Friday, November 13, 2015

திப்பு விழா - கண்டனம்....!

திப்பு சுல்தானின் பிறந்த தினம் கொண்டாட எதிர்ப்பு....!


நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்....!!

முன்னாள் பிரதமர் தேவகௌடா கருத்து....!!!

கர்நாடக மாநிலத்தில் மைசூரு வேங்கை மாவீரன் திப்பு சுல்தான் பிறந்த நாள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

ஆனால் அதற்கு பாஜக, விஸ்வ இந்து பரிஷீத் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பெங்களூருவில் முன்னாள் பிரதமர் தேவகௌடா செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது...

திப்பு சுல்தான் தேச பக்தர், சுதந்திர போராட்ட வீரர் என்பதில் இருவேறு கருத்தில்லை.

நாட்டின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் திப்பு சுல்தான் பாடுப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்தான், கர்நாடக மாநிலத்தில் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவது வேதனை அளிக்கிறது.

கர்நாடக மாநிலம் மடிகேரியில் திப்பு சுல்தான் பிறந்த நாளின் போது இரு தரப்பினருக்கிடையே மோதல் உருவாகியுள்ளது தேவையற்றது.

இதனை அனைவரும் கண்டிக்க வேண்டும்.

திப்பு சுல்தானின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும்.

இவ்வாறு கூறிய தேவகௌடா, திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து வரும் பாஜக, விஸ்வ இந்து பரிஷீத் அமைப்பு ஆகிய இந்து அமைப்புகளுக்கு கண்டனமும் தெரிவித்தார்.

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
பத்திரிகையாளர்.

No comments: