Thursday, September 21, 2023

அமைதி தினம்....!

இன்று சர்வதேச அமைதி தினம்....!

ஆனால், உலகில் தற்போது எங்கேயாவது அமைதி நிலவுகிறதா என கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் இல்லை என்றே வருகிறது.

ஒவ்வொரு நாடுகளும் மோதிக் கொண்டு, அமைதியை இழந்து தங்கள் நாட்டு மக்களும்  துன்பத்தை அனுபவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளி வருகின்றன.

நவீன விஞ்ஞானம் வளர்ந்த அளவிற்கு மனித மனங்களில் வளர்ச்சி, முதிர்ச்சி ஏற்படவில்லை.

பெருந்தன்மையான அறிவு மனிதனுக்கு வரவில்லை.

இதனால் துன்பத்திற்கு மேல் துன்பம், இன்னல்களுக்கு மேல் இன்னல் என மனிதன் நெருக்கடியில் சிக்கி நாள்தோறும் சின்னாபின்னாமாகி அமைதியை இழந்து அதை தேடி அலைகிறான்.

அமைதி இழப்புக்கு தான் மட்டுமே காரணம் என்பதை மனிதன் உணர்ந்து கொண்டு வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டுவந்து அனைவரையும் நேசித்து அன்பு பாராட்டி நேசித்தால் மட்டுமே கொஞ்சம் அமைதி கிடைக்கும்.

இருந்தாலும்,

அனைவருக்கும்

World peace day greetings....!

சர்வதேச அமைதி நாள் வாழ்த்துகள்...!

No comments: