Wednesday, November 18, 2015

பேமிலி டிராமா....!

பக்கா பேமிலி டிராமா....!


இந்தி நடிகர் சல்மான் கான் நடிப்பில் வந்திருக்கும் பிரேம் ரதன் தான் பாயோ என்ற இந்தி திரைப்படம்தான், தமிழில் மெய் மறந்தேன் பாராயோ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பட்டுள்ளது.

ராஜவம்ச குடும்பத்தில் நடக்கும் அண்ணன், தம்பி, தங்கை பிரச்சினைகளை மையமாக வைத்து இந்த படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது.

அத்துடன் நாடக நடிகராக வரும் சல்மான் கான், ராஜவம்ச இளவரசர் சல்மான் கானுக்கு ஏற்படும் பிரச்சினையை எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதுதான் கதையின் முக்கிய அம்சம்.

ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக படம் நகருகிறது.

படத்தில் முகம் சுளிக்கும் காட்சிகள் இல்லை.

காதல் காட்சிகள் இல்லை.

மது அருந்தும் காட்சிகள் இல்லை.

புகைப்பிடிக்கும் காட்சிகள் இல்லை.

ஆபாச நடனங்கள் இல்லை.

எனவே, குடும்பத்தில் உள்ள அனைவரும் இணைந்து உட்கார்ந்து படத்தை தைரியமாக பார்க்கலாம்.

குடும்ப உறவுகள் சீர்குலையாமல் இருக்க வேண்டும்.

அதன்மூலம்தான், குடும்பத்தில் அன்பு தழைக்கும்.

மகிழ்ச்சி பிறக்கும்.

இதுதான், இந்த படம் சொல்லும் படிப்பினை.

இரட்டை வேடங்களில் வரும் சல்மான் கான் தமது வழக்கமான பாணியில் நன்றாகவே கலக்கி நடித்துள்ளார்.

நடிகை சோனம் கபூரும் நடிப்பில் குறைவு எதையும் வைக்கவில்லை.

இயக்குநர் சூரஜ் பர்ஜாத்யா, இந்திய பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இயக்கி இருப்பது பாராட்டத்தக்கது.

படத்தில் ஒரே ஒரு குறை உண்டு.

அது, அடிக்கடி நிறைய பாடல்கள் வந்து செல்வதுதான்.

பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தாலும், ஒருவித சலிப்பு ஏற்படுத்தவே செய்கிறது.

மெய் மறந்தேன் பாராயோ திரைப்படம் பக்கா பேமிலி டிராமா என்பதால், நிச்சயம் மெய் மறந்து பார்க்கலாம்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: