ஆஸ்திரேலியாவில் தீவிரவாத
தாக்குதலை
தடுத்த
அகமது
அல்
அகமது....!
வீர தீர செயலுக்காக அமெரிக்க
அதிபர் டிரம்ப் உள்ளிட்டோர் பாராட்டு.....!!
சிட்னி,டிச.15- ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கழமை (14.12.2025) அன்று இரண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். இதில் தீவிரவாதி ஒருவரை தாக்குதல் நடந்த போது அங்கிருந்த அகமது அல் அகமது என்ற முஸ்லிம் நபர் தடுத்து ஏராளமானவர்களின் உயிர்களை காப்பாற்றியுள்ளார். அவரது வீர தீர செயலுக்காக இப்போது உலக அளவில் பேசப்படுகிறார்.
உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தீவிரவாக தாக்குதலின்போது, துப்பாக்கியுடன் இருந்த தீவிரவாதியை லாவகமாக பிடித்து, அவரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து, அவரை தரையில் தள்ளினார் அகமது அல் அகமது. அவரின் இந்த செயல் சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியாகி, கவனம் பெற்றுள்ளது. இருப்பினும் மற்றொரு தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டதில் அவருக்கு கை பகுதியில் காயம் ஏற்பட்டது. தற்போது அவர் மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.
யார் இந்த
அகமது
அல்
அகமது?
43 வயதான அகமது அல் அகமது, சிட்னியில் பழக்கடை வைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அன்று தாக்குதல் நடந்த போது சம்பவ இடத்தில் அவர் இருந்தார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு இடையே அகமது மறைந்து கொண்டார். தொடர்ந்து தீவிரவாதி ஒருவரை தடுத்து, அவரிடம் இருந்து துப்பாக்கியை பறித்தார். இதன் பின்னர் மற்றொரு தீவிரவாதி நடத்திய தாக்குதலில் அகமது அல் அகமது காயமடைந்தார். அவருக்கு கை பகுதியில் துப்பாக்கி தோட்டா பட்டதில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். "அவர் ஒரு ரியல் ஹீரோ அது நூறு சதவீதம் உறுதி. அவர் மருத்துவமனையில்தான் உள்ளார். அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள வார்டில் என்ன நடக்கிறது என எங்களுக்கு தெரியவில்லை. அவர் நலமுடன் திரும்புவார் என நாங்கள் நம்புகிறோம்" என அகமது அல் அகமதுவின் உறவினர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்ப் பாராட்டு
:
ஆஸ்திரேலியாவில்
பலரின் உயிரை காப்பாற்றிய அகமது அல்
அகமதுவிற்கு பாராட்டுகள் குவிந்து
வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் "அவர் ஒரு மிகவும் தைரியமான நபர்" என அகமதுவை அமெரிக்க
அதிபர் டொனல்டு ட்ரம்ப் பாராட்டி
உள்ளார். அவருக்கு உதவும் நோக்கில் இணையவழியில்
நிதி திரட்டும் முயற்சியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சத்து 32 ஆயிரம்டாலர் நிதி இதுவரையில் திரட்டப்பட்டுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.
=========================


No comments:
Post a Comment