Sunday, November 8, 2015

பிடிவாதம் பிடித்தால் டமார்தான்......!

பிடிவாதம் பிடித்தால் டமார்தான்......!


தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை.

அதிமுகவை வீழ்த்த கூட்டணி ஒன்றும் தேவையில்லை.

அதிமுக ஒன்றும் வலிமையான கட்சி இல்லை.

கூட்டணி இல்லாமலேயே திமுகவால் வெற்றி பெற முடியும்.

இப்படி, திமுக தலைமை தற்போது சொல்லிக் கொண்டிருக்கிறது.

ஆனால் உண்மை நிலை என்ன.

தமிழகத்தில் கூட்டணி அமைக்காமல் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்றால், நிச்சயம் வெற்றி கிடைக்க முடியாது என்பதே தற்போதைய நிதர்சன நிலை.

இதையெல்லாமல் மறந்துவிட்டு கூட்டணி இல்லாமலேயே நாங்கள் வெற்றி பெறுவோம் என திமுக கூறி வருகிறது.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ் லாலு கூட்டணி வெற்றி பெற்று இருக்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டதுதான்.

இதன் காரணமாகதான் பாஜகவை அவர்களால் வீழ்த்த முடிந்தது.

மக்களும் மகா கூட்டணிக்கு ஆதரவு அளித்து வெற்றி வாய்ப்பை வாரி வழங்கினார்கள்.

இதை திமுக கவனத்தில் கொள்ள வேண்டும்.

பீகார் தேர்தல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஒரு நல்ல பாடத்தை சொல்லி தந்துள்ளது.

அது, வலிமையான அதிமுகவை வீழ்த்த வேண்டுமானால், திமுகவும் வலிமையான கூட்டணி அமைக்க வேண்டும்.

அதை விடுத்து,

கூட்டணி தேவையில்லை.

கூட்டணி ஆட்சி கிடையாது.

நாங்கள் தனித்தே நின்று வெற்றி பெறுவோம்.

என பிடிவாதமாக சொல்லிக் கொண்டு, அப்படி தேர்தலில் களம் கண்டால், ஒன்று மட்டும் நிச்சயம்.

அது
திமுகவிற்கு மிகப் பெரிய வீழ்ச்சியை கொண்டு வந்து தரும்.

பிடிவாதம் பிடித்தால் டமார்தான்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: