த பூமியில் இறப்பதையே, தாங்கள் விரும்புவதாக அவர்கள் மன உறுதியுடன் தெரிவித்து வருகிறார்கள். 

அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன், காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து அட்டூழியங்கள் அரங்கேற்றி வருகிறது. அதன், அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து, மிகப்பெரிய அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கின்றன. காசாவில் உணவுக்காக ஏங்கி தவிக்கும் மக்களை, குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் ஆகியோரை, இஸ்ரேல் ராணுவம் மனிதநேயம் இல்லாமல் தொடர்ந்து கொன்று குவித்து வருகிறது. இதனை கண்டிக்காமல், முஸ்லிம் நாடுகள் உட்பட உலகின் பல நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றன. இதனால் காசாவில் மக்கள் கொல்லப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. காசாவிற்கு உணவுப் பொருட்களை அனுப்ப இஸ்ரேல் ராணுவம் மறுக்கிறது. இதனால், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிப் பொருட்கள் கிடைக்காமல், பசியாலும், பட்டினியாலும், காசாவில் மக்கள் மடிந்துகொண்டு இருக்கிறார்கள். காசா மக்கள் உணவு, தண்ணீர் ஆகியவற்றிற்காக அலையும் காணொளிகளை காணும்போது, உள்ளத்தில் ரணம் ஏற்படுகிறது. கண்களில் இரத்த கண்ணீர் வெளியாகிறது. கொடூர இதயம் கொண்ட  மனிதர்கள் கூட, காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் கொடூரங்களை கண்டு, கண்ணீர் விட்டு அழுகிறார்கள். வேதனையால் துடிக்கிறார்கள்.

பிரான்ஸ் அதிபரின் திடீர் அறிவிப்பு :

காசாவில் நிலைமை எல்லையை தாண்டி சென்றுக் கொண்டிருக்கும் நிலையிலும், காசாவில் பட்டினியால் வாடும் மக்கள் மீது உலகளாவிய கோபம் அதிகரித்து வரும் நிலையிலும், பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீனகரிப்பதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கடந்த ஜுலை மாதத்தின் கடைசி வாரத்தில் 24.07.2025) அறிவித்தார்.  செப்டம்பரில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையில் இந்த முடிவை முறைப்படுத்த இருப்பதாக  மக்ரோன் கூறியுள்ளார். மேலும், காசாவில் போர் நின்று பொதுமக்கள் காப்பாற்றப்பபட வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தை அங்கீகரித்த மிகப்பெரிய மேற்கத்திய சக்தியாக பிரான்ஸ் இப்போது உள்ளது. மேலும், இந்த நடவடிக்கை மற்ற நாடுகளும் இதைச் செய்ய வழி வகுக்கும். ஐரோப்பாவில் ஒரு டஜனுக்கும் அதிகமான நாடுகள் உட்பட 140 க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கின்றன.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஒரு சுதந்திர அரசை பாலஸ்தீனியர்கள் நாடுகின்றனர். கிழக்கு ஜெருசலேம் மற்றும் காசாவையும் இணைத்து, 1967 மத்திய கிழக்குப் போரில் இஸ்ரேல் ஆக்கிரமித்த பிரதேசங்களையும் இணைக்கின்றனர். . இந்த முடிவை பாலஸ்தீன அதிகாரசபை வரவேற்றுள்ளது. இந்த நிலைப்பாடு சர்வதேச சட்டத்திற்கான பிரான்சின் அர்ப்பணிப்பையும், பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கான அதன் ஆதரவையும் பிரதிபலிக்கிறது என்றும் பாலஸ்தீன அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. 

இதேபோன்று, பிரெஞ்சு அதிபர்  இம்மானுவேல் மக்ரோனின் அறிவிப்பை சவுதி அரேபியா வரவேற்றுள்ளது. இந்த நடவடிக்கையை பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான சர்வதேச ஆதரவை வலுப்படுத்தும் ஒரு வரலாற்று முடிவு என்றும் சவுதி அரேபியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.  கிழக்கு ஜெருசலேமை அதன் தலைநகராகக் கொண்டு, 1967 எல்லைகளில் ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசை நிறுவுவது குறித்த உலகளாவிய ஒருமித்த கருத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாக பிரான்சின் நிலைப்பாட்டை சவுதி வெளியுறவு அமைச்சகம் பாராட்டியது. பாலஸ்தீன பிரச்சினைக்கு ஒரு நியாயமான மற்றும் நீடித்த தீர்வைக் கோரும் சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுடன் இந்த நடவடிக்கை ஒத்துப்போகிறது என்றும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. மேலும், பாலஸ்தீன அரசை இன்னும் அங்கீகரிக்காத நாடுகளுக்கான தனது நீண்டகால அழைப்பை சவுதி அரேபியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.  சர்வதேச சமூகம் அமைதியை முன்னேற்றுவதற்கும் பாலஸ்தீன மக்களின் நியாயமான உரிமைகளை ஆதரிப்பதற்கும் தீவிரமான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்துகிறது.

இதேபோன்று, இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு இரு நாடுகள் தீர்வுக்கு கனடாவும் பிரேசிலும் ஆதரவு தெரிவித்துள்ளன. பாலஸ்தீன நாடு என்ற அந்தஸ்தை ஆதரிப்பதில் பிரேசில் மிகவும் தீவிரமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பிரேசில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக முறையாக அங்கீகரித்துள்ளது. அத்துடன், காசா முற்றுகை மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து குரல் கொடுத்து வருகிறது. பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ள கனடா, இஸ்ரேலிய அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. 

இருபத்தெட்டு நாடுகளின் இரு முகங்கள் :

இதுஒருபுறம் இருக்க, இஸ்ரேல் பாலஸ்தீனியர்களைக் கொல்வது வேகமாகவும் மெதுவாகவும் தொடர்கிறது. வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பட்டினி மூலம் இந்த படுகொலைகள் நடந்துகொண்டு இருக்கின்றன. இஸ்ரேலின் இந்த கொடூரச் செயல்களை பல நாடுகள் கண்டிக்கின்றன. ஆனால் அதனுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்கின்றன. காசா போரை நிறுத்தக் கோரும் அறிக்கையில் இருபத்தெட்டு நாடுகள் கையெழுத்திட்டன. ஆனால் இஸ்ரேல் உடனான  இருதரப்பு வர்த்தகத்தை நிறுத்த நடவடிக்கையை அந்த நாடுகள் எடுக்கவில்லை. 28 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் காசா மீதான இஸ்ரேலின் போரை நிறுத்தக் கோரும் அறிக்கையில் கையெழுத்திட்டுள்ள நிலையில்,  ஐக்கிய நாடுகள் சபையும் பிற குழுக்களும் வரவிருக்கும் பஞ்சம் குறித்து எச்சரித்த பல மாதங்களுக்குப் பிறகு இந்த நாடுகள் வார்த்தைகளைப் பரப்புவதால், மற்ற முனைகளில் சிறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகளில் சில பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன. இருப்பினும், பல நாடுகள் இஸ்ரேலுடனான வர்த்தகத்தில் தொடர்ந்து பயனடைகின்றன. காசா மீதான இனப்படுகொலை போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலை நெருக்கடிக்குள் தள்ளக்கூடிய தடைகளை விதிக்கவில்லை என்றும் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சர்வதேச  விமர்சகர்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தப் போர் காசாவில் குறைந்தது 60 ஆயிரம் பேரைக் கொன்றது. அத்துடன் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 447  பேரைக் காயப்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் இத்தகைய இராணுவ நடவடிக்கையைக் கண்டிக்கும் அதேவேளையில், அதனால் லாபம் ஈட்டும் நாடுகள் கபட நாடகம் ஆடி வருகின்றன.

நீதிக்கான ஒரே பாதை : 

இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், பாலஸ்தீன-இஸ்ரேல் நெருக்கடிக்கு இரு நாடுகள் தீர்வு என்பது "நீதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கான ஒரே பாதை" என்று அமெரிக்காவிற்கான சவுதி தூதர்  இளவரசி ரீமா பின்ட் பந்தர் கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இந்த மோதல் குறித்து ஐ.நா.வில் நடைபெற்ற மாநாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவிற்கான சவுதி தூதர் இளவரசி ரீமா பின்ட் பந்தர், “காசாவில் உள்ள துன்பங்கள், மேற்குக் கரையில் உள்ள விரக்தி மற்றும் இஸ்ரேலில் உள்ள பாதுகாப்பின்மை ஆகியவை ஒரு புதிய யதார்த்தத்தைக் கோருகின்றன. நீடித்த அமைதிக்கான ஒரே சாத்தியமான பாதையாக இரு நாடுகள் தீர்வை சவுதி அரேபியா நீண்ட காலமாக ஆதரித்து வருகிறது. இது வெறும் இராஜதந்திர நிலைப்பாடு அல்ல. இது நீதி மற்றும் பகிரப்பட்ட எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தார்மீக, மூலோபாய மற்றும் நடைமுறைத் தேவையாகும்” என்று  குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இரு அரசு தீர்வு அவசியம். ஏனெனில் அது மோதலின் மூல காரணங்களை நிவர்த்தி செய்கிறது. பாலஸ்தீனிய சுயநிர்ணய மறுப்பு மற்றும் இரு தரப்பிலும் தீவிரவாதத்தைத் தூண்டும் பாதுகாப்பின்மையாகும். சவுதி அரேபியா பல தசாப்தங்களாக அரபு அமைதி முயற்சி என்று அழைக்கப்படும் ஒரு அமைதியான தீர்மானத்தை ஆதரித்து வருகிறது. இது பிராந்தியத்தில் அமைதி பாலஸ்தீனியர்களுக்கான நீதியிலிருந்து பிரிக்க முடியாதது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு திறவுகோல் :

இதேபோன்று, இஸ்ரேல்-பாலஸ்தீன நெருக்கடிக்கு இரு நாடுகள் தீர்வை செயல்படுத்துவது "பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு திறவுகோல்" என்று சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் தெரிவித்துள்ளார். பிராந்திய அமைதி பாலஸ்தீன மக்களின் சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாப்பதில் தொடங்க வேண்டும் என்றும் இளவரசர் பைசல் வலியுறுத்தியுள்ளார்.  மேலும், பாலஸ்தீன அரசு உருவாக்கப்படுவதற்கு முன்பு இஸ்ரேலுடன் எந்த உறவும் நிறுவப்படாது என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். 

பாலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண்பது மற்றும் இரு-நாடு தீர்வை செயல்படுத்துவது குறித்த உயர்மட்ட சர்வதேச மாநாடு கடந்த ஜுலை 28ஆம் தேதி ஐ.நா.வில் நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு பேசிய  சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான், இரு-நாடு தீர்வு பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு திறவுகோல் என்று சவுதி அரேபியாநம்புகிறது என்று கூறினார். நியூயார்க் மாநாடு இரு நாடுகள் தீர்வை செயல்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல் என்றும் ஃபர்ஹான் குறிப்பிட்டார்.

பாலஸ்தீன மக்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாப்பதில் இருந்து பிராந்தியத்தில் அமைதி தொடங்க வேண்டும் என்று இளவரசர் பைசல் மீண்டும் வலியுறுத்தினார். செப்டம்பரில் பாலஸ்தீனத்தை முறையாக அங்கீகரிக்கும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் நோக்கத்தை அவர் வரவேற்கிறார். "பிராந்தியத்தின் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை அடைவது பாலஸ்தீன மக்களுக்கு நீதி வழங்குவதிலும், அவர்களின் நியாயமான உரிமைகளைப் பெற உதவுவதிலும் தொடங்குகிறது. அவற்றில் முதன்மையானது ஜூன் 4, 1967 எல்லைகளில் கிழக்கு ஜெருசலேமை அதன் தலைநகராகக் கொண்டு பாலஸ்தீன் மக்கள் அவர்களின் சுதந்திர அரசை நிறுவுதல்" என்று அவர் தெரிவித்தார். 

காசாவில் மனிதாபிமான பேரழிவை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச சமூகத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார். மேலும், சவுதி அரேபியாவும் பிரான்சும் உலக வங்கியிலிருந்து பாலஸ்தீனத்திற்கு 300 மில்லியன் டாலர்களை மாற்றுவதற்கு உதவியதை உறுதிப்படுத்தினார். பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்காக சவுதி அரேபியா, பல நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக இளவரசர் பைசல் கூறினார். மேலும், அத்தகைய அங்கீகாரத்தை இஸ்ரேலிய வீட்டோவுடன் இணைக்கும் யோசனையை அவர் நிராகரித்தார். மேலும் ஒரு பாலஸ்தீன நாடு உருவாக்கப்படுவதற்கு முன்பு இஸ்ரேலுடன் எந்த உறவும் ஏற்படுத்தப்படாது என்பதை உறுதிப்படுத்தினார். பாலஸ்தீன அதிகாரசபையின் சீர்திருத்த முயற்சிகளுக்கு அமைச்சர் ஆதரவு தெரிவித்தார். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிராந்திய மோதல் தீர்வுக்கு முக்கிய பங்கு வகிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். ஒரு சாத்தியமான, அமைதியான இரு நாடுகள் தீர்வை அடைவதற்கு இராஜதந்திர உந்துதலையும் சர்வதேச ஒருங்கிணைப்பையும் நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.

பல நாடுகள் இணையும் :

மாநாட்டின் இணைத் தலைவரான பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட், சவுதி அரேபிய அரசின் அதே உணர்வுகளை தமது பேச்சியில் எதிரொலித்தார். வரும் மாதங்களில் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதில் மேலும் பல நாடுகள் இதைப் பின்பற்றலாம் என்றும் இணையலாம் என்றும் அவர் கூறினார்.   "பாலஸ்தீன மக்கள் தங்கள் நிலங்கள் மீதான இறையாண்மைக்கான உரிமையை பிரான்ஸ் உறுதிப்படுத்துகிறது" என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.  மேலும், “செப்டம்பரில் பாலஸ்தீன அரசை மற்ற நாடுகள் அங்கீகரிக்கலாம். இரு நாடுகள் தீர்வு மாநாடு தீர்வை செயல்படுத்துவதில் ஒரு தீர்க்கமான படியாகும். வரலாற்று உறுதிப்பாடுகள் செய்யப்படும். காசாவில் பொதுமக்களை குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. பகுதியில் போர் மிக நீண்ட காலமாக நீடித்து வருகிறது. அது நிறுத்தப்பட வேண்டும். இரு நாடுகள் கட்டமைப்பை செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதில் சர்வதேச சமூகத்தின் பங்கு அவசியம். இரு நாடுகள் தீர்வை ஒரு உறுதியான யதார்த்தமாக்க நாம் பாடுபட வேண்டும். இது பாலஸ்தீனியர்களின் நியாயமான அபிலாஷைகளை பூர்த்தி செய்கிறது. மத்திய கிழக்கில் ஒரு அரசியல் தீர்வை நோக்கி நாம் ஒரு தடுக்க முடியாத உந்துதலைத் தொடங்கியுள்ளோம்” என்றும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட் குறிப்பிட்டார். 

மாநாட்டில் பங்கேற்று பேசிய பாலஸ்தீன பிரதமர் முகமது முஸ்தபா, மாநாட்டை வரவேற்று, இது அமைதிக்கான ஒரு முக்கியமான வாய்ப்பு என்று கூறினார். “இரு நாடுகள் தீர்வு அனைவருக்கும் ஒரு வரலாற்று வாய்ப்பு. இந்த வரலாற்று மாநாட்டை வழிநடத்தியதற்காக சவுதி அரேபியா மற்றும் பிரான்சுக்கு தாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பாலஸ்தீன மக்களுக்கு சர்வதேச ஆதரவின் தெளிவான செய்தியை மாநாடு அனுப்பியுள்ளது. இரு நாடுகள் தீர்வு மாநாடு பாலஸ்தீன மக்களுக்கு உலகம் அவர்களுடன் நிற்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது" என்று அவர் தெரிவித்தார். மேலும், மேற்குக் கரைக்கும் காசாவிற்கும் இடையில் அரசியல் ஒற்றுமைக்கு முஸ்தபா அழைப்பு விடுத்தார். பாலஸ்தீன அதிகாரசபை கட்டுப்பாட்டிற்கு ஆதரவாக ஹமாஸ் ஆயுதங்களை களைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். "மேற்குக் கரையையும் காசா பகுதியையும் ஒன்றிணைக்க நாம் பாடுபட வேண்டும். ஹமாஸ் அதன் ஆயுதங்களை பாலஸ்தீன அதிகாரசபையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் அழைக்கிறோம்" என்று அவர் கூறினார்.

ஆவணம் வினியாகம் :

இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான மோதலுக்கான இரு நாடுகள் தீர்வு குறித்த  ஆவணத்தின் பிரத்யேக நகல், நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் வினியோகம் செய்யப்பட்டது. பிரான்சால் ஐ.நா. உறுப்பு நாடுகளிடையே விநியோகிக்கப்பட்டது. இந்த ஆவணம், சமீபத்திய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்ட வன்முறை மற்றும் இராஜதந்திர முட்டுக்கட்டையின் பின்னணியில், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலைத் தீர்ப்பதற்கான நீண்டகாலமாக முடங்கிப்போன முயற்சிகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சிகளில் ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது.  நெருக்கடியில் சிக்கியுள்ள பொதுமக்களின் துன்பத்தைத் தணிக்க, காசாவிற்கு தடையின்றி மனிதாபிமான அணுகல் அவசரத் தேவையையும் இது வலியுறுத்துகிறது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரண்டு ஜனநாயக நாடுகள் பாதுகாப்பான மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் அமைதியாக வாழ்வதற்கான தொலைநோக்குப் பார்வைக்கு சர்வதேச சமூகத்தின் அசையாத அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதே வரைவு ஆவணத்தின் மையமாகும். பாலஸ்தீன அரசியல் ஒற்றுமைக்கான அவசியத்தை வலியுறுத்தி, பாலஸ்தீன அதிகாரசபையின் நிர்வாகத்தின் கீழ் காசா பகுதி மற்றும் மேற்குக் கரையை ஒன்றிணைப்பதன் முக்கியத்துவத்தை இந்த ஆவணம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, இது சட்டபூர்வமான மற்றும் இராணுவமயமாக்கப்படாத எதிர்கால பாலஸ்தீன அரசுக்கு மூலக்கல்லாக முன்வைக்கிறது.

இந்த ஆவணம், இந்த ஆண்டு ஜூன் மாதம் பாலஸ்தீன அதிகாரசபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் அளித்த உறுதிமொழிகளை வரவேற்கிறது. மேலும் அக்டோபர் 7 தாக்குதல்களுக்கு அவர் அளித்த கண்டனத்தையும், பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான அவரது அழைப்பையும், ஹமாஸை நிராயுதபாணியாக்குவதற்கான அவரது உறுதிமொழியையும் ஒப்புக்கொள்கிறது.  செப்டம்பரில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையின் 80வது கூட்டத்தொடரை எதிர்பார்த்து, கையொப்பமிட்ட நாடுகள் பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்திருக்கும் அல்லது அவ்வாறு செய்ய விருப்பம் தெரிவித்திருக்கும் என்று ஆவணம் கருதுகிறது. இஸ்ரேலுடன் இன்னும் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தாத நாடுகள் உறவுகளை இயல்பாக்கத் தொடங்கவும், இஸ்ரேலின் பிராந்திய ஒருங்கிணைப்பு தொடர்பாக உரையாடலில் ஈடுபடவும் இது மேலும் ஊக்குவிக்கிறது. இது மத்திய கிழக்கு ஒத்துழைப்புக்கான பரந்த பார்வையை குறிக்கிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில், 193 ஐ.நா. உறுப்பு நாடுகளில் சுமார் 147 நாடுகள் பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தன. இது சர்வதேச சமூகத்தில் சுமார் 75 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஆப்பிரிக்க, ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பெரும்பகுதி அவற்றில் அடங்கும். நார்வே, அயர்லாந்து, ஸ்பெயின், ஸ்லோவேனியா மற்றும் ஆர்மீனியா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் சமீபத்தில் பட்டியலில் இணைந்தன. அதே போல் பஹாமாஸ், டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஜமைக்கா மற்றும் பார்படோஸ் ஆகியவையும் இதில் அடங்கும்.

ஆனால் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட முக்கிய மேற்கத்திய சக்திகள் இன்னும் பாலஸ்தீனத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. அதேபோல் ஜப்பானும் அங்கீகரிக்கவில்லை.  இருப்பினும், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், தனது நாடு பாலஸ்தீனத்தை முறையாக அங்கீகரிப்பதற்கான திட்டங்களை அறிவித்துள்ளார். செப்டம்பர் மாதம் ஐ.நா. பொதுச் சபையின் போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு செய்யும் முதல் G7 நாடாக பிரான்ஸ் இருக்கும். 

=============================

மக்களவையில் அதிரடி...!

 In Lok Sabha Congress M.P. Shri Deepender S speaks on Operation Sindoor | Lok Sabha.



மக்களவையில்....!

  Deputy Leader in Lok Sabha Shri GauravGogoi Asm speaks on Operation Sindoor | Lok Sabha.


நேரில் ஆய்வு....!

 டெல்லி வேதனை....!

கற்பனை செய்து பாருங்கள், உங்கள் பெற்றோர், குழந்தைகள் அல்லது உடன்பிறந்தவர்களின் தலைக்கு மேல் கூரை திடீரென அகற்றப்பட்டால், உங்கள் முழு குடும்பமும் ஒரு நொடியில் வீடற்றதாகிவிட்டால், நீங்கள் எப்படி உணருவீர்கள்?

டெல்லியின் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் இன்று இந்த வேதனையைச் சந்தித்து வருகின்றன. அவர்கள் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த சிறிய வீடுகள் பாஜக அரசாங்கத்தால் இரக்கமின்றி அழிக்கப்பட்டன.

இவை வெறும் வீடுகள் மட்டுமல்ல - இவை அவர்களின் கனவுகள், அவர்களின் கண்ணியம்.

நிர்வாகம் என்ற போர்வையில் செய்யப்படும் இந்தக் கொடுமை, ஏழைகள் மீதான பாஜகவின் உணர்வின்மையையும், அதன் அதிகார ஆணவத்தையும் அம்பலப்படுத்துகிறது.

இடம்பெயர்ந்த இந்த குடும்பங்களுடன் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். இந்தப் போராட்டம் இனி வீடுகளுக்காக மட்டுமல்ல, நீதி மற்றும் மனிதநேயத்திற்காகவும் - மேலும் நாங்கள் அனைத்து முனைகளிலும் போராடுவோம்.

- ராகுல் காந்தி.



Protest....!

 SIR Attack on Democracy...!



Sunday, July 27, 2025

Interview.....!

 Nazi BJP targeting Bengalis. We will not tolerate these brazen attacks on our linguistic & ethnic identity. Mahua Moitra interview on timesofindia



தகவல்....!

 விருப்பம் உள்ள இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.



திமுக மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் சல்மா சிறப்பு நேர்காணல்....!

 *இஸ்லாமிய மார்க்கத்தில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது

*சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டுவதே பாஜகவின் முக்கிய கொள்கை

*சி.ஏ.ஏ., முத்தலாக் உள்ளிட்ட விவகாரங்களில் அமைதியாக இருந்த நடிகர் விஜயை சிறுபான்மையின மக்கள் நம்ப மாட்டார்கள்

*முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வை, முற்போக்கான சிந்தனை தமிழகத்தில் சிறந்த திராவிட மாடல் ஆட்சிக்கு வழிவகுத்தது

*திமுகவின் சமூக நீதி கொள்கை காரணமாக நாடு முழுவதும் முஸ்லிம் சமூகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்ற ஒரே பெண் நான்தான்

"திமுக மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் சல்மா தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல்"

திமுக மாநிலங்களவை உறுப்பினராக அண்மையில் பொறுப்பு ஏற்றுக் கொண்ட கவிஞர் சல்மா, தன்னளவில், அமைதியாக இருக்க மறுக்கும் ஒரு பெண். துவரங்குறிச்சியில் உள்ள ஒரு தமிழ் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவர், கவிதையில் ஆர்வம் கொண்டு, தனது ஆழ்ந்த விரக்திகளையும் ஆசைகளையும் கவிதை பக்கத்தில் கொட்டினார். அவரது எழுத்து, பாரம்பரியத்தால் கட்டுப்படுத்தப்பட்ட ஆனால் சுதந்திரத்திற்காக ஏங்கிய தன்னைப் போன்ற பெண்களின் போராட்டங்களுக்கு குரல் கொடுத்தது.

2001 ஆம் ஆண்டு பொன்னம்பட்டி பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர், தம்மை அரசியலில் தன்னைக் கண்டுபிடித்து ஈடுபடுத்திக் கொண்டார். இது பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பதவி. இந்த நேரத்தில் பெண்களுக்கான கல்வியை மேம்படுத்த அவர் போராடிய அதேநேரத்தில், உள்ளூர் அரசியலில் ஆழமாக வேரூன்றி இருந்த ஆண், பெண் பாகுபாட்டினை எதிர்கொண்டார். 2004 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த அவர், 2006 ஆம் ஆண்டு மருங்காபுரி தொகுதியில் போட்டியிட்டு மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2006–11 வரை, மாநில சமூக நல வாரியத்தின் தலைவராக இருந்தார். இந்த ஆண்டு, திமுக அவரை மாநிலங்களவைக்கு பரிந்துரைத்தது. இதையடுத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், கடந்த வெள்ளிக்கிழமை (25.07.2025) அன்று பதவியேற்றார்.

அவரது எழுத்துப் படைப்புகளில், "சாபம்" (சிறுகதைகளின் தொகுப்பு - தி கர்ஸ்"), "இரண்டாம் ஜாமங்கலின் கதை" (2004 இல் லட்சுமி ஹோல்ம்ஸ்ட்ரோம் எழுதிய "தி ஹவர்ஸ் பாஸ்ட் மிட்நைட்" என்று மொழிபெயர்க்கப்பட்டது) மற்றும் "மானாமியங்கள்" (2020 இல் மீனா கந்தசாமி எழுதிய "வுமன், ட்ரீமிங்" என்று மொழிபெயர்க்கப்பட்டது) ஆகியவை அடங்கும். புதிதாகப் பதவியேற்ற கவிஞர் சல்மாவிடம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் குழுவினர் "தமிழ்நாடு உரையாடல்" என்ற நிகழ்ச்சி மூலம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் 27.07.2025 அன்று வெளியான அந்த  நேர்காணலை  மணிச்சுடர் நாளிதழ்  வாசகர்களுக்காக  சிறப்புச் செய்தியாளர் எஸ்.ஏ.அப்துல் அஜீஸ், அழகிய தமிழில் மொழிபெயர்த்து தருவதில் மகிழ்ச்சி அடைகிறார். 

அரசியல் வாழ்க்கை பயணம் :

கேள்வி : பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் நீங்கள் அரசியல் வாழ்க்கையில் தொடங்கினீர்கள். அந்த வாய்ப்பை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டீர்கள்?

பதில் : எனது குடும்பத்தில் எழுத்து ஊக்குவிக்கப்படாததால் நான் 'சல்மா' என்ற புனைப்பெயரை வைத்திருந்தேன். அதற்கு முன்பு பல ஆண்டுகளாக நான் எழுதி வந்திருந்தாலும், எனது முதல் கவிதைத் தொகுப்பு 2000 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அதற்கு பல நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றேன். சரியாகச் சொன்னால் 38 என நினைக்கிறேன். எல்லோரும் சல்மாவைத் தேடிக்கொண்டிருந்தனர். 2001 செப்டம்பர் அல்லது அக்டோபரில், பஞ்சாயத்துத் தேர்தல்கள் வரவிருந்தன. அந்த இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. முதலில், என்  கணவர் எனக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பவில்லை. அவர் தனது தாயாரிடமும் பின்னர் அவரது சகோதரியிடமும் சென்றார்.  இருவரும் மறுத்துவிட்டனர். ஏனெனில் அந்த நேரத்தில் முஸ்லிம் பெண்கள் அரசியலில் நுழைய விரும்பவில்லை. ஆர்வம் செலுத்தவில்லை.  இறுதியாக அவர் என்னிடம் வந்தபோது, நான் பயந்தேன். எனக்கு அரசியல் தெரியாது. மேலும் எனக்கு ஆர்வமும் இல்லை. அத்துடன் அரசியல் பற்றி எனக்கு நல்ல கருத்து இல்லை.

வேட்புமனு தாக்கல் செய்ய 15 நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது, நான் தமிழ் நாவலாசிரியர், கவிஞர் மற்றும் விமர்சகர் சுந்தர ராமசாமியை அழைத்து அவரது கருத்தைக் கேட்டேன். குடும்பத்தினரின் அங்கீகாரமோ ஆதரவுமோ இல்லாமல் இவ்வளவு காலமாக எழுதி வந்த எனக்கு, என்னைப் பற்றியும் என் பணியைப் பற்றியும் மக்கள் அறிந்துகொள்ள, இதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார். நான் தொடர்ந்து செயல்பட்டேன். பஞ்சாயத்து தேர்தல்களில், ஆண்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் இடங்களை ஆக்கிரமிப்பார்கள். அவர்களே முடிவுகளை எடுப்பார்கள். என் கணவர் தவறு செய்தால், ஒரு எழுத்தாளர் என்ற எனது பிம்பம் கறைபடும் என்று நான் பயந்தேன்.

இந்த நேரத்தில், ஒரு காலத்தில் எனது புகைப்படங்கள் அல்லது படைப்புகள் வெளியிடப்படுவதை எதிர்த்த குடும்பத்தினர், இப்போது கிராமம் முழுவதும் எனது முகத்துடன் கூடிய சுவரொட்டிகளை ஒட்டினர். பிரச்சாரங்களுக்காக அவர்கள் என்னை ஜீப்புகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள்.  எனக்கு ஒரு மைக் கூட வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் அவர்களுக்கு தேவைப்பட்டால், அவர்கள் என்னை ஒரு கருவியாகப் பயன்படுத்துவார்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன். எனவே நான் வெற்றி பெற்றால், இதைத் திருப்பி கட்டுப்பாட்டை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

நான் வெற்றி பெற்றேன். ஆனந்த விகடனில் எனது ஒரு நேர்காணல் வெளியிடப்பட்டது, அதில் நான் எழுத்தாளர் சல்மா என்று அனைவருக்கும் சொல்ல முடிவு செய்தேன். எனது புகைப்படத்துடன் கட்டுரை வெளிவந்த பிறகு, வீட்டில் எந்த எதிர்வினையும் இல்லை. முன்பு அவர்கள் என்னுடன் சண்டையிட்டிருப்பார்கள். இப்போது அவர்கள் என் புகைப்படங்களை பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியதால், நான் அவர்களின் முதுகுக்குப் பின்னால் எழுதினேனா என்று அவர்களால் கேள்வி கேட்கவோ அல்லது கேட்கவோ முடியவில்லை. பல பெண்கள் இந்த வழியில் பயன்படுத்தப்படுகிறார்கள்.

முதலில் என் கணவர், "எல்லாவற்றையும் நான் கவனித்துக் கொள்கிறேன். எனக்கு ஒரு மாதத்திற்கு ஒரு முறை உங்கள் கையெழுத்து தேவை" என்று கூறினார். ஆனால் வெற்றி பெற்ற பிறகு, நான் அதை எடுத்துக்கொள்வேன். நீங்கள் ஓய்வெடுக்கலாம் என்று அவரிடம் சொன்னேன். எனக்கு கொஞ்சம் அதிகாரம் இருந்ததால் இதைச் சொல்ல முடிந்தது. எல்லோரும் அரசியலில் இருக்க வேண்டும். மாற்றங்கள் வருமா இல்லையா என்பது வேறு. முதலில் நான் அரசியலில் நுழைய விரும்பவில்லை.  ஆனால் அது சரியான மனநிலையல்ல. நமக்கு நிச்சயமாக அரசியல் தேவை. அதற்குள் ஒவ்வொரு நபரும் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது வேறு.

பஞ்சாயத்து அளவிலான பதவிகளில், பெண்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. ஓரளவிற்கு, பெண்கள் அரசியலை கற்றுக்கொள்கிறார்கள் மற்றும் சுதந்திரமாக செயல்பட தைரியத்தைப் பெறுகிறார்கள். இப்போதெல்லாம், அவர்கள் முதலில் தங்கள் தந்தையின் அல்லது மற்றவர்களின் செல்வாக்கோடு வந்தாலும், அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள் மற்றும் பொறுப்பேற்கிறார்கள். வரும் தலைமுறைகளில், இன்னும் பல மாறும். நாம் ஒரு பெண் கவுன்சிலரை அழைத்தால், அவரது கணவர் அழைப்பை எடுப்பார். அவர்கள் தங்கள் வேலையை நன்கு அறிந்திருந்தாலும், அவர்கள் முடிவுகளை எடுக்க முடியாது.

அவர்களின் கல்விப் பின்னணி, அவர்களின் குடும்பத்தினர் எவ்வளவு நம்பிக்கையுடன் அவர்களை வளர்த்தார்கள் என்பது அனைத்தும் கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள். பின்னர் கற்றுக்கொள்வது முக்கியம். ஆரம்பத்தில், நானும் அப்பாவியாக இருந்தேன். ஆனால் இந்தப் பொறுப்பை ஏற்க எனக்கு எங்கே பயிற்சி கிடைக்கும் என்று தேடினேன். காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தில் ஒரு பாடத்திட்டத்தைக் கண்டுபிடித்தேன். எனது பங்கு என்ன? எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என்று எனக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது. தேவைப்பட்டால், மாவட்ட ஆட்சியாளர்களுடன் கூட போராடலாம் என்று எனக்குச் சொல்லப்பட்டது. பெண்களைத் தனிமைப்படுத்துவது எல்லா இடங்களிலும் நடக்கும். அதைத் தாங்களாகவே முன்னோக்கி எடுத்துச் செல்ல என்ன செய்ய முடியும் என்பதை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில், அவர்கள் தவறு செய்யலாம் என்ற பயத்தில், அவர்கள் தொடர்ந்து தங்கள் கணவர்களை நம்பியிருக்கலாம்.

பத்திரிகையாளராக, விஞ்ஞானியாக மாற கனவு :

கேள்வி : பெரியாரின் 'பெண் ஏன் அடிமையானாள்' புத்தகத்தைப் பற்றி நீங்கள் பேசியிருக்கிறீர்கள். அது உங்கள் மீது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது?

பதில் : பொதுவாக, நாம் வளரும் சூழ்நிலைகள் நம்மை நிலைப்படுத்தும். ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான வரையறைகளுடன் நான் ஒரு பழமைவாத கிராமத்தில் வளர்ந்தேன். அது இன்றும் உள்ளது. நீங்கள் ஒரு தாயாகவும் மனைவியாகவும் இருக்க வேண்டும், நீங்கள் அழகாக இருக்க வேண்டும். அந்தக் காலத்தில் நானும் அதைத்தான் நம்பினேன். அவர்கள் சொன்னதை நான் பின்பற்றினேன். பள்ளி முடிந்ததும், நானும் என் சகோதரியும் வீட்டிற்கு வந்ததும், என் அம்மா முதலில் எங்களிடம், 'முகத்தைக் கழுவுங்கள், பவுடர் போடுங்கள், தலைமுடியை சீவுங்கள். நீங்கள் மோசமாகத் தெரிகிறீர்கள்' என்று  சொல்வார்கள்.

அப்போது நான் புத்தகங்களைப் படிக்கவில்லை. கவிதைகளைப் படித்தேன். ஆனால் நான் தொடர்ந்து படித்து, படிக்க அதிக புத்தகங்களைக் கண்டுபிடித்ததால், பெரியாரின் 'பெண் ஏன் அடிமையானாள்' என்ற புத்தகத்தை ஒரு நூலகத்தில் கண்டேன். பெண்களைப் பற்றி அவர் சொன்னது இத்தனை ஆண்டுகளாக நான் நம்பி வந்ததை உடைத்தது. ஆண்கள் செய்வதை என்னால் செய்ய முடியும் என்று அவர் கூறினார். பெண்களுக்கு முடி தேவையில்லை. அழகாக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. அவர்கள் பேன்ட் மற்றும் சட்டை அணியலாம் என்று அவர் கூறினார். கல்வி முக்கியமானது என்று அவர் கூறினார். நாம் அமைப்பை நம்பும் வரை, நாம் மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம். ஆனால் நீங்கள் அதை நம்புவதை நிறுத்தியவுடன், உங்களால் அப்படி வாழ முடியாது என்பதை அறிந்து கொள்வதிலிருந்து ஒரு வலி எழுகிறது. நான் விரும்பிய வழியில் வாழ வாய்ப்பு கிடைக்காதது மிகவும் வேதனையானது.

நான் ஒரு பத்திரிகையாளராகவும் விஞ்ஞானியாகவும் மாற வேண்டும் என்று கனவு கண்டேன். ராகேஷ் சர்மா விண்வெளிக்குச் சென்றபோது, ஒரு நாள் நானும் செல்ல முடியும் என்று நம்பினேன். நல்ல பத்திரிகையாளர்களைப் படிக்கும்போது அல்லது கேட்கும்போது, நானும் இவற்றைப் பற்றி கனவு கண்டேன். ஆனால் நான் கல்வி கற்காததால் எந்த வாய்ப்பும் எனக்கு வரவில்லை. நான் இருக்கும் இடத்திலிருந்து என்ன செய்ய முடியும் என்று நினைத்தேன். அப்போதுதான் நான் எழுத ஆரம்பித்தேன். என் அனுபவங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தேன். என் கோபமும் என் கருத்துகளும் என் எழுத்துக்களாக மாறின.

மகிழ்ச்சியான தருணம் :

கேள்வி : உங்கள் முதல் கவிதை உங்களுக்கு நினைவிருக்கிறதா? உங்கள் கவிதை வெளியிடப்பட்ட தருணத்தையும் நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்பதையும் உங்களுக்கு நினைவிருக்கிறதா?

பதில் : நான் 13 வயதில் எழுதத் தொடங்கினேன். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது, ஒரு சிறுகதை எழுதினேன். நான் அதை ராணி பத்திரிகைக்கு அனுப்பி வைத்திருந்தேன். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. அதனால் எனக்கு வருத்தமாக இருந்தது. பின்னோக்கிப் பார்க்கும்போது, அது வெளியிடப்படாததற்கு நான் நன்றி கூறுகிறேன். இது பெண்களுக்கு எதிரான கதை. 17 வயதில், நான் சுவாசம் என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினேன். அது எனது முதல் கவிதை என்று நான் கருதுகிறேன். இது எனது திருமணத்திற்கு முன்பு வெளியிடப்பட்டது. எனது கிராமத்தில் உள்ள மக்கள் நான் எழுதி வருவதைக் கண்டுபிடித்தனர். இது துவரங்குறிச்சியைச் சேர்ந்த ராஜாத்தி எழுதியதாகக் கூறப்படும் ஒரு பத்திரிகையின் பின்புறத்தில் தோன்றியது. 

தபால்காரர் ஒருவர் அதை எங்களிடம் கொடுத்தார். அது கிராமம் முழுவதும் சென்றது. ஆனால் எனக்கு அது ஒருபோதும் கிடைக்கவில்லை. அத்தகைய எதிர்வினை இருந்தது. ஒரு பெண்ணின் பெயர் திருமண அழைப்பிதழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். இந்தக் கருத்துக்களுடன் என்னால் உடன்பட முடியவில்லை. மக்கள் ஏன் இப்படி நினைக்கிறார்கள்? அதுதான் பல சிக்கல்களில் முதன்மையானது என்று நினைத்தேன். 

கேள்வி : சாபம் - தி கர்ஸ் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மூல அனுபவங்களை மொழிபெயர்க்கும் செயல்முறையைப் பற்றி நீங்கள் கூற முடியுமா? மொழிபெயர்ப்புகள், குறைந்தபட்சம் ஆங்கிலத்தில், உங்கள் கதைகளுக்கு நியாயம் செய்ததாக நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில் : மொழிபெயர்க்கப்பட்ட எந்தக் கதையும் அசலுக்கு நியாயம் செய்ய முடியாது. ஒரு கதையின்  50 சதவீதம், அது ஒரு நாவலாக இருந்தாலும் சரி, சிறுகதையாக இருந்தாலும் சரி, மொழிபெயர்ப்பில் நீங்கள் இழக்க நேரிடும். ஆனால் அதைப் பற்றி எதுவும் செய்ய முடியாது. பெரும்பாலும், ஒரு கதையையோ அல்லது கவிதையையோ சுவாரஸ்யமாக்கும் கிராமிய பேச்சுவழக்குகள் தொலைந்து போகின்றன. உதாரணமாக, கி. ராஜநாராயணனின் படைப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள். தமிழில், இது மிகவும் அழகாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், மொழிபெயர்ப்பில் தொலைந்து போயுள்ளது. நாம் அதிகம் எதிர்பார்க்கக்கூடாது. ஆனால் வெளிவருவதில் மகிழ்ச்சியடைய வேண்டும். இல்லையென்றால், இந்தக் கதைகள் தமிழ் வட்டாரங்களில் மட்டுமே பரவிக்கொண்டே இருக்கும். எனது நாவல்களில் ஒன்று மராத்தியில் மொழிபெயர்க்கப்பட்டது. அங்குள்ள பெண்களிடமிருந்து தினமும் குறைந்தது 10 கடிதங்களாவது எனக்கு வருகிறது.

 பாஜகவிடம் வெறுப்பு இருக்கிறது :

கேள்வி : ஒரு எழுத்தாளராக நீங்கள் கொண்டிருந்த கோபத்தை நீங்கள் இன்னும் தக்க வைத்துக் கொள்கிறீர்களா?

பதில் : ஒரு இடத்தில் நடக்கும் அனைத்து தவறான விஷயங்களையும் பற்றிப் பேசும்போது, அதை விமர்சிக்கும்போது, ஒரு உரையாடல் நடக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். பிழைகளை மாற்றுவதை நாம் பார்க்க வேண்டும். இலக்கியம் இதை உணர்திறனுடன் பதிவு செய்யலாம். ஆனால் பழமைவாதிகள் செய்வது என்னவென்றால், எல்லாம் நன்றாக இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். 'நீங்கள் ஏன் பொய்களை எழுதுகிறீர்கள்?' என்று அவர்கள் கேட்டு, அதை மறைக்க முயற்சிக்கிறார்கள். ஏதாவது தவறு நடந்தால், அதை சரிசெய்வது சரியா அல்லது மறைப்பது சரியா? நான் கவலையால் நடப்பதைப் பற்றி எழுதுகிறேன். அதேசமயம் பாஜகவிடம் வெறுப்பு இருக்கிறது. வெறுப்புக்கும் கவலைக்கும் இடையில் சிறுபான்மையினர் உள்ளனர். அவர்கள் வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாம் கல்வி அடிப்படை என்று கூறுகிறது :

கேள்வி : நல்லெண்ணம் கொண்ட தாராளவாதிகள், தங்களுடையது அல்லாத ஒரு சிறுபான்மை மதத்தில் உள்ள பிரச்சினைகளை விமர்சிப்பதில் சில சமயங்களில் ஒரு குழப்பத்தை எதிர்கொள்கின்றனர். அவர்கள் ஒரு ஸ்டீரியோடைப் கருத்துக்கு பங்களிக்க அஞ்சுகிறார்கள். நீங்கள் உள்ளிருந்து விமர்சித்தீர்கள்.  ஆனால் தஸ்லிமா நஸ்ரினை போல பின்னடைவை எதிர்கொண்டீர்கள். உள்ளிருந்து விமர்சனங்கள் வந்தால் நல்லதா? 

பதில் : ஆம் என்றால், போதுமான குரல்கள் உள்ளன. ஆனால் இங்கிருந்து அல்ல. குரல்கள் உள்ளிருந்து வர வேண்டும். ஒரு சமூகம் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் மாற விரும்பாதவர்கள் தங்கள் பாலினத்தை,  ஆணாக இருந்தால்  மதத்தின் பெயரால் பெண்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்துகிறார்கள். இஸ்லாம் கல்வி அடிப்படை என்று கூறுகிறது. இப்போது, படிக்கவோ அல்லது வெளியே செல்லவோ தடை இருக்கும்போது, நாம் கோபப்படுகிறோம். குர்ஆனில் குறிப்பிடப்படாதது மதத்திற்கு தவறாகக் காரணம் காட்டப்படுகிறது. ஒரு பெண் கல்வி கற்கும்போது, அவள் சுதந்திரமாக இருக்க முடியும். அந்த வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. பெண்கள் அதிகாரம் பெறுவதைத் தடுக்க, மதம் பயன்படுத்தப்படுகிறது. தஸ்லிமா நஸ்ரினின் எழுத்து எனக்குப் பிடிக்கவில்லை. அதில் எந்த திறமையும் இல்லை. அவர் மதத்தைக் கண்டிக்கிறார். அது ஒரு நிகழ்ச்சி நிரலுடன் செய்யப்படுகிறது என்று நான் நம்புகிறேன். ஒரு சமூகத்தை கவனமாகப் பார்ப்பதற்கும், மாற்றத்தை நோக்கி உதவி செய்வதற்கும், சீரற்ற முறையில் விஷயங்களைக் கண்டிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. அவள் பிந்தையதைச் செய்தாள்.

தந்தை பெரியாரின் பணி :

கேள்வி : ஆனால் பெரியாரையும் அப்படித்தான் பார்க்க முடியும். அவர் பிறப்பால் இந்துவாக இருந்தார். ஆனால் மாற்றத்தை விரைவுபடுத்துவது முக்கியம் என்று நினைத்ததால் மதத்தை கடுமையாக விமர்சித்தார்.

பதில் : ஒரு மதத்தில் பாகுபாட்டை அவர் எதிர்த்தார். சாதியை ஒழிக்க அவர் விரும்பினார். நாங்கள் அவரை ஒரு நாத்திகராகப் பார்க்கிறோம். சாதியின் அடிப்படையில் மக்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதையே அவர் விமர்சித்தார். நான் அவரை அப்படித்தான் பார்க்கிறேன். ஆனால் அவள்(தஸ்லிமா நஸ்ரின்) அப்படி இல்லை. அது (அவரது கருத்துக்கள்) அவளுடைய கதைகளில் வருவதில்லை. சல்மான் ருஷ்டி வித்தியாசமானவர். நீங்கள் அவரது கதைகளை மீண்டும் மீண்டும் படிக்கலாம். அது [அவரது கருத்துக்கள்] அவற்றில் வெளிப்படுகிறது. அதனால்தான் அவர் (தஸ்லிமா நஸ்ரின்) பல சிக்கல்களைச் சந்தித்திருக்கிறார். மேலும் பல எழுத்தாளர்கள் அதை அவள் தெரிந்தே செய்ததாக உணர்கிறார்கள். நாடு கடத்தலுடன் நாங்கள் உடன்படவில்லை. அதுவும் சரியல்ல.

இதற்கிடையில், உள்ளிருந்து பேசுவது வேறு, ஆனால் அதை ஒரு கதையாகச் சொல்வதுதான் நான் செய்வது. நான் எங்கும் மதத்தைப் பற்றித் தொடுவதில்லை. சல்மான் ருஷ்டி அல்லது  தஸ்லிமா நஸ்ரின் சந்தித்த பிரச்சனைகளை நான் அறிவேன், அந்தப் பாதையில் செல்வதை நான் தவிர்க்கிறேன். சமூகம் வேறு, மதம் வேறு. நான் சமூகத்தை விமர்சிக்கிறேன். நான் ஒருபோதும் மதத்தைத் தொடவில்லை, ஒருபோதும் தொட மாட்டேன்.

சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக  :

கேள்வி : கர்நாடகா ஹிஜாப் தடையைக் கொண்டு வந்தபோது, பெண்ணியக் கண்ணோட்டத்தில் அது தவறாகத் தோன்றியது. ஆனால் யாரோ ஒருவர் அதை ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காகப் பயன்படுத்துவது போல் தோன்றியது. ஒட்டுமொத்தமாக, அந்த விதிக்கு எதிரான குரல் உள்ளது. இந்த உரையாடலில் ஒட்டுமொத்தமாக ஒரு சமூகம் எவ்வாறு உணர்வுபூர்வமாகப் பங்கேற்று அதற்கு பங்களிக்க முடியும்?

பதில் : ஹிஜாப் அணிவதை நான் ஆதரித்தேன். சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டுவதே பாஜக முக்கிய கொள்கை கோட்பாடாக உள்ளது.  அந்தப் பாகுபாடுதான் கண்டிக்கப்பட வேண்டும்.  அதுதான் நமது முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை, ஒரு சமூகம் பாகுபாடு காட்டப்பட்டு ஒதுக்கி வைக்கப்படும்போது, அவர்கள் ஒன்றிணைந்து சிறுபான்மையினரை ஆதரிக்க வேண்டும் என்பதே சிவில் சமூகத்தின் பங்கு. பெரும்பான்மை ஆட்சியை நாம் எதிர்க்க வேண்டும். பர்தா அணிவதை நான் ஆதரித்தேன். இது சமூகத்திற்குள் நடக்கும் போராட்டம்.

கேள்வி : உங்கள் படைப்புகளில் மதத்தைப் பற்றி நீங்கள் குறிப்பிடுவதில்லை என்று சொன்னீர்கள். ஆனால் பெண்கள் பெரும்பாலும் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். அதை நீங்கள் எப்படி வித்தியாசமாகப் பார்க்கிறீர்கள்?

பதில் : நான் ஏற்கனவே சொன்னேன், மதத்தை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி, ஆண்கள் பெண்களைக் கட்டுப்படுத்துகிறார்கள். ஆனால் பெண்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டாம் என்று எந்த மதமும் சொல்லவில்லை. மதம் காரணமாக நான் பல விஷயங்களை இழந்துவிட்டேன். இருப்பினும், இவற்றைச் செய்ய முடியாது என்று கூறியது என் மதம் அல்ல. பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்ட மதம் பயன்படுத்தப்படுகிறது. நான் என் படைப்புகளில் மதத்தை நேரடியாகத் தொடுவதில்லை. எந்த ஆணாதிக்க சமூகத்திலும், பெண்கள் துன்பப்படுவதை மட்டுமே நீங்கள் காண்கிறீர்கள். என்னை விட மோசமான வாழ்க்கை வாழும் இந்துப் பெண்களை நான் அறிவேன்.

சமீபத்தில், டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் தனது தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்டார். ராதிகாவின் சுதந்திரம் மற்றும் செயல்பாடுகள் அவரது தந்தைக்கு பிடிக்கவில்லை என்றும், அதனால் அவரைக் கொன்றதாகவும் அவரது தோழி கூறியிருந்தார். இதுதான் இன்றைய சமூகத்தின்  முகம். இது மதம் சார்ந்த விஷயம் அல்ல. பிரச்சனை மிகவும் ஆழமானது. நாம் ஆழ்ந்த ஆணாதிக்க, ஆண் ஆதிக்கம் செலுத்தும், இன்னும் நிலப்பிரபுத்துவ மனநிலையுடன் செயல்படும் ஒரு சமூகத்தில் வாழ்கிறோம். சமூகங்கள் முழுவதிலுமிருந்து வரும் பெண்கள், அவர்களின் நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல், அமைதியாகவும், கீழ்ப்படிதலுடனும், இணக்கமாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலங்களவை உறுப்பினராக முதன்மை இலக்கு :

கேள்வி : மாநிலங்களவை உறுப்பினராக, உங்கள் முதன்மை இலக்கு அல்லது கவனம் என்ன? நாடாளுமன்றத்தில் உங்கள் பங்கின் மூலம் நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள்?

பதில் : சமூக நீதியின் கொள்கைகளுக்காக எப்போதும் உறுதியாக நிற்கும் ஒரு கட்சியிலிருந்து நான் வருகிறேன். இந்த சமூகத்தில் உள்ள அனைவரும் அவர்களின் சாதி, மதம், பாலினம் அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற நம்பிக்கை எங்கள் சித்தாந்தத்தின் மையத்தில் உள்ளது. எனக்குத் தெரிந்தவரை, நாடு முழுவதும் முஸ்லிம் சமூகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்ற ஒரே பெண் நான்தான். இதுவே, எங்கள் கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வை மற்றும் முற்போக்கான மனநிலையைப் பற்றி நிறையப் பேசுகிறது. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக நான் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

ஒரு எம்.பி.யாக, நாடாளுமன்றத்தில் எனது கட்சியின் குரலையும் கொள்கைகளையும் உண்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்துவேன். இது நான் பெருமையுடனும் அர்ப்பணிப்புடனும் சுமக்கும் பொறுப்பு.

நடிகர் விஜயை மக்கள்  நம்ப மாட்டார்கள் :

கேள்வி : தமிழ்நாட்டில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு முக்கிய அரசியல் இயக்கங்கள் மட்டுமே இருக்கின்றன. இப்போது நடிகர் விஜய் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். பொதுவாக, சிறுபான்மையினர் திமுக கூட்டணிக்கு வாக்களிக்கின்றனர். இப்போது விஜய் சிறுபான்மையினரை, குறிப்பாக, இளைஞர்களை ஈர்ப்பார் என்ற பேச்சு உள்ளது. அவரது பேச்சுகளும் முக்கியமாக சிறுபான்மை வாக்குகளை குறிவைக்கின்றன. அவருக்கு வாக்குகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதா?

பதில் : சிறுபான்மையினர் எப்போதும் திமுகவுக்கு வாக்களிக்கின்றனர். இந்த வழக்கம் ஒரு முறைதான் மாறிவிட்டது என்பது எனக்குத் தெரியும். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு கலைஞர் அறிமுகப்படுத்திய 3 புள்ளி 5 சதவீத இடஒதுக்கீட்டை யாராலும் மறக்க முடியாது. இது அவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியைப் பெற உதவியது.

சிறுபான்மையினரின் வாக்குகளை குறிவைக்க நடிகர் விஜய் தனியாக நிற்கிறார். அவர் அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்தால் அது நடக்காது என்பது அவருக்குத் தெரியும். தனியாகப் போட்டியிடுவதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் சிறுபான்மையினர் அவரை நம்ப மாட்டார்கள். நீங்கள் முன்பே ஏதாவது செய்திருக்க வேண்டும், நீங்கள் மீண்டும் அவர்களுக்காக ஏதாவது செய்வீர்கள் என்று அவர்கள் நம்ப வேண்டும்.

சி.ஏ.ஏ., போராட்டங்கள் நாட்டையே தலைகீழாக மாற்றியது. சிறுபான்மையினர் மீது அவருக்கு உண்மையான அக்கறை இருந்தால், அவர் அவர்களுக்கு ஆதரவாகப் பேசியிருக்கலாம். சமீபத்தில் கூட, வட இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக பல அட்டூழியங்கள் நடந்தன. ஆனால் அவர் எதற்கும் எதிராகப் பேசவில்லை. முத்தலாக் அல்லது 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டபோது அவர் பேசவில்லை. குரல் எழுப்பவில்லை. திடீரென்று, முஸ்லிம்களைக் காப்பாற்றுவேன் என்று அவர் சொன்னால், அது நம்பத்தக்கது அல்ல. இந்தக் கொடுமைகள் அனைத்திற்கும் பாஜகதான் பொறுப்பு. குறைந்தபட்சம் அவர் பாஜகவை விமர்சிக்க வேண்டும், ஆனால் அதுவும் நடக்கவில்லை. அவர் திமுகவை மட்டுமே குறிவைக்கிறார். அதனால், சிறுபான்மையினர் அவரை நம்பமாட்டார்கள்.

சென்னையில் காவல்துறை வன்முறைக்கு எதிராக நடந்த போராட்டத்திற்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். சிறுபான்மையினர் தங்களுக்கு யார் உதவி செய்தார்கள் என்று யோசிப்பார்கள். அவர்கள் ஒரு நடிகரை ஆதரிக்க மாட்டார்கள். பல படங்களில், அவர் முஸ்லிம்களை மோசமாக சித்தரித்து, முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகக் காட்டியுள்ளார். இவை தேர்தல்களின் போது வெடிக்கும்.

மறுபுறம், எம்ஜிஆர் திமுகவின் ஒரு பகுதியாக இருந்தார். அவர் தொண்டர்களுடன் களத்தில் இறங்கினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அதிமுகவை கைப்பற்றினார். அவர் தனிக் கட்சியைத் தொடங்கி ஆட்சியைக் கைப்பற்றவில்லை. விஜய்யைப் பொறுத்தவரை, கள அரசியலை எடுத்துக் கொண்டால், அவர் இன்னும் வெளியே வரவில்லை. களத்திற்கு வராமல் ஒரு தலைவரை அடையாளம் காண முடியாது. மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்  மக்கள் வாக்களித்த ஒரு நடிகர் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அது முடிந்துவிட்டது.

- நன்றி : தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ்

- தமிழில் : சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

===========================

Friday, July 25, 2025

ஒரு நாளைக்கு 7ஆயிரம் அடிகள்.....!

 

ஒரு நாளைக்கு 7ஆயிரம் அடி நடங்க.....!

உலகம் முழுவதும் மாறிவரும் வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மனித இனம் ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இந்த பிரச்சினைகள் தற்போது பல நோய்கள் வடிவத்தில் மனிதர்கள் வாட்டி வதைக்கின்றன. மனிதர்களின் அழையா விருந்தாளியாக வரும் நோய்கள் காரணமாக, அவர்களின் மன நிம்மதி பாழகிறது. அதனால், ஆரோக்கிய வாழ்விற்காக ஒவ்வொரு நாளும் அதிகளவு செலவிழக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு மனிதன் தற்போது தள்ளப்பட்டுள்ளான்.

இப்படி மனிதன் மன நிம்மதியை இழந்து தவிக்கும் நிலையில், அவனுக்கு இயற்கை பல்வேறு வடிவங்களில் ஆறுதலை கூறுகிறது. உதவிக்கரம் நீட்டுகிறது. நாள்தோறும் கடைப்பிடிக்கும் சில நல்ல பழக்க வழக்கங்கள் காரணமாக, ஓரளவுக்கு ஆரோக்கிய வாழ்க்கையை வாழலாம் என்று இயற்கை அறிவுறுத்துகிறது. அந்த அறிவுறுத்தலின் வரிசையில், முன்னணியில் இருப்பது தான் நடைப்பயிற்சியாகும்.  ஒரு நாளைக்கு 7 ஆயிரம் அடிகள் மட்டும் எடுத்து வைத்து நடப்பது, நாள்பட்ட நோய்கள் மற்றும் ஆரம்பகால இறப்பு அபாயத்தை பாதியாகக் குறைக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

லான்செட் ஆய்வில் தகவல் :

புதிய ஆராய்ச்சி, மிதமான தினசரி நடைப்பயணத்தை நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைப்பதுடன் இணைக்கிறது. உடல் செயல்பாடுகளை வழிநடத்தவும் நீண்ட கால ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஒரு எளிய, பயனுள்ள கருவியாக தினசரி 7 ஆயிரம் அடி எண்ணிக்கையைப் பயன்படுத்தி நடப்பதை இந்த கண்டுபிடிப்புகள் ஆதரிக்கின்றன.

புகழ்பெற்ற தி லான்செட் பொது சுகாதார இதழில் வெளியிடப்பட்ட ஒரு பெரிய புதிய ஆய்வின்படி, ஒரு நாளைக்கு 7 ஆயிரம் அடிகள் மட்டும் நடப்பது, பெரிய நாள்பட்ட நோய்கள் மற்றும் ஆரம்பகால இறப்பு அபாயத்தைக் கணிசமாகக் குறைக்க போதுமானதாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

ஒரு லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரியவர்கள், இளைஞர்கள் ஆகியோரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சம்பந்தப்பட்ட 57 ஆய்வுகளின் விரிவான மதிப்பாய்வு, இந்த மிதமான அளவிலான தினசரி செயல்பாடு மேம்பட்ட உடல் மற்றும் மன ஆரோக்கிய விளைவுகளுடன் வலுவாக இணைக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளது.

கணிசமான சுகாதார நன்மைகள் :

தினசரி 7 ஆயிரம் அடிகள் நடப்பது இருதய நோய்க்கான 25 சதவீதம் குறைவான ஆபத்து, வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தில் 14 சதவீதம் குறைப்பு மற்றும் புற்றுநோய் அபாயத்தில் 6 சதவீதம் குறைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது.

மன மற்றும் அறிவாற்றல் ஆரோக்கியமும் குறிப்பிடத்தக்க ஆதாயங்களைக் கண்டது. இதில் டிமென்ஷியா அபாயத்தில் 38 சதவீதம் குறைப்பு மற்றும் மனச்சோர்வில் 22 சதவீதம் குறைவு ஆகியவை அடங்கும். விழும் ஆபத்து 28 சதவீதம் குறைந்தது. அதேநேரத்தில் எந்தவொரு காரணத்தினாலும் இறக்கும் ஒட்டுமொத்த ஆபத்து கிட்டத்தட்ட பாதியாகக் குறைக்கப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது. 

உடற்பயிற்சி 150 நிமிடங்கள் போதுமானதா?

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க வாராந்திர உடற்பயிற்சி 150 நிமிடங்கள் போதுமானதா? என்ற கேள்விக்கும் நல்ல விளக்கம் கிடைத்துள்ளது. 10 ஆயிரம் படிகள் நடப்பது நீண்ட காலமாக முறைசாரா தினசரி இலக்காகக் கருதப்பட்டாலும், 7 ஆயிரம் அடி என்பது மிகவும் நடைமுறை மற்றும் அடையக்கூடிய இலக்காக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக குறைவான சுறுசுறுப்பான நபர்களுக்கு இது பயன் அளிக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

“ஒரு நாளைக்கு 10 ஆயிரம் அடிகள் என்பது அதிக சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு இன்னும் சாத்தியமான இலக்காக இருக்க முடியும். என்றாலும், ஒரு நாளைக்கு 7 ஆயிரம் அடிகள் என்பது சுகாதார விளைவுகளில் மருத்துவ ரீதியாக அர்த்தமுள்ள முன்னேற்றங்களுடன் தொடர்புடையது மற்றும் மிகவும் யதார்த்தமானதாக இருக்கலாம்” என்று சிட்னி பல்கலைக்கழகத்தின் சார்லஸ் பெர்கின்ஸ் மையத்தின் முன்னணி எழுத்தாளர் பேராசிரியர் டிங் டிங் கூறியுள்ளார்.

ஒரே நேரத்தில் தினமும் உடற்பயிற்சி செய்வது உடல் கடிகாரத்தை மறுசீரமைக்கலாம். ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம். இதேபோன்று குறைவான அடிகள் இன்னும் நன்மைகளை வழங்குகின்றன. ஒரு நாளைக்கு 4 ஆயிரம் அடிகள் போன்ற குறைந்த அடி எண்ணிக்கைகள் கூட, அதிக உட்கார்ந்த வாழ்க்கை முறைகளுடன் (சுமார் 2 ஆயிரம் அடிகள்) ஒப்பிடும்போது சுகாதார நன்மைகளை வழங்குகின்றன என்பதையும் ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. சில நன்மைகள் 7 ஆயிரம் படிகளுக்கு அப்பால் தொடர்ந்தாலும், குறிப்பாக இதய ஆரோக்கியத்திற்கு அந்த புள்ளிக்குப் பிறகு பெரும்பாலான ஆதாயங்கள் சமன் செய்யப்பட்டன.

சில நிபந்தனைகளுக்கான சிறிய எண்ணிக்கையிலான ஆய்வுகள் மற்றும் வயது சார்ந்த தரவு இல்லாதது உட்பட சில வரம்புகளை ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டனர். இருப்பினும், உடல் செயல்பாடுகளை வழிநடத்தவும் நீண்ட கால ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஒரு எளிய, பயனுள்ள கருவியாக தினசரி அடி எண்ணிக்கையைப் பயன்படுத்துவதை கண்டுபிடிப்புகள் ஆதரிக்கின்றன. மேலும், உடல் செயல்பாடுகளை வழிநடத்தவும் நீண்ட கால ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஒரு எளிய, பயனுள்ள கருவியாக தினசரி படி எண்ணிக்கையைப் பயன்படுத்ததி நடப்பதை இந்த கண்டுபிடிப்புகள் ஆதரிக்கின்றன.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்