Sunday, November 8, 2015

மீண்டும் லாலு...!

மீண்டும் லாலு...!


ஊழல் வழக்கில் சிறை.

எம்.பி. பதவி பறிப்பு.

திடீர் உடல்நல குறைவு.

மும்பை மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை.

நீண்ட ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுரை.

இப்படிப்பட்ட சூழலில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ்வின் அரசியல் வாழ்க்கை முடிந்தது என பலரும் நினைத்தார்கள்.

குறிப்பாக பாஜக மிகவும் சந்தோஷமாக இருந்ததே என கூறலாம்.

பீகாரில் இனி எமது ஆட்டம் தான் என பாஜக கற்பனையில் மிதந்தது.

ஆனால் லாலுவா சும்மாவா என்று மீண்டும் வெகுண்டு எழுந்த லாலு தாம் பீகாரில் மட்டுமல்ல தேசிய அரசியலில் கூட மிகப் பெரிய சக்தி என தமது அரசியல் நடவடிக்கைகள் மூலம் மீண்டும் நிருபித்துள்ளார்.

தாம் பாஜகவிற்கு மிகப் பெரிய சவால் என்பதை பீகார் தேர்தல் வெற்றிகளின் மூலம் நாட்டிற்கு ஒரு நல்ல செய்தியை சொல்லி இருக்கிறார்.

இந்திய அரசியலில் மிகப் ஆளுமை லாலு.

இதை அவர் பலமுறை நிருபித்து இருக்கிறார்.

தற்போது மீண்டும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மகா கூட்டணி அமைத்தது மட்டுமல்லாமல் அந்த கூட்டணி வெற்றி பெற அவர் செய்த சமரசம் உழைப்பு ஆகியவற்றால் மகத்தான வெற்றியை ஈட்டி இந்திய அரசியலில் புதிய வரலாறு புரிந்துள்ளார்.

தமது வெற்றியின் மூலம் மாநில கட்சிகளுக்கு சில செய்திகளையும் லாலு மறைமுகமாக சொல்லி இருக்கிறார்.

மிகப்பெரிய சக்தியாக எழுந்துள்ள லாலு இனி இந்திய அரசியலில் மீண்டும் ஒரு கலக்கு கலக்கு போவது உறுதி.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ் 
பத்திரிகையாளர்.

No comments: