Saturday, December 28, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்..! (35)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்......!"

நாள்:  35



தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் தொடங்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது..!

திருமங்கலம் அருகே உள்ள திருமால் புதுப்பட்டியை சேர்ந்தவர் விஜிகுமார்.

இவர் மதுரை சட்டக்கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வருகிறார்.

தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என வலியுறுத்தி விஜிகுமார் கடந்த 27.12.2013 அன்று திருமங்கலம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தார்.

அங்கு தாலுகா அலுவலக வாயிலில் கோரிக்கை அட்டையுடன் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அமர்ந்தார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவருடன் நின்ற மாணவர்கள் ‘சமுதாய மாற்றத்துக்காக இளைஞர்கள், மதுரை’ என்ற நோட்டீசை விநியோகித்தனர்.

அதில் “தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடக்கோரி தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருக்கும் சட்டக்கல்லூரி மாணவர் விஜிகுமாருக்கு ஆதரவு தருமாறு அழைக்கிறோம்” என்று கூறப்பட்டு இருந்தது.

தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதற்கிடையில் மாணவர் விஜிகுமார் 28.12.2013 அன்று காலை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

நுழைவு வாயில் முன்பு உண்ணாவிரதம் போராட்டம் தொடங்கிய அவர், துண்டு பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடம் ஆதரவும் திரட்டினார்.

அப்போது பேசிய அவர், மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி பலமுறை உண்ணாவிரதம் இருந்துள்ளேன்.  திருமங்கலத்தில் உண்ணாவிரதம் தொடங்கினேன். அங்கு ஒரு கட்சி கூட்டம் நடப்பதால் இடையூறு ஏற்படும் என முடிக்க சொன்னார்கள்.

அதனால் இங்கு வந்து உண்ணாவிரதம் தொடங்கி உள்ளேன்.

வரும் ஜனவரி 6–ம் தேதி முதல் மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள், இதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க உள்ளனர்.

இதில் திருச்சி, செங்கல்பட்டு, கோவை கல்லூரி மாணவர்களும் பங்கேற்க உள்ளனர். மதுக்கடைகள் மூடாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாணவர் உண்ணாவிரதம் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் விரைந்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவர் விஜிகுமார், உண்ணாவிரதத்தை கைவிட மறுத்ததால் போலீசார் அவரை கைது செய்தனர்.

மதுவுக்கு எதிராக களம் இறங்கிய சட்டக் கல்லூரி மாணவர் விஜிகுமாருக்கு எனது பாராட்டு....

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: