Sunday, December 1, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்..! (6)

" மதுவுக்கு எதிராக ஓர் ( பிரச்சாரம்) போர்.....! " நாள்: 6



மதுப்பிரியரை விழுங்கிய மலைப்பாம்பு....!

என்ன அதிர்ச்சியாக  இருக்கிறதா....!

இது, உண்மையாக நடந்த சம்பவம் தோழர்களே...

மதுப்பழக்கத்திற்கு ஆளாகி வாழ்க்கையை கெடுத்துக் கொண்டிருக்கும் சமூகம், பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது..

குறிப்பாக, உடல் உழைப்பில் ஈடுபடும் கூலித் தொழிலாளிகள், தங்கள் பணத்தை மதுவிற்காக செலவழித்து குடும்பத்தில் வறுமையை தானாக தேடிக் கொள்கின்றனர்..


அது மட்டுமல்ல, நன்றாக குடித்து விட்டு வீதிகளில், சாலைகளில், மயங்கி கிடக்கின்றனர்.

இதுபோன்ற காட்சிகள் நாள்தோறும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்...

அப்போது நம்மில் பலர் வேதனை அடைகிறோம்.....


தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் மகா குடிகாரர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்..

அளவுக்கு மீறி மதுவை அருந்திவிட்டு, தங்களையே இழந்துவிட்டு, சுய நினைவு இன்றி சாலைகளில் பல மணி நேரம் மயங்கி கிடக்கிறார்கள் சில மதுப்பிரியர்கள்...

இப்படிதான்,


கேரளாவில் உள்ள அட்டப்பாடியில் குடித்துவிட்டுப் போதையில் மயங்கி கிடந்தார்  ஒரு மதுப்பிரியர்..

அப்போது அருகில் இருந்த ஒரு மலைப்பாம்பு அந்த மதுப்பிரியரை விழுங்கி விட்டது.

அனேகமாக அவருக்கு உணர்வு வந்திருக்கும் நேரத்தில் அவர் முழுமையாக மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்திருப்பார் போலும்..



ஊடகங்களில் புகைப்படத்துடன் வந்த செய்தியை பார்த்தபோது, நான் அதிர்ச்சி அடைந்தேன்...

அதை உங்கள் பார்வைக்கும் வைத்துவிட்டேன்...


மதுவால், எப்படியெல்லாம் தீமைகள், கொடுமைகள், பிரச்சினைகள், ஏற்படுகின்றன என்பதற்கு இதுபோன்ற செய்திகள் சாட்சிகளாக இருந்து கொண்டிருக்கின்றன.

இதை பார்த்தாவது, ஆபத்தில் இருந்து விலக மதுப்பிரியர்கள் முன்வர வேண்டும்...

மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

=======================

No comments: