Sunday, November 8, 2015

மோடிக்கு மரண அடி....!

மோடிக்கு மரண அடி....!


பீகாரில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி பிரதமர் நரேந்திர மோடியை முன்னிலை படுத்தித்தான் பிரச்சாரம் செய்தது.


பீகார் முழுவதும் சுற்றி சுற்றி சென்று மோடி பிரச்சாரம் செய்தார்.

36 கூட்டங்களில் கலந்து கொண்டு பீகாரில் காட்டாச்சி நடப்பதாக குற்றம் சாட்டினார்.

நிதீஷ் லாலு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.


ஆனால் தம்முடைய ஆட்சியின் போக்கை மட்டும் மறந்து விட்டு தன்னால்தான் பாஜகவுக்கு வெற்றி என கருதினார்.

ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவாத அமைப்புகளின் நடவடிக்கைகளை பிரதமர் கண்டுகொள்ளவில்லை.

நாடு முழுவதும் மதசார்பின்மைக்கும் கருத்து சுதந்திரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்ட போது மவுனம் கடைப்பிடித்து வேடிக்கை பார்த்தார் மோடி.'

தாம் எது செய்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்பினார்.

இன்று பீகாரில் மோடிக்கு மரண அடி கொடுத்து மக்கள் பாடம் கற்பித்து இருக்கிறார்கள்.

இனி இது நாடு முழுவதும் தொடரும்.

பிரதமர் மோடி தமது ஆட்சியின் செயல்பாடுகளில் மாற்றத்தை கொண்டு வராவிட்டால் மக்கள் தொடர்ந்து பாடம் கற்பித்துக் கொண்டே இருப்பார்கள்.

ஏனென்றால் நாட்டில் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்.

அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் சமய சமூக நல்லிணக்கத்துடன் வாழ விரும்புகிறார்கள்.

இதுதான் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தரும் செய்தி.


பீகாரில் மகத்தான வெற்றியை ஈட்டிய நிதீஷ் லாலு தலைமையிலான மகா கூட்டணிக்கு எமது வாழ்த்துக்கள்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: