Monday, November 13, 2023

ஒரு அனுபவம்.....!

 நல்லது.....!

உங்களிடம் நெருங்கி பழகிய உங்களது உறவினர்கள், நண்பர்கள், பல்வேறு காரணங்களால், திடீரென உங்களை ஒதுக்கினால், பேசுவதை பழகுவதை நிறுத்தி கொண்டால் அதற்காக நீங்கள் சிறிதும் வருத்தப்பட வேண்டாம்.

அல்லது உங்களது உறவினர்கள் நண்பர்கள் உங்களை ஒதுக்குவதாக நீங்கள் உறுதியாக கருதினால்,  கவலைபடாமல் நீங்களும் அமைதியாக ஒதுங்கி விடுங்கள். 

அதை விட்டு விட்டு, பழைய பாணியிலேயே நீங்கள் அன்பு பாராட்ட முயற்சி செய்தால், அல்லது நட்பை தொடர்ந்தால், அதன்மூலம் பல்வேறு தேவையில்லாத பிரச்சினைகளை வலுக்கட்டாயமாக நீங்கள் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

ஏன், சில நேரங்களில் உங்களுக்கு அவமானங்கள்  கூட ஏற்படும். 

சில நேரங்களில் வாழ்க்கையில் நமக்கு நல்ல பாடத்தை சொல்லி தருபவர்கள் நமது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள்தான்.

இதை நாம் மறந்துவிடக்கூடாது. 

எனவே, அவர்களிடம் பழகிய நாட்களை நீங்கள் மறக்காவிட்டாலும், உங்களது உண்மையான அன்பை தொடர்ந்தாலும், அவர்களது புறக்கணிப்பு, ஒதுக்கல் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, மனதில் உள்வாங்கிக் கொண்டு நீங்களும் அமைதியாக ஒதுங்கி விடுவதுதான் உங்களுக்கும் அவர்களுக்கும் நல்லது. 

இதன்மூலம் மட்டுமே உங்கள் வாழ்க்கையில் அமைதி கிடைக்கும். 

வாழ்க்கையில் தேவையில்லாத பிரச்சினைகள் உங்களுக்கு ஏற்படாது. 

இது என் அனுபவம்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: