Thursday, December 26, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்.....! (30)

"மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்.....!"   நாள்: 30 



மதுவிலக்கு போராட்டத்துக்காக மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் சென்னை வந்த சட்ட மாணவி....!

மதுரை சட்டக்கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருபவர் நந்தினி.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, மாணவி நந்தினி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மதுரையில் உண்ணாவிரதம் இருந்த அவர், பின்னர் அதை கைவிட்டார்.


இந்த நிலையில், நந்தினி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார்.

அதன்படி, கடந்த டிசம்பர் 23-ந்தேதி காலையில் மதுரையில் இருந்து தனது தந்தை ஆனந்தனுடன் அவர் மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு புறப்பட்டார்.

இருவரும் மாலை 4 மணிக்கு திருச்சி வந்தடைந்தனர். அங்கு அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பின்னர், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து நந்தினியிடமும், அவருடைய தந்தையிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.


ஆனால்,சென்னை செல்லும் முடிவில் அவர்கள் உறுதியாக இருந்ததால் 2 பேரையும் போலீசார் விடுவித்தனர்.

பிறகு, நந்தினி தன் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு புறப்பட்டார்.

டிசம்பர் 24ஆம் தேதி  இரவு 2 பேரும் குரோம்பேட்டையை அடைந்தனர்.

அங்கு காத்திருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.

சாப்பிடாமல் பயணம் செய்ததால் சோர்வுடன் காணப்பட்ட அவர்களை போலீசார் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு 2 பேருக்கும் டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். பிறகு, மாணவி நந்தினியிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சென்னை மாநகருக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என்று அவர்களிடம் போலீசார் கூறினர்.

இதையடுத்து, நந்தினி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.


நந்தினி மனம்மாறி மீண்டும் சென்னைக்குள் நுழைந்துவிட கூடாது என்பதற்காக போலீசாரும் சிறிது தூரம் உடன் சென்றனர்.

ஆக, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி போராட்டம் நடத்தும் சட்டக் கல்லூரி மாணவி நந்தினிக்கு எனது பாராட்டுக்கள்.

நல்ல நோக்கத்திற்காக, பெண்களின் நலனுக்காக, இளைஞர்களின் அமைதியான வாழ்விற்காக, சமூக அக்கறையோடு களத்தில் இறங்கியுள்ள நந்தினியின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: