Friday, November 13, 2015

தீபாவளி விருந்து....!

தீபாவளி விருந்து....!


தீப ஒளி திருநாளின் போது, சென்னையில் உள்ள நண்பர்கள் சிலர் விருந்துக்கு அழைத்தால் என்ன செய்வது என்ற குழப்பம் எனக்கு இருந்தது.

அலுவலகத்தில் விடுமுறை இல்லை.

பணியில் இருக்க வேண்டிய கட்டாயம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கண்டிப்பாக தீப ஒளி திருநாளை எங்களுடன் சேர்ந்து கொண்டாட நீங்களும் வர வேண்டும்.

வீட்டிற்கு வந்து எங்களுடன் இணைந்து நல்ல உணவு சாப்பிட வேண்டும் என கூறி சக நண்பர்கள் அழைத்தால், அதை எப்படி தவிர்க்க முடியும்

என்ற இக்கட்டமான சூழ்நிலையில் நான் தவித்துக் கொண்டிருந்தேன்.

விருந்துக்கு அழைக்கும் நண்பர்களுக்கு என்ன பதில் சொல்வது என மனதில் யோசித்துக் கொண்டே இருந்தேன்.

இதனால் குழப்பத்தில் மூழ்கி இருந்தேன்.

நல் வாய்ப்பாக அதற்கு நண்பர்கள் யாரும் இடம் கொடுக்கவில்லை.

என்னுடைய நிலைமையை புரிந்துக் கொண்டார்களோ என்னவோ தெரியவில்லை, ஒருத்தர் கூட தீபாவளி விருந்துக்கு வீட்டுக்கு வாருங்கள் என்று அழைக்கவே இல்லை.

சென்னையை விட்டு வெளியூர்களில் இருக்கும் சில நண்பர்கள் மட்டும் அவசியம் வீட்டுக்கு வாருங்கள் என அழைத்தார்கள்.

வேலூரில் இருந்தும் ஒரு நண்பர் அழைப்பு விடுத்தார்.

ஆனால், சென்னையை விட்டு வெளியூர்களுக்கு செல்ல முடியாத சூழல் எனக்கு.

சென்னையில் இருக்கும் நண்பர்கள் யாரும் தீபாவளி விருந்துக்கு அழைக்காததால், எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் ஏற்பட்டது உண்மைதான்.

ஆனால், அவர்கள் விருந்துக்கு அழைத்து, அந்த அழைப்பை தட்டிக் கழிக்க வேண்டிய சூழல் எனக்கு ஏற்படவில்லை.

அதன்மூலம் நண்பர்களின் மனதை வேதனை அடைய செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உருவாகவில்லை..

அதற்கான அவசியமும் ஏற்படவில்லை.

எனவே, தீபாவளி விருந்துக்கு யாரும் அழைக்காதது ஒரு விதத்தில் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

அடுத்த தீபாவளிக்காவது, சென்னை நண்பர்கள் யாராவது விருந்துக்கு அழைக்கிறார்களா இல்லையா என பார்க்கலாம்,

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: