Friday, November 20, 2015

சந்தேகம் வேண்டாமே....!

சந்தேகம் வேண்டாமே....!


சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்பாக சென்னை புறநகர் பகுதி மக்கள் இன்னும் துயரங்களை சுமந்துகொண்டு இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆளும் அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமகா, மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம.ம.க., ஜமாஅத் யே இஸ்லாமி ஹிந்த், மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள், சமூக அக்கறையுடன் மக்களின் துயரங்களை துடைக்க நேரில் களம் இறங்கி முடிந்த அளவிற்கு நல்ல பணிகளை செய்து வருகின்றன.


மேற்குறிப்பிட்ட கட்சிகளின் தலைவர்கள் அவர்களின் தொண்டர்கள் ஆற்றி வரும் களப்பணிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிச்சயமாக ஓரளவுக்கு ஆறுதலை தந்துக் கொண்டிருக்கிறது.

இதேபோன்று தமிழகத்தில் உள்ள சிறிய சிறிய கட்சிகள் கூட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றன.

இப்படிப்பட்ட நிலையில் இவையெல்லாம் வெறும் நாடகம்.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் விழுந்து அடித்துக்கொண்டு வெள்ளப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக சிலர் கிண்டல் செய்கின்றனர்.

எல்லாமே அரசியல் ஆதாயத்திற்காகதான் என சிலர் விமர்சனம் செய்கின்றனர்.


ஆபத்தான நேரத்தில் ஒருவர் செய்யும் உதவியை நாம் சந்தேக கண்ணோடு நோக்குவது நியாயமா...?

எல்லாவற்றையும் சந்தேகத்தோடு பார்ப்பது, எடுத்துக் கொள்வது சரியல்ல என்பதுதான் எமது கருத்து.

என்ன சரிதானா...!

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: