Thursday, November 26, 2015

மீண்டும் அடி....!

மோடிக்கு மீண்டும் அடி....!


பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி.

உத்தரப் பிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தலில் கடும் பின்னடைவு.

இதைத் தொடர்ந்து மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அண்மையில் நடந்த இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் வலிமையான கட்சியாகவும் ஆளும் கட்சியாகவும் இருந்து வரும் பாஜகவிற்கு இந்த தோல்வி ஏற்பட்டு இருக்கிறது.

அங்குள்ள ரட்லம் மக்களவை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் கந்திலால் பூரியா வெற்றி பெற்றுள்ளார்.

இதேபோன்று, தெலுங்கானா மாநிலம் வாராங்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் பாஜக தோல்வி அடைந்துள்ளது.

இந்த தொகுதியில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி வேட்பாளர் தயாகர் வெற்றி பெற்றுள்ளார்.

ஆக, பிரதமர் மோடியின் செல்வாக்கு நாடு முழுவதும் மிக வேகமாக சரிந்து வருவது இதன்மூலம் உறுதியாகிறது.

உலகம் சுற்றும் வாலிபனாக சுற்றிவரும் பிரதமர் மோடி, இனி உள்நாட்டில் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தினால் நல்லது.

இல்லையென்றால், மக்கள் தொடர்ந்து பாடம் புகுத்திக் கொண்டே இருப்பார்கள்.

இதுதான் தற்போது நடந்து முடிந்த தேர்தல்கள் தரும் படிப்பினை.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: