Saturday, December 21, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (24)

" மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....! "

நாள் : 24



மதுவுக்கு எதிராக பல பத்திரிகைகளில் செய்திகள், கவிதைகள், கட்டுரைகள் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால், மதுவை கட்டுப்படுத்த முடிகிறதா என்ற கேள்விக்கு விடை இல்லை என்றே வருகிறது..

இஸ்லாமிய இதழ்களில் மக்களின் இதயங்களில் இடம் பெற்றிருக்கும் இதழ் சமரசம்...

இஸ்லாமிய நிறுவனம் சார்பில் மாதம் இருமுறை வெளியாகும் சமரசம் இதழிலில், மதுவுக்கு எதிராக அவ்வவ்போது கட்டுரைகள், கவிதைகள், பேட்டிகள் வெளியாகி வருகின்றன....


இதேபோன்று, சமரசம் இதழில் டிசம்பர் 16-31 தேதியிட்ட இதழில்  "நான்தான் டாஸ்மாக்.....!"  என்ற தலைப்பில் கவிஞர் ருக்னுத்தீன் எழுதிய கவிதை இடம் பெற்றுள்ளது.

டாஸ்மாக் குறித்தும், மதுவால் எற்படும் பாதிப்புகள் குறித்தும், கவிஞர் ருக்னுத்தீன் வேதனையுடன் வரைந்த அருமையான வரிகள் இதோ உங்கள் பார்வைக்கு....

" நான்தான் டாஸ்மாக்....."

தினத்தோறும் அலைமோதும் கூட்டம்
என்னால் நம்ப முடியவில்லை...

எனக்கு இவ்வளவு வரவேற்பா
என்னுள் மகிழ்ச்சி தாளவில்லை

என்னிடம் வயது வித்தியாசம் பாராமல்
வருகிறார்கள்
என்னெவொரு தராதரம்....

நான் சாதி மதம் பாராமல் தருகிறேன்
இதுதான் தேச ஒற்றுமை....

நான் எத்தனை குடும்பங்களைச்
சீரழிக்கின்றேன்
என்னை என்ன செய்ய முடிந்தது....

நான் பல பெண்களை
விதவையாக்குகிறேன்
ஆண்களை ஊனமாக்கிறேன்....
உங்களால் என்ன செய்ய முடிந்தது....

நான் கற்றவர்களைக்
களங்கப்படுத்துகிறேன்
கல்லாதவர்களைக்
காட்டுமிராண்டியாக்குகிறேன்
உங்களால் என்னைக் கட்டுப்படுத்த
முடிந்ததா....

பல சாலை விபத்துக்களுக்கும் நான்தான்
காரணம்
பல கற்பழிப்புகளுக்கும் நான்தான்
கருவி


இருந்தும் என்மீது வழக்கு இல்லை....
பல தற்கொலைகளுக்கு நான்தான் ஊக்க மருந்து
என்னால் பல பொருளாதார இழப்பு

மாணவர்களை மதிமயக்குகிறேன்
இளைஞர்களை இழிவுக்குள்ளாக்குவேன்
இளைஞிகளையும் என் பசிக்கு இரையாக்குகிறேன்...

சினிமாதான் என் விளம்பரம்
நடிகர்கள்தான் என்
விளம்பரத் தூதர்கள்...

மகிழ்ச்சியிலும் துக்கத்திலும்
என்னைத் துணைக்கு 
அழைக்கிறார்கள்...
நான் அவர்களை அழிப்பவன்
என்று தெரியாமலேயே....


என் ஆக்டோபஸ் வலையில்
எல்லோரையும் வீழ்த்துகிறேன்...
ஏன் தெரியுமா...?
என்னை வழிநடத்துவது அரசாங்கம்தான்
எனக்கு எதைப் பற்றியும் கவலையுமில்லை,
பயமுமில்லை....

ஆனால்,
நான் ஒரே ஒரு விஷயத்திற்குத்தான்
அஞ்சுகிறேன்..
அது
இஸ்லாம்...

இப்படிக்கு,
டாஸ்மாக்....


அருமையான வார்த்தைகளை வரைந்த கவிஞர் ருக்குத்தீனுக்கு பாராட்டுகள்...

நன்றி: சமரசம் இதழ்

தொகுப்பு...எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

=================================

No comments: