Saturday, December 28, 2013

மதுவுக்கு எதிராக ஓர் போர்......! (34)

" மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்......!"

நாள்:  34


மதுபோதையில் ரகளை செய்த டிக்கெட் பரிசோதகர்......!

பயணி பரபரப்பு புகார்.....!!

கோவை-சென்னை ‘சதாப்தி எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் மதுபோதையில் ரகளை செய்ததாக டிக்கெட் பரிசோதகர் மீது ரெயில்வே போலீசில் பயணி ஒருவர் புகார் தெரிவித்தார்.

சென்னை சென்டிரல் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் சென்னை செனாய் நகரைச் சேர்ந்த பத்மநாபன் என்பவர் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில்,  கோவை-சென்னை சென்டிரல் ‘சதாப்தி எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் ‘சி1’ பெட்டியில் கடந்த 26-ந்தேதி பயணித்தேன். அப்போது பணியிலிருந்த ராதாகிருஷ்ணன் என்ற டிக்கெட் பரிசோதகர் மதுபோதையில் பெண் பயணிகளுடன் மிகவும் மோசமாக கண்ணியக் குறைவுடன் நடந்துகொண்டார்.


மேலும் ரெயிலில் இருந்த சமையல்காரர்கள் மீது பிளாஸ்டிக் குப்பை தொட்டியை வீசி எறிந்தும் ரகளையில் ஈடுபட்டார்.

இதுதொடர்பாக நான் ரெயில்வே பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தேன்.


அவர்கள் சென்டிரல் ரெயில்நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்குமாறு தெரிவித்தனர்.

எனவே மதுபோதையில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி ரகளையில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் ராதாகிருஷ்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு பற்றி சென்டிரல் ரெயில்வே போலீசார்  கூறும்போது, “கோவை-சென்னை சென்டிரல் ‘சதாப்தி எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் கடந்த 26-ந்தேதி பணியிலிருந்த டிக்கெட் பரிசோதகர் மதுபோதையில் ரகளை செய்ததாக பயணி ஒருவர் புகார் மனு ஒன்றை எங்களுக்கு அனுப்பியுள்ளார்.


இந்த புகார் மனுவினை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சென்டிரல் ரெயில்நிலைய மேலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரெயில்வே மேலாளர் துறைரீதியான விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுப்பார்” என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


ஆக, மது அருந்திவிட்டு பணிபுரியும் ஊழியர்களால் ரயில் பயணிகள் தேவையில்லாமல் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.

எல்லாம் மதுவால் வரும் கேடுதான்...

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
======================

No comments: