Wednesday, December 24, 2025

Women Safety...!

What makes Mumbai so special? The no.1 thing here is the SAFETY it offers to its women. 

It is 11 PM. A weekday. I am going home from one end of the city to another after meeting a relative, in a local train. The ladies compartment/ coach is almost full (you are never alone in Mumbai)! And... To one end is a police officer guarding the coach. There is one police officer in every ladies coach. You can also see how friendly people are.... In a short clip of 25 seconds, I had two people waving at my camera although we are just strangers... Or shall I say, fellow Mumbaikars. 



Tuesday, December 23, 2025

சிறப்பு...!

 Beautiful gesture sister loved it.

Her small act of kindness & gesture truly made a difference. Kudos to Ms. Abhinaya, one of the dedicated MTC Bus conductors calmly and politely assisting passengers during the journey.

Wishes to Mtc Chennai, continue to inspire.



திறப்பு...!

 VictoriaPublicHall: சென்னையின் வரலாற்றுச் சின்னத்துக்குப் புத்துயிர்!

நாடு போற்றும்  DravidianModel-இன் ஆதிவிதையான JusticeParty தொடக்கம், சென்னையில் முதல் திரைப்படத் திரையிடல், தேசியத் தலைவர்களின் உரைகள் ஒலித்தது என எத்தனையோ பெருமைகளைக் கொண்ட விக்டோரியா பொது அரங்கத்தைத் தொன்மை மாறாமல் புதுப்பித்துத் திறப்பு.

சென்னை நகரின் பல நினைவுகளை மீண்டும் உயிர்ப்பித்து நம் கண்முன் நிறுத்தும் கண்காட்சியும் சிந்தையைக் கவர்ந்தது!

மேலும், ரிப்பன் மாளிகை வளாகத்தில் கட்டப்படவுள்ள ChennaiCorp-இன் புதிய மன்றக்கூடத்திற்கும் அடிக்கல் நாட்டல்.



அதான்....!

Last Adhan of Sheikh Faisal Nouman in the Prophet's Mosque on 2nd November 2025.



முகமது அக்லாக் படுகொலை வழக்கு - விரைவு நீதிமன்றம் அதிரடி உத்தரவு....!

முகமது அக்லாக் படுகொலை வழக்கில் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற உத்தரப் பிரதேச பாஜக அரசு மனு,,,,!

 தள்ளுபடி செய்து  விரைவு நீதிமன்றம் அதிரடி உத்தரவு....!! 

லக்னோ, டிச.24- பசுவதை செய்ததாகக் கூறி முகமது அக்லாக் என்ற முஸ்லிம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறுவதற்கான உத்தரப் பிரதேச அரசின் முயற்சிக்கு பின்னடைய ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில், சூரஜ்பூரில் உள்ள விரைவு நீதிமன்றம் மாநில அரசின் மனுவை நிராகரித்து, தினசரி விசாரணைகள் மூலம் வழக்கை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை செவ்வாயன்று (23.12.2025) பிறப்பித்த கூடுதல் மாவட்ட நீதிபதி சௌரப் திவேதி, வழக்கில் முக்கியமான ஆதாரங்களுக்கு அனைத்து விதமான பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, கௌதம் புத்த நகர் காவல் ஆணையர் மற்றும் கிரேட்டர் நொய்டாவின் துணை ஆணையர் உட்பட சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். 

மேலும் இந்த வழக்கை 'மிகவும் முக்கியமானது' என வகைப்படுத்தி, தினசரி அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், அரசுத் தரப்பு விரைவில் ஆதாரங்களைப் பதிவு செய்யுமாறும் உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு அடுத்த விசாரணைக்காக ஜனவரி 6, 2026 அன்று பட்டியலிடப்பட்டுள்ளது.

முகமது அக்லாக் படுகொலை :

கடந்த 2015ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் உள்ள தாத்ரியின் பிசாடா கிராமத்தில், பசுவதைச் செய்ததாக வதந்திகள் பரவின.  செப்டம்பர் 18, 2015 அன்று, தாத்ரியில் உள்ள பிசாடா கிராமத்தில் உள்ளூர் கோயிலில் இருந்து, முகமது அக்லாக் ஒரு பசுவைக் கொன்று அதன் இறைச்சியை குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு கும்பல் அவரது வீட்டிற்கு வெளியே கூடியது. உள்ளூர் பாஜக தலைவர் ஒருவரின் மகன் விஷால் ராணா மற்றும் அவரது உறவினர் சிவம் ஆகியோர் தலைமையிலான அந்தக் கும்பல், முகமது அக்லாக் மற்றும் அவரது மகன் டேனிஷ் ஆகியோரை வீட்டிலிருந்து வெளியே இழுத்து, அவர்கள் மயக்கமடையும் வரை தாக்கியது.

பின்னர் நொய்டாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முகமது அக்லாக் உயிரிழந்த நிலையில், டேனிஷ் தலையில் பலத்த காயங்களுடன் பெரிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்தார். 

வழக்குப்பதிவு :

இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 (கொலை), 307 (கொலை முயற்சி), 147 (கலவரம்), 148 (கொடிய ஆயுதங்களுடன் கலவரம்), 149 (சட்டவிரோதமாகக் கூடுதல்), 323 (தாக்குதல்), 504 (அமைதியைக் குலைக்கும் நோக்குடன் வேண்டுமென்றே அவமதித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் ஜார்ச்சா காவல் நிலையத்தில் காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, ஒரு சிறார் உட்பட 15 பேர் மீது காவல்துறை டிசம்பர் 23, 2015 அன்று சூரஜ்பூரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நேரத்தில் இறுதி தடயவியல் அறிக்கை கிடைக்காததால், அதில் மாட்டிறைச்சி பற்றி குறிப்பாகக் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், நாடு தழுவிய அளவில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டபோதிலும், குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் செப்டம்பர் 2017-க்குள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதனால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தற்போது பிணையில் உள்ளனர். 

உத்தரப் பிரதேச பாஜக அரசு மனு :

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்டுவதில் பாதிக்கப்பட்டவரின் உறவினர்களின் முரண்பட்ட வாக்குமூலங்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து எந்த துப்பாக்கியோ அல்லது கூர்மையான ஆயுதமோ கைப்பற்றப்படாதது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே எந்த முன்விரோதமும் அல்லது பகைமையும் இல்லாதது ஆகிய காரணங்களைக் காட்டி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறக் கோரி உத்தரப் பிரதேச பாஜக அரசு அக்டோபர் 15 அன்று ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில், சூரஜ்பூர் விரைவு நீதிமன்றம் மாநில அரசின் மனுவை நிராகரித்து, தினசரி விசாரணைகள் மூலம் வழக்கை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் வரவேற்பு :

மாநில அரசின் மனுவை நிராகரித்து, தினசரி விசாரணைகள் மூலம் வழக்கை விரைவுபடுத்த சூரஜ்பூர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவு மூலம் குற்றவாளிகளை பாதுகாக்க பாஜக அரசு எடுக்கும் முயற்சி தோல்வி அடைந்து இருப்பதாக உள்ளூர் காங்கிரஸ் தலைவர் அனில் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.  மத ரீதியாக மக்களை பிரித்து அரசியல் லாபம் அடைய பாஜக எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் அபாயகரமானது என்றும் இதுபோன்ற செயல்களை உடனே தடுத்து நிறுத்த வேண்டம் என்றும் அனில் யாதவ் கூறியுள்ளார். 

- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

========================= 

குளிர்ச்சிக்குப் பின்னால் உள்ள கதை....!

 

" குளிர்ச்சிக்குப் பின்னால் உள்ள கதை உங்களுக்குத் தெரியுமா? "

புனித ஹஜ் மற்றும் உம்ரா பயணம் மேற்கொள்ளும் உலகம் முழுவதும் உள்ள புனித முஸ்லிம் யாத்ரீகர்கள், ஹரமின் 'மதாஃப்' பகுதிக்குள் காலடி எடுத்து வைத்தவுடன், சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தையும் மீறி, தரையின் தீவிரமான குளிர்ச்சியால் வியப்படைகிறார்கள். இந்த நிகழ்வின் பின்னால் உள்ள ரகசியம் குறித்து பலர் ஆச்சரியப்படுகிறார்கள். அத்துடன் வியப்பு அடைந்து யோசிக்க ஆரம்பிக்கிறார்கள்.

இது பளிங்குக் கல்லின் இயற்கையான பண்பா? இதற்குப் பின்னால் ஏதேனும் குறிப்பிட்ட தொழில்நுட்பம் உள்ளதா? தரைக்கு அடியில் குளிரூட்டும் அமைப்புகள் உள்ளதா? என பலவிதமாக சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள். உலகின் இரு  புனித மஸ்ஜித்துகளில் உள்ள பளிங்குக் கல்லின் குளிர்ச்சிக்குப் பின்னால் ஒரு சுவையான கதை உள்ளது. அந்த கதை உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியவில்லை எனில், அதை அவசியம் அறிந்துகொண்டால் உங்களுக்கு மிகப்பெரிய வியப்பு ஏற்படும்.

பளிங்குக் கல்லின் ரகசியம் :

இதோ, அந்த மேதை கட்டடக் கலைஞர் டாக்டர் முகமது கமல் இஸ்மாயில் மற்றும் இரு புனித மஸ்ஜித்துகளின் பளிங்குக் கல்லுடனான அவரது பயணத்தின் சுவையான கதை. கட்டடக் கலைஞர் டாக்டர் முகமது கமல் இஸ்மாயில் செப்டம்பர் 15, 1908 அன்று எகிப்தின் தகாஹ்லியாவில் உள்ள மிட் கம்ர் என்ற இடத்தில் பிறந்த இவர் ஒரு மேதை ஆவார். சவூதி அரேபியாவில் உள்ள இரு புனித மஸ்ஜித்துகளின் விரிவாக்கத்தைத் திட்டமிட்டு செயல்படுத்தியவர் இவர் தான்.

டாக்டர் இஸ்மாயில், புனித யாத்ரீகர்களுக்காக புனித மஸ்ஜித்தின் தரையை, கிரேக்கத்தில் மட்டுமே காணப்படும் 'தாசோஸ்' எனப்படும் ஒரு குறிப்பிட்ட வகை பளிங்குக் கல்லால் பதிக்க விரும்பினார். பயன்படுத்தப்பட்ட பளிங்குக் கல், தாசோஸ் தீவிலிருந்து எடுக்கப்பட்ட கிரேக்க 'தாசோஸ்' ஆகும். இது அதன் தீவிரமான வெண்மை மற்றும் ஒரு தனித்துவமான படிக அமைப்பால் வேறுபடுகிறது. இந்த அமைப்பு அதற்கு ஒரு உயர் 'அல்பிடோ' விளைவைக் கொடுக்கிறது, அதாவது இது சூரிய ஒளி மற்றும் வெப்பத்தை மிக அதிக விகிதத்தில் பிரதிபலிக்கிறது. அத்துடன் வெப்பத்தை விரைவாக உறிஞ்சுவதில்லை. இது நாளின் வெப்பமான நேரங்களில் கூட இயற்கையாகவே குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது.

இதை மேம்படுத்த, வெப்பத் தடையை அதிகரிக்க 5 சென்டிமீட்டர் தடிமன் கொண்ட துண்டுகள் பதிக்கப்பட்டன. பரவலான நம்பிக்கைக்கு மாறாக, முற்றத்தின் அடியில் குளிர்ந்த நீர் குழாய்கள் உள்ளன என்ற வதந்தி ஆதாரமற்றது. டாக்டர் முகமது கமல் இஸ்மாயில் கிரேக்கத்திற்குச் சென்று, ஹரமிற்குத் தேவையான பளிங்குக் கல்லை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த கொள்முதல், அது வெட்டி எடுக்கப்பட்ட சிறிய மலையில் இருந்த மொத்த அளவில் பாதியை எடுத்துக்கொண்டது. அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். வெள்ளை பளிங்குக் கல் வந்து சேர்ந்தது, ஹரமின் தரைத்தளம் அமைக்கும் பணி நிறைவடைந்தது.

15 ஆண்டுகளுக்குப் பிறகு :

ஆண்டுகள் கடந்தன. சவூதி அரசாங்கம் மதீனாவில் உள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அல்-மஸ்ஜித் அந்-நபவியிலும் அதே வகை பளிங்குக் கல்லைப் பதிக்குமாறு அவரிடம் கேட்டது. இந்த சம்பவம் குறித்து டாக்டர் முகமது கமல் நினைவு கூர்கிறார்: "மன்னரின் அலுவலகம் என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மஸ்ஜித்துக்குத் தேவையான மார்பிள் கற்களைப் பெறுமாறு கேட்டபோது, ​​நான் மிகவும் பயந்து போனேன். இந்த குறிப்பிட்ட வகை மார்பிள், கிரீஸில் உள்ள அந்தச் சிறிய பகுதியைத் தவிர பூமியில் வேறு எங்கும் இல்லை, மேலும் நான் ஏற்கனவே அதன் பாதி அளவை வாங்கியிருந்தேன். அதுவும் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது." இப்படி நினைவு கூறும் டாக்டர் முகமது கமல், பின்னர், அவர் கிரீஸில் உள்ள அதே நிறுவனத்திற்குத் திரும்பி, அதன் தலைவரைச் சந்தித்து, மீதமுள்ள அளவு குறித்துக் கேட்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் இஸ்மாயில் முதல் முறையாக வாங்கிய உடனேயே அது விற்கப்பட்டுவிட்டதாகத் தலைவர் பதிலளித்தார்.

இதுகுறித்து டாக்டர் இஸ்மாயில் இப்படி கூறுகிறார்: "என் வாழ்க்கையில் நான் உணராத ஒரு சோகத்தை உணர்ந்தேன். நான் என் காபியைக் கூட முடிக்கவில்லை. அலுவலகத்தை விட்டு வெளியேறி, அடுத்த நாளே திரும்புவதற்காக விமான டிக்கெட் முன்பதிவு செய்தேன்." வெளியே செல்லும்போது, ​​அலுவலகத்தில் இருந்த பெண் செயலாளரிடம் பேசிய அவர், "மீதமுள்ள அளவை யார் வாங்கினார்கள்?" என்று கேட்டார். அதற்கு இந்த பெண், "பல ஆண்டுகள் ஆகிவிட்டன. வாங்கியவரைக் கண்டுபிடிப்பது கடினம்" என்று பதிலளித்தார்.

அவர் அந்த பெண்மணியிடம் கெஞ்சினார்: "கிரீஸில் எனக்கு இன்னும் ஒரு நாள் இருக்கிறது. தயவுசெய்து தேடுங்கள், இதோ என் ஹோட்டல் எண்" என்று அந்த பெண்ணிடம் தெரிவித்தார்.

அல்லாஹ் ஒரு வழியைக் காட்டுவான் :

"வாங்கியவரைப் பற்றி நீ ஏன் தெரிந்துகொள்ள விரும்புகிறாய்?" என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டு, தோல்வியுற்ற உணர்வுடன் அவர் வெளியேறினார். ஆனால் பிறகு, "ஒருவேளை அல்லாஹ் ஒரு வழியைக் காட்டுவான்" என்று நினைத்தார்.

அடுத்த நாள், அவரது விமானப் பயணத்திற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, செயலாளர் தொலைபேசியில் அழைத்து, "நிறுவனத்திற்கு வாருங்கள். வாங்கியவரின் முகவரியைக் கண்டுபிடித்துவிட்டோம்" என்றார்.

ஒரு முகவரியை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்று யோசித்துக்கொண்டே அவர் திரும்பிச் சென்றார். அதைப் பார்த்ததும், அவரது இதயம் வேகமாகத் துடித்தது. வாங்கியவர் ஒரு சவூதி நிறுவனம்.

அவர் நேரடியாக சவூதி அரேபியாவிற்குப் பறந்து, விமான நிலையத்திலிருந்து நேராக மார்பிள் கற்களை வாங்கிய நிறுவனத்திற்குச் சென்றார். அவர் நிறுவனத்தின் தலைவரைச் சந்தித்து, "பல ஆண்டுகளுக்கு முன்பு கிரீஸிலிருந்து நீங்கள் வாங்கிய மார்பிள் கற்களை என்ன செய்தீர்கள்?" என்று கேட்டார்.

தலைவர், "எனக்கு நினைவில் இல்லை" என்றார்.

திருப்புமுனை :

வெள்ளை கிரேக்க மார்பிள் கற்களைப் பற்றிக் கேட்க அவர் கிடங்குகளுக்குத் தொலைபேசி செய்தார். "முழு அளவும் இன்னும் கிடங்குகளில் அப்படியே, பயன்படுத்தப்படாமல் இருக்கிறது" என்று பதில் வந்தது.

டாக்டர் முகமது கமல் இஸ்மாயில் இப்படி கூறுகிறார்: "அந்த பதிலை கேட்டதும் நான் ஒரு குழந்தையைப் போல அழுதேன்."

நிறுவனத்தின் உரிமையாளர், "ஏன் அழுகிறீர்கள்?" என்று கேட்டார்.

டாக்டர் இஸ்மாயில் அவரிடம் முழு கதையையும் கூறி, மேஜையின் மீது ஒரு வெற்று காசோலையை வைத்து, "உங்களுக்கு வேண்டிய தொகையை எழுதுங்கள்" என்றார்.

அந்த உரிமையாளர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறினார்: "இந்த சலவைக்கல் நபியின் மஸ்ஜிதுக்காக என்பதை நான் அறிந்தபோது, ​​ஒரு திர்ஹம் கூட வாங்க மாட்டேன் என்று நான் சபதம் செய்தேன். இந்த சலவைக்கல் அனைத்தும் அல்லாஹ்வின் பொருட்டே. நான் அதை வாங்கிய பிறகு, இந்தத் திட்டத்திற்காக அது இங்கே இருக்க வேண்டும் என்பதற்காகவே, அல்லாஹ் அந்த சலவைக்கல்லை கிடங்கில் நான் மறந்துவிடும்படி செய்தான்." என்றார் அந்த அரபியர்.

அந்த மலையை உருவாக்கி அதைப் பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். பொறியாளர் டாக்டர் முஹம்மது கமல் இஸ்மாயில் மீது அல்லாஹ் கருணை காட்டுவானாக. மேலும் அவருக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பதவியை வழங்குவானாக.

உலகின் இரண்டு மிகப்பெரிய புனித மஸ்ஜித்துகளின் குளிர்ச்சிக்குப் பின்னால் உள்ள இந்த சுவையான கதையை அறியும்போது, உண்மையில் மனதில் ஒருவித இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஒடுகிறது. அல்லாஹ் நினைத்துவிட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது என்பது எவ்வளவு பெரிய அனுபவ உண்மை என்பதை இந்த குளிர்ச்சிக்குப் பின்னால் உள்ள கதை மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

கடந்த 2024 ஆண்டு ஜுலை மாதத்தில் புனித உம்ரா பயணம் மேற்கொள்ள மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்குச் சென்றபோது இரண்டு மஸ்ஜித்துகளிலும் இருந்த இந்த குளிர்ச்சியை நேரில் உணர்ந்து அனுபவித்து ஆச்சரியம் அடைந்தேன். அந்த அனுபவத்தை இப்போது நினைக்கும்போது உண்மையில் மனம் ஆனந்தம் கொள்கிறது. ஏக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறது.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்